June 02, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-17



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-17

“””””கொலையும் செய்வாள்
   பத்தினி”””””””

கொங்கணர்
மிகப்பெரிய சித்தர்
அவருடைய ஜீவசமாதி
திருப்பதியில் உள்ளது

இத்தகைய சிறப்பு மிக்க
கொங்கணர்
ஒரு நாள்
ஒரு மரத்தடியில்
அமர்ந்து தவம் செய்து
கொண்டிருந்தார்
அப்போது மரத்தின் மேல்
இருந்த கொக்கு ஒன்று
அவர் மேல் எச்சம்
உமிழ்ந்து அவரை
அசுத்தப்படுத்தி விட்டது

இதனால் ஆத்திரமடைந்த
கொங்கணர்
கொக்கை கோபத்துடன்
ஏறிட்டுப் பார்த்தார்
கொக்கு எரிந்து
கீழே விழுந்து
சாம்பலானது
எரிந்து சாம்பலான
கொக்கைப் பார்த்த
கொங்கணர்
மகிழ்ச்சி கொண்டார்

தன்னுடைய தவவலிமையின்
ஆற்றலை நினைத்து
மகிழ்ச்சி கொண்டு
ஊருக்குள் வந்தார்
ஒரு வீட்டின் முன்
வந்து நின்றார்.
எனக்கு பசிக்கிறது
தர்மம் செய்யுங்கள் என்றார்

அந்த வீட்டிலிருந்து
எந்தவிதமான சத்தமும்
வரவில்லை
அது திருவள்ளுவர் வீடு
திருவள்ளுவர் சாப்பிட்டுக்
கொண்டிருக்க
அவர் மனைவி வாசுகி
அவருக்கு உணவு
பரிமாறிக் கொண்டு இருந்தார்.

திருவள்ளுவர் சாப்பிட்டு
முடிக்கும் வரை
வாசுகி எங்கும் செல்லமாட்டார்
யார் கூப்பிட்டாலும்
போக மாட்டார்
திருவள்ளுவர் சாப்பிட்டு
முடிக்கும் வரை
அவர் கூடவே இருந்தார்

நீண்ட நேரம் ஆகியும்
வீட்டிற்குள் ஆட்கள் இருந்தும்
தான் தர்மம் என்று
கேட்டும் யாரும் வரவில்லை
என்பதை நினைத்து
கோபம் கொண்டார்

திருவள்ளுவர்
சாப்பிட்டு முடித்ததும்
வெளியே சாப்பாடு
கொண்டு வந்த
வாசுகியைப் பார்த்து
கொங்கணர்
சாப்பாடு கொண்டு வர
இவ்வளவு நேரமா என்று
கோபத்துடன் பார்த்தார்

நான் என் கணவருக்கு
சாப்பாடு பரிமாறிக்
கொண்டு இருந்தேன்
அவர் சாப்பிட்டு முடித்தவுடன்
சாப்பாடு கொண்டு வந்தேன்
அதனால் நேரம்
ஆகிவிட்டது என்றார்

பெண்ணே சித்தர்களுக்கு
அன்னமிடுவது
முதல் கடமை
அதுவும் நான்
சர்வ சித்தி பெற்றவன்
என்ற விவரம்
உனக்கு தெரியாதா
என்று கோபத்துடன்
பார்த்தார்.

அப்போது வாசுகி
“””””கொக்கென்று நினைத்தாயா
  கொங்கணவா””””””
என்று கேட்டார்

வாசுகியின் வார்த்தையைக்
கேட்டு மிரண்ட கொங்கணர்
தன் பெயர்
கொங்கணர் என்று
எப்படி தெரிந்தது
தான் காட்டில் கொக்கை
எரித்து சாம்பலாக்கியது
இவருக்கு எப்படி தெரிந்து
என்று ஆச்சரியப்பட்டார்

இவர் மிகப்பெரிய
தவ ஆற்றல்
கொண்டவராக இருக்க வேண்டும்
இல்லையென்றால் தான்
காட்டில் யாருக்கும்
தெரியாத இடத்தில் செய்த
விஷயம் இவருக்கு
எப்படி தெரிந்து என்று
ஆச்சரியப்பட்டார்

அப்போது தான் அந்த
பெண் சொன்னார்
ஐயா நான் தான்
திருவள்ளுவரின்
மனைவி வாசுகி
பதிபக்தியே ஒரு
பெண்ணுக்குரிய குணம்
என்பது உமக்கு தெரியாதா

ஒரு பெண் இறைவனை
அடைய வேண்டுமானால்
தவம் செய்ய வேண்டிய
அவசியமில்லை
பூஜைகள் எதுவும் செய்ய
தேவையில்லை
கணவனுக்கு
பணிவிடை செய்வதே
ஒரு பெண்ணுக்கு உரிய
உயரிய தவம் என்றார்

மனைவி கணவனுக்கு
பணிவிடை செய்ய
வேண்டுமானால்
மனைவி மட்டும்
ஒழுக்க நிலையில்
இருந்தால் போதாது
கணவனும்
ஒழுக்க நிலையில்
இருக்க வேண்டும்

ஆன்மீகத்தில் நம்மை
விட உயர்ந்தவன்
யாரும் இல்லை என்று
நினைக்கக்கூடாது
நம்மை விட
ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள்
இந்த உலகத்தில்
சாதாரணமாக நம்முடன்
வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.,


--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////

May 31, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-16


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-16

ஆடி மாதத்தில்
வைரஸ் போன்ற
நோய்க் கிருமிகளால்
சின்னம்மை, தட்டம்மை
போன்ற நோய்களும்
பிற நோய்களும்
அதிக அளவில்
பரவக்கூடிய
வாய்ப்புகள் அதிகம்

ஒவ்வொரு ஆண்டும்
ஆடி மாதத்தில்
நோய்த் தொற்று
ஏற்படுகிறது
என்பதை உணர்ந்த
நம் முன்னோர்கள்
மக்களுக்கு
நோய்த் தொற்று
ஏற்படாமல் இருக்க
ஊர் எல்லையைச்
சுற்றியும்,
வீட்டிலும், வீட்டைச்
சுற்றிலும்
வேப்பிலையைக்
கட்டி வைத்தனர்

அதையும் மீறி
எதிர்பாராத விதமாக
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்தவர்களுக்கு
நோய் ஏற்பட்டு
விட்டால்
நோயைக்
குணப்படுத்துவதற்கும்
அந்நோய்
மற்றவர்களுக்கும்
பரவாமல் தடுப்பதற்கும்
ஊரின்
பொதுவான இடத்தில்
அதாவது
சத்திரத்திலோ அல்லது
திருமண மண்டபத்திலோ
அல்லது
கோயிலிலோ
அல்லது
ஊருக்கு பொதுவான
ஒரு இடத்திலோ வைத்து
மருத்துவ குணம் கொண்ட
நோய் எதிர்ப்பு சக்தி
அதிகம் கொண்ட
உணவுகளான
கேழ்வரகுக் கூழ்
கருவாட்டுக் குழம்பு
முருங்கைக் கீரை
ஆகியவற்றைச் செய்தனர்

கிராமத்தில்
உள்ள அனைவருக்கும்
கேழ்வரகுக் கூழ்
கருவாட்டுக் குழம்பு
முருங்கைக் கீரை
ஆகியவற்றை
சாப்பிடக் கொடுத்து
மக்களைச்
சாப்பிடச் செய்தனர்

ஆடி மாதத்தில்
ஒவ்வொரு வாரமும்
வாரத்திற்கு
ஒரு முறையோ
அல்லது
இரண்டு முறையோ
ஆக மொத்தம்
மொத்தமாக
ஏழு அல்லது
எட்டு நாட்கள்
ஆடி மாதத்தில்
கூழ் உடன்
கருவாட்டுக் குழம்பு
முருங்கைக் கீரை
ஆகியவற்றைத்
தயார் செய்து
கிராமத்தில் உள்ள
அனைத்து
மக்களுக்கும் கொடுத்து
சாப்பிடச் செய்தனர்
நம் முன்னோர்கள்
அதன் மூலம்
நோயிலிருந்து
கிராமத்தையும்
கிராம மக்களையும்
காப்பாற்றினர்

அந்தக் காலங்களில்
ஒவ்வொரு வருடமும்
ஆடி மாதத்தில்
இந்த முறைகள்
மக்களால் தொடர்ந்து
கடைபிடிக்கப்பட்டு வந்தது

இன்றும் இந்த முறை
ஒவ்வொரு வருடமும்
ஆடி மாதத்தில்
அம்மனுக்கு
கூழ் ஊற்றும்
பண்டிகையாக
கொண்டாடப்பட்டு
வருகிறது


நோய்த் தொற்று
ஏற்படாமல் இருக்கவும்
நோய் வந்துவிட்டால்
நோய் பரவாமல்
தடுப்பதற்கும்
நோய் குணமடைவதற்கும்
ஆடி மாதத்தில்
கூழ் ஊற்றும்
பண்டிகையாக
கொண்டாடச் செய்து
அதை ஒவ்வொரு
வருடமும் தவறாமல்
தொடர்ந்து
பின்பற்றும் வகையில்
செய்திருக்கும்
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்


--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////


May 30, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-15


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-15

முருங்கைக் கீரை
அற்புதமான
மருந்துப் பொருளாகும்
முருங்கைக் கீரையை
மருத்துவப் பொக்கிஷம்
என்று சொல்லலாம்

முருங்கைக் கீரையைப்
போல்
அனைத்து
நோய்களையும்
தீர்க்கும் சக்தி
வேறு எந்த
கீரைக்கும் கிடையாது

முருங்கைக் கீரை
உடல் சூட்டைத்
தணிக்கும்
உடல் சூடு அதிகம்
உள்ளவர்கள்
முருங்கைக் கீரை
சாப்பிட்டு வர
உடல் சூடு தணியும்

முருங்கைக் கீரையில்
விட்டமின் ஏ, பி, சி
சத்துக்களும்,
சுண்ணாம்புச் சத்து,
புரதம்,
இரும்பு,
கந்தகம்,
குளோரின்,
தாமிரம்,
கால்சியம்,
மெக்னீசியம்
போன்ற
சத்துக்களும் உள்ளன.

முருங்கைக் கீரையை
உணவில்
சேர்த்துக் கொள்வதால்
உடலுக்கு
நோய் எதிர்ப்பு
சக்தியும்,
உடலுக்கு
வலிமையும்,
உறுதியும்
கிடைக்கிறது

ஒரு நபருக்கு
தினந்தோறும்
வைட்டமின் ஏ
5000 I.U.(Internatiional Unit)
தேவைப்படுகிறது.
ஒரு வேளை
சாப்பிடும்
முருங்கைக் கீரையில்
வைட்டமின் ஏ
3260 I.U.(Internatiional Unit)
கிடைக்கிறது.

மனிதனுக்கு
தேவைப்படும்
20 அமினோ அமிலங்களில்
18 அமினோ அமிலங்கள்
முருங்கைக் கீரையில்
உள்ளது
மனித உடலால்
தயாரிக்கப்பட இயலாத
8 அத்தியாவசிய
அமினோ அமிலங்கள்
இறைச்சியில்
மட்டுமே கிடைக்கும்
அந்த 8 அமினோ
அமிலங்களையும்
கொண்ட
ஒரே சைவ உணவு
முருங்கைக் கீரை

முருங்கைக் கீரையில்
தயிரில் இருப்பதை விட
2 மடங்கு அதிக புரதமும்,
ஆரஞ்சுப் பழத்தில்
உள்ளதைப் போல
7 மடங்கு அதிக
வைட்டமின் சி யும்,
வாழைப்பழத்தில்
உள்ளதை விட
3 மடங்கு அதிக
பொட்டாசியமும்,
கேரட்டில்
உள்ளதைப் போல்
4 மடங்கு அதிக
வைட்டமின் ஏ வும்,
பாலில் உள்ளதைவிட
4 மடங்கு
அதிக கால்சியமும்,
கடல் பாசியை விட
3 மடங்கு அதிக
இரும்புச் சத்தும்,
இருக்கிறது

பழங்காலத்தில்
அரசர்கள்
வீரர்களுக்கு
முருங்கைக் கீரையை
உணவாகக் கொடுத்து
வந்துள்ளனர்
அதனால்
அவர்கள்
உடல்
வலிமையுடனும்
உறுதியுடனும்
போர் புரிந்தனர்
என்று கூறுகின்றனர்
வரலாற்று
ஆய்வாளர்கள்

முருங்கைக் கீரையில்
உள்ள
அதிசயிக்கத் தக்க
மருத்துவ
குணங்களை
கருத்தில் கொண்டு
அதை
சாப்பிடச் சொன்ன
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////


May 29, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-14


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-14

நம் முன்னோர்கள்
மருத்துவத்தில்
இரண்டு வகையான
முறையைக் கையாண்டனர்

ஒன்று  : நோய் அணுகாமல்
         பாதுகாப்பது

இரண்டு : நோய் ஏற்பட்டால்
         சிகிச்சை அளித்து
         நோயைக்
         குணப்படுத்துவது

நாம் அன்றாடம்
உண்ணும் உணவுமுறைகள்
பெரும்பாலும்
நோயைக் குணப்படுத்தக்
கூடியவையாகவும்,
எதிர்பாராத விதமாக
நோய் ஏற்பட்டு விட்டால்
நோயைக் குணப்படுத்தும்
வகையிலும்
இருப்பது தான்
நம் உணவு முறையின்
சிறப்பு

கருவாடு
உடல் உஷ்ணத்தைக்
குறைக்கும்
உடலிலிருந்து
உஷ்ணம் வெளியேற
கருவாட்டைப்
பயன்படுத்தினர்
நம் முன்னோர்கள்

கருவாட்டில்
நோய் எதிர்ப்பு சக்தி
உண்டு

அன்றைய
கால கட்டங்களில்
வெப்பத்தினால்
ஏற்படக்கூடிய
பல்வேறு நோய்களுக்கும்
எதிர்பாராமல் ஏற்படக்கூடிய
பல்வேறு நோய்களுக்கும்
கருவாடே
மருந்தாகப் பயன்படுத்தப்
பட்டது.

இன்று
மருத்துவத் துறையில்
மருந்து கண்டுபிடிக்கப்படாத
பல்வேறு நோய்களுக்கும்
கருவாடே
சிறந்த மருந்தாகப்
பயன்படுத்தப் பட்டு
வருகிறது

தொற்று
நோய்க்கிருமிகளின்
தாக்கத்தால்
நோய் ஏற்படாமல்
இருக்கவும்
நோய் ஏற்பட்டால்
குணமடைச் செய்வதற்கும்
கருவாட்டை
பயன்படுத்தி
கருவாட்டுக் குழம்பு
செய்து சாப்பிட்டனர்
நம் முன்னோர்கள்

அதன் மூலம்
நோயின் பாதிப்பால்
பாதிக்கப்பட்ட
உடலை நோயின்
தாக்கத்திலிருந்து
காப்பாற்றிக் கொண்டனர்

நோயின் தாக்கம்
அதிகமாக இருப்பது
கை,கால்களில்
வீக்கம் இருப்பது
குண் விழுந்து
நடந்து செல்ல
முடியாமல் தவிப்பது
தவழ்ந்து செல்வது
போன்ற
நோய்க் குறியின்
பாதிப்பு ஏற்பட்டால்
அவற்றிலிருந்து
தங்களை
பாதுகாத்துக் கொள்ள
கருவாட்டுக் குழம்பு
செய்து சாப்பிட்டனர்

இன்றும்
மருந்து கண்டுபிடிக்கப்
படாத
இத்தகைய நோய்களுக்கு
கருவாட்டுக்
குழம்பை செய்து
பயன்படுத்தி
தங்களை நோயிலிருந்து
காப்பாற்றிக் கொள்கின்றனர்
மக்கள்

இத்தகைய
காரணங்களினால் தான்
கூழ் உடன்
கருவாட்டுக்
குழம்பையும் சேர்த்து
மக்களை
சாப்பிடச் சொன்னார்கள்

நோய் எதிர்ப்பு
சக்தியை
உண்டாக்குவதற்காகவும்
நோய் அணுகாமல்
தடுப்பதற்காகவும்
நோய் வந்து விட்டால்
நோயைக்
குணப்படுத்துவதற்காகவும்
கருவாட்டுக் குழம்பை
பயன்படுத்திய
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

கூழ் உடன்
கருவாட்டுக் குழம்பு
பயன்படுத்திய
நம் முன்னோர்கள்
முருங்கைக் கீரையையும்
எதற்காக
பயன்படுத்தினர்
என்பதை பார்ப்போம்

----------இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////