August 08, 2018

திருக்குறள்-பதிவு-1


                      திருக்குறள்-பதிவு-1

“””தோன்றின் புகழோடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று””””

உலகம் முழுவதும்
வாழ்க்கையை
வாழ்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : தனக்காக
        வாழ்பவர்கள்
இரண்டு: பிறருக்காக
         வாழ்பவர்கள்

தனக்காக வாழ்பவர்கள்
என்பவர்கள்
தான், தன்னுடைய குடும்பம்,
நண்பர்கள் ஆகியோருக்காக
வாழ்பவர்களைக் குறிக்கும்

பிறருக்காக வாழ்பவர்கள்
என்பவர்கள்
தான், தன்னுடைய குடும்பம்,
நண்பர்கள்
ஆகியோரைத் தவிர்த்து
உலகில் உள்ள
அனைவருக்காகவும்
வாழ்பவர்களைக் குறிக்கும்

பிறருக்காக வாழ்பவர்கள்
பிறரை வாழ வைப்பதற்காக
இச்சமுதாயத்தில் உள்ள
மூன்று நிலைகளில்
உள்ளவர்களுடன் போராட
வேண்டி இருக்கிறது

ஒன்று  : பணம் படைத்தவர்கள்
இரண்டு : பதவி படைத்தவர்கள்
மூன்று  : அதிகாரம் படைத்தவர்கள்

இந்த மூன்று நிலையில்
உள்ளவர்கள் பிறருக்காக
வாழ்பவர்களை அழிப்பதற்காக
மூன்று செயல்களைக்
கையாள்கின்றனர்.

ஒன்று   : அடிமையாக்க
           நினைப்பது
இரண்டு  : மிரட்டுவது
மூன்று   : கொன்று விடுவது

மூன்று நிலைகளில்
உள்ளவர்கள்
மூன்று செயல்களைக்
கொண்டு அழித்தவர்களில்
முக்கியமானவர் சாக்ரடீஸ்.

சாக்ரடிஸ் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகள்
இவைகள் தான்:

ஏழை மக்களும்
தங்களுக்குள்ள
உரிமையைப் பெற்று
வாழ வேண்டும்
என்று கொந்தளிக்கும்
சூரியனாய் எரிகிறாய்;

உன் இன மக்கள்
முன்னேற்றம் அடைய
இரத்தம் சிந்தி
கதிரவனாய் பிரகாசிக்கிறாய்;

தாழ்த்தப்படுத்தப்பட்ட
பிற்படுத்தப்பட்ட
மிகவும் பிற்படுத்தப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
போராடும் ஞாயிறாய்
தகிக்கிறாய்;

அடிமைகளாய் இருப்பவர்களை
அதிலிருந்து விடுவிக்க
முரசொலிக்கிறாய்;

பகுத்தறிவு கருத்துக்களை
மக்களிடம் விதைக்க
மக்களுக்காக தந்தையாகவும்,
அண்ணாவாகவும் பாடுபடுகிறாய்;

பணக்காரர்கள்
பதவியில் இருப்பவர்கள்
அதிகாரம் படைத்தவர்கள்
ஆகியோரை எதிர்த்து
நீ செய்யும் ஒவ்வொரு
செயலும் அரசியலாக
மாறுகிறது

இது தான் நீ செய்த
குற்றம் என்றனர்
இந்த குற்றத்தை
நீ நிறுத்தி விட்டால்
உன்னை உயிரோடு
விடுகிறோம்
இதனை நீ தொடர்ந்து
செய்தால் உனக்கு
மரண தண்டனை
விதிக்கப்படும் என்றனர்
குற்றத்தை சுமத்தியோர்

நான் பிறருக்காக
பாடுபடுவது குற்றம் என்றால்
அந்த குற்றத்தை
பிறருக்காக வாழும்
அந்த குற்றத்தை
எனக்கு இறப்பே ஏற்பட்டாலும்
தொடர்ந்து செய்வேன்
என்று கூறி ஆதிக்க
சக்தி கொண்டோரால்
வழங்கப்பட்ட தண்டனைக்கான
விஷத்தை அருத்தி
மரணத்தை தழுவிய
சாக்ரடீஸ் வாழும் போதும்
போராடியது மட்டுமல்லாமல்
இறந்த பின்பும்
மக்களை போராட வைத்தார்

வாழும் போதும்
வரலாறு படைத்து
இறப்பின் போதும்
வரலாறு படைத்த
அந்த தலைவனை
அமைதி கொள் தலைவா
கோடானுகோடி
உடன்பிறப்புகளின்
இதயத்தில் வாழும் நீ
அமைதியாக
துயில் கொள் தலைவா
என்று இச்சமுதாயம்
பிறருக்காகவே வாழ்ந்து
பிறருக்காகவே உயிர்நீத்த
அந்த தெய்வத்தை கண்டு
கண்ணீர் செலுத்தியது

வாழும் போதும்
சாக்ரடிஸ் பிறருக்காகவே
வாழ்கிறார் என்று
மக்களால் புகழப்பட்டார்
இறந்த பின்பும்
சாக்ரடிஸ் பிறருக்காகவே
வாழ்ந்து உயிர் விட்டார்
என்று மக்களால்
புகழப்பட்டார்.
  
தோன்றிற் புகழோடு
தோன்றுக என்றால்
வாழும் போது
இவர் பிறருக்காகவே
வாழ்கிறார் என்று
மக்களால் புகழக்கூடிய
நிலையும்,
இறந்த பின்பு
இவர் பிறருக்காகவே
வாழ்ந்தவர் என்று
மக்களால் புகழக்கூடிய
நிலையும் உண்டாகக்கூடிய
வாய்ப்பு இருந்தால்
மட்டுமே வாழ வேண்டும்
என்று அர்த்தம்.

அஃதிலார் தோன்றலின்
தோன்றாமை
நன்று என்றால்
பிறருக்காக வாழ
முடியவில்லை என்றால்
வாழ்வதை விட இறப்பதே
மேல் என்பது தான்
இதற்கு அர்த்தம்

அதாவது வாழும் போதும்
பிறருக்காக
வாழ்ந்தவர் இவர்
இறந்த பின்பும்
பிறருக்காகவே
வாழ்ந்தவர் இவர்
இறந்து விட்டார் என்று
சமுதாயம் புகழக்கூடிய
உயர்ந்த நிலையில்
புகழோடு இருக்க முடிந்தால்
வாழ வேண்டும்
அப்படி பிறருக்காக வாழ
முடியவில்லை என்றால்
வாழ்வதை விட இறப்பதே
மேல் என்பது தான்

“””தோன்றின் புகழோடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று”””
என்பதற்கான அர்த்தம்
  
---------இன்னும் வரும்
-----------07-08-2018
///////////////////////////////////////////////////////////





August 05, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-55-சுபம்


         நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-55-சுபம்

உலகில்
மனிதர்கள் கொள்ளும்
உறவு முறைகளை
எல்லாம்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  : இரத்த சம்பந்தமுள்ள
          உறவு முறை

இரண்டு : இரத்த சம்பந்தமில்லாத
          உறவு முறை

இரத்த சம்பந்தமுள்ள
உறவு முறையில்
தந்தை, தாய்,
அண்ணன், தம்பி
அக்கா, தங்கை
சொந்தக் காரர்கள்
ஆகியோர் அடங்குவர்.

இரத்த சம்பந்தமில்லாத
உறவு முறையில்
நண்பர்கள்
மட்டுமே அடங்குவர்,

இரத்த சம்பந்தமில்லாத
உறவு முறையான
நண்பர்கள் கொள்ளும்
நட்பை இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  :  கற்புடைய நட்பு
இரண்டு : கற்பில்லாத நட்பு

எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொள்வது,
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருப்பது,
எத்தகைய விஷயத்தையும்
செய்வதற்குத் தயாராக
இருப்பது
ஆகியவற்றைக்
கொண்டிருக்கும் நட்பு
கற்புடைய நட்பு எனப்படும்.

எதிர்பார்ப்புடன்
நட்பு கொள்வது,
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இல்லாமல் இருப்பது,
எத்தகைய
விஷயத்தையும்
செய்வதற்குத் தயாராக
இல்லாமல் இருப்பது,
ஆகியவற்றைக்
கொண்டிருக்கும் நட்பு
கற்பில்லாத நட்பு
எனப்படும்.

மனிதன்
மனிதனாக இருந்து
மனிதனுக்குரிய
உயர்ந்த குணங்களுடன்
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக
உயர்ந்த கருத்துக்களையும்,
வாழ்வியல் நெறி
முறைகளையும்,
ஒழுக்கங்களையும்,
பழக்க வழங்கங்களையும்,
தங்களுடைய
எண்ணிக்கையில் அடங்காத
பழமொழிகள், பாடல்கள்
இலக்கியங்கள்
ஆகியவற்றின் மூலம்
நம் முன்னோர்கள்
சொல்லிச் சென்றுள்ளனர்.

அதில் முக்கியமான
ஒன்று தான்.
“””கொண்டு வந்தால் தந்தை ;
கொண்டு வந்தாலும்
வராவிட்டாலும் தாய் ;
சீர் கொண்டு
வந்தால் சகோதரி ;
கொலையும் 
செய்வாள் பத்தினி ;
உயிர் காப்பான் தோழன் ;””””
என்பதாகும்

இதில்
இரத்த சம்பந்தமுள்ள
உறவுகளான
தாய், தந்தை,
சகோதரி, மனைவி
ஆகியோரைக் குறிப்பிட்டு
அவர்களுக்குரிய
தன்மைகளைக்
குறிப்பிட்டு இருப்பார்கள்
ஆனால்,
இரத்த சம்பந்தமில்லாத
உறவான நண்பனைக்
குறிப்பிடும் போது
மட்டும் தான்
உயிர் காப்பான் தோழன்
என்று குறிப்பிட்டு
இருப்பார்கள்

உயிரைக் காக்கும்
மிகப்பெரிய பொறுப்பை
இரத்த சம்பந்தமில்லாத
உறவான
நண்பர்களிடம் தான்
கொடுத்து இருக்கிறார்கள்
இரத்த சம்பந்தமுடைய
உறவுகளிடம்
கொடுக்கவில்லை
என்பதை நாம்
உணர்ந்து கொண்டால்
நண்பன் கொள்ளும் நட்பு
எவ்வளவு உயர்ந்தது
புனிதமானது
என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்.

இரத்த சம்பந்தமுள்ள
உறவில் பெரிய
அளவில் பாதிப்புகள்
ஏற்பட்டாலும்
பெரிதாக எடுத்துக்
கொள்ளப்படுவதில்லை
ஆனால்
இரத்த சம்பந்தமில்லாத
உறவான
நட்பில் சிறிதளவு
பாதிப்பு ஏற்பட்டாலும்
நட்பில் களங்கம்
ஏற்பட்டு விடும்

எனவே,
எதிர்பார்ப்புடன்
நட்பு கொண்டு,
எல்லா சூழ்நிலைகளிலும்
ஒரே மாதிரியாக
இல்லாமல்,
எந்த செயலையும்
செய்யத் தயாராக
இல்லாமல் இருக்கும்
கற்பில்லாத நட்பாக
நம்முடைய
நட்பு இல்லாமல்,
எந்தவிதமான
எதிர்பார்ப்பும் அற்று
எல்லா சூழ்நிலைகளிலும்
ஒரே மாதிரியாக இருந்து
எந்தச் செயலையும்
செய்யத் தயாராக
இருக்கும் நட்பு தான்
கற்புள்ள நட்பு என்பதை
நாம் புரிந்து கொண்டு
கற்புள்ள நட்பாக
நம்முடைய நட்பு
இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.

மனிதன்,
மனிதனாக இருந்து,
மனிதனுக்குரிய
குணங்களைப் பெற்று,
மனிதனாக வாழ
வேண்டும் என்பதற்காக,
பின்பற்ற வேண்டிய
உயர்ந்த கருத்துக்களை,
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்
என்பதை நாம்
உணர்ந்து கொண்டு
அவர்களை வணங்குவோம்

---------நம் முன்னோர்கள்
     புத்திசாலிகள்-சுபம்

-----------05-08-2018
///////////////////////////////////////////////////////////


August 03, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-54



            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-54

வடக்கிருக்கத்
துணிந்து செயலில்
இறங்கிய
கோப்பெருஞ்சோழன்
தன்னுடைய
உயிர் நண்பரான
பிசிராந்தையாரைப்
பார்க்காமலேயே
உயிரை விடப்
போகிறோமே என்று
மிகவும் மனம்
வருந்தினான்

தான் வடக்கிருக்கும்
செய்தியை
பிசிராந்தையார் அறிந்தால்
பிசிராந்தையாரும்
கண்டிப்பாகத்
தன்னுடன் வடக்கிருக்க
வருவார் என்று
கோப்பெருஞ்சோழனின்
உள் உணர்விற்குத்
தோன்றியதால்
மந்திரியிடமும்
மற்றையோரிடமும்
தன்னுடைய நண்பரான
பிசிராந்தையாருக்கும்
ஓர் இடத்தைத்
தயார் செய்யும்படி
வலியுறுத்திக் கூறினார்.

அரசனின் ஆணை
உடனடியாக
நிறைவேற்றப்பட்டது
ஆனால் பிசிராந்தையார்
அரசனுடன்
வடக்கிருக்க
வருவார் என்பதை
யாருமே நம்பவில்லை

பிசிராந்தையார்
வடக்கிருந்து
கோப்பெருஞ்சோழனுடன்
உயிரை
விடுவதற்கு துணிவாரா
அதுவும்
ஒருவரையொருவர்
பார்க்காமல் கொண்ட
நட்பிற்காக
இவ்வாறு செய்வாரா
ஒருவரை ஒருவர்
பார்த்து பழகும்
நட்பே ஆபத்து
என்றால் ஓடிவிடும்
நிலையில் இருக்கும்போது
ஒருவரையொருவர்
பார்க்காமல் செய்யும்
நட்பிற்கு எவ்வாறு
பிசிராந்தையார் வந்து
வடக்கிருந்து
உயிரை விடுவார்
என்று அனைவரும்
நினைத்தனர்

கோப்பெருஞ்சோழனின்
செயலை நினைத்து
மனதிற்குள்
அனைவரும்

சிரித்துக் கொண்டார்கள்

நாட்கள் நகர்ந்து
கொண்டே இருந்தது
பிசிராந்தையார்
வந்து விடுவார் என்று
அவர் வரும்
வழியைப் பார்த்துக்
காத்துக் கொண்டிருந்த
கோப்பெருஞ்சோழனும்
சோர்ந்து போனான்
பிசிராந்தையார்
வருவதாகத் தெரியவில்லை
அதனால் சோழன்
நண்பரைக் காணாமலேயே
வடக்கிருக்கும்
தவத்தை மேற்கொள்ளத்
தொடங்கினான்

ஆனால் சோழனின்
எண்ணப்படியே
செய்தியைக் கேள்விப்பட்டதும்
பிசிராந்தையார்
சோழ நாட்டை நோக்கி
ஓடோடி வந்தார்
நண்பனைக் கண்டார்
கண்ணீர் பெருகி நின்றார்

வேறு எதுவும் பேசவில்லை
எற்கனவே
அவருக்காகத் தயாராக
அமைக்கப்பட்டிருந்த
இடத்தில் போய்
உட்கார்ந்து
வடக்கிருந்து சோழனுடன்
தானும் தன் இன்னுயிரை
மாய்த்துக் கொண்டார்

பிசிராந்தையார்
என்ற புலவரும்
கோப்பெருஞ்சோழன்
என்ற மன்னனும்
ஒருவரை ஒருத்தர்
காணாமலேயே
நட்புக் கொண்டு
ஒன்றாகவே
உயிர்நீத்த நட்பின்
சிறப்பினை
பல இலக்கியங்கள்
நமக்கு எடுத்துக் காட்டுகின்றன
பொத்தியார் என்ற புலவர்
தன்னுடைய பாடலில்
இதனைப் பதிவு
செய்திருக்கிறார்

பிசிராந்தையாரும்
கோப்பெருஞ்சோழனும்
கொண்ட நட்பு எத்தகைய
விஷயத்தையும்
செய்யத் தயாராக 
இருக்கும் நட்பு

இராமரும், ஶ்ரீநிவாசனும்
கொண்ட நட்பு
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு
என்பதையும்
பிசிராந்தையாரும்,
கோப்பெருஞ்சோழனும்
கொண்ட நட்பு
எத்தகைய
விஷயத்தையும்
செய்வதற்குத் தயாராக
இருக்கும் நட்பு
என்பதையும்
நாம் உணர்ந்து
கொண்டால்
உண்மையான நட்பு
எதிர்பார்ப்பு அற்று
இருக்கும் என்பதை
நாம் உணர்ந்து
கொள்ளலாம்

இத்தகைய உயர்ந்த
நட்பின் பெருமையை
நாம் உணர்ந்து
கொள்ளாத
காரணத்தினால் தான்
துரியோதனனும்,
கர்ணனும் கொண்ட
எதிர்பார்ப்புடன்
கூடிய நட்பை
இச்சமுதாயத்தில்
உள்ளவர்கள்
பின்பற்றி வருகிறார்கள்

உயர்ந்த நட்பை
நாம் கவனிக்கத்
தவறி விட்ட
காரணத்தினால் தான்
சாதாரண நட்பை நாம்
உயர்ந்த நட்பாக
கருதி போற்றி
பின்பற்றி வருகிறோம்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்.

----------இன்னும் வரும்
------------03-08-2018
///////////////////////////////////////////////////////////