August 22, 2018

திருக்குறள்-பதிவு-4



                       திருக்குறள்-பதிவு-4


“”””நன்றி மறப்பது

நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது

நன்று””””””              

மனிதன் தன் வாழ்வில்
முக்கியமாக இரண்டு
விஷயங்களைத் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்

ஒன்று : ஒருவர் நமக்குச்
         செய்த நன்மையான
         செயல்களை மறப்பது
         நல்லது கிடையாது
         என்பதைத் தெரிந்து
         வைத்திருக்க
         வேண்டும்.
        
இரண்டு :ஒருவர் நமக்குச்
         செய்த தீமையான
         செயல்களை
         உடனே மறந்து
         விட வேண்டும்
         என்பதைத் தெரிந்து
         வைத்திருக்க
         வேண்டும்
         

ஒருவர் நமக்குச்
செய்த நன்மையான
செயல்களை மறப்பது
நல்லது கிடையாது
என்றால்,
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
மறந்து விட்டு
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்று பொருள்.

ஒருவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
உடனே மறந்து விட
வேண்டும் என்றால்,
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
மறந்து விட்டு
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டும் நினைக்க
வேண்டும் என்று பொருள்

நன்றாக உற்றுக்
கவனித்தால்
இரண்டுமே ஒரே ஒரு
பொருளைத் தான்
சொல்ல வருகிறது என்பதை
நம்மால் புரிந்து
கொள்ள முடியும்
அதாவது ஒருவர்
நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்பது
தெளிவாகும்.

எதற்காக ஒருவர்
நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மட்டுமே நினைக்க
வேண்டும் என்பதை
நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்

நமக்கு குடும்பத்தில்     
தீர்க்க முடியாத கஷ்டம்
ஏற்பட்ட போதெல்லாம்
ஒருவர் நமக்கு
ஓடோடி வந்து
உதவிகள் செய்து
இருக்கிறார்
இக்கட்டான சூழ்நிலையில்
நாம் மாட்டிக் கொண்டு
மன வேதனைப் பட்ட
சமயத்தில் எல்லாம்
நம்முடைய
வேதனையை நீக்கி
துணை புரிந்து
இருக்கிறார்
இழப்புகள் ஏற்பட்டு
வருத்தத்தில்
துவண்ட போதெல்லாம்
நம்முடைய வருத்தத்தில்
பங்கு கொண்டு நம்மை
அந்த வருத்தத்தில்
இருந்து மீட்டு கொண்டு
வந்து இருக்கிறார்
நாம் கஷ்டப்பட்ட
போதெல்லாம்
பல உதவிகள் நமக்காக
செய்து இருக்கிறார்,

நாம் துன்பப்
பட்ட போதெல்லாம்
நமக்காக உதவிகள்
செய்து இருக்கிறார்.
ஆனால் ஒரு சமயம்
அவர் நமக்கு
தெரிந்தோ தெரியாமலோ
நன்மை செய்ய
முடியாமல் போய் இருக்கும்
அவருடைய சூழ்நிலை
எப்படி இருந்ததோ
நமக்கு தெரியாது
தீமையான செயலை
செய்து விட்டார்

அதன் விளைவால்
அவர் நமக்குச் செய்த
பல ஆயிரக்கணக்கான
உதவிகள்
நம் கண்ணுக்கு தெரியாது
அவர் செய்த
அந்த தீமையான
செயல் மட்டும் தான்
நம் நினைவில் நிற்கும்.



அவர் நமக்கு செய்த
ஆயிரக் கணக்கான
நன்மையான செயல்களை
மறந்து விடுவோம்
ஆனால் அவர் நமக்கு
செய்த அந்த
தீமையான செயலை
மட்டுமே நினைத்துக்
கொண்டு இருப்போம்

ஒருவர் நமக்கு
செய்த தீமையான செயலை
மட்டுமே நினைத்துக்
கொண்டிருந்தால்
அவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்கள்
எதுவும் நமக்கு தெரியாது
அவர் நமக்கு செய்த
தீமையை மட்டுமே
நினைத்துக் கொண்டிருப்போம்

ஒருவர் நமக்கு செய்த
தீமையான செயலை
மறப்பதன் மூலமே
ஒருவர் நமக்கு
செய்த நன்மையான செயலை
நினைவில் வைத்துக்
கொள்ள முடியும்

ஒருவர் நமக்கு
செய்த நன்மையான
செயல்களை மறப்பது
நல்லது கிடையாது


ஒருவர் நமக்குச் செய்த
நன்மையான செயல்களை
மறக்காமல் இருக்க
வேண்டுமானால்
அவர் நமக்குச் செய்த
தீமையான செயல்களை
உடனே மறந்து
விட வேண்டும்

ஒருவர் நமக்குச்
செய்த தீமையான
செயல்களை
உடனே மறந்து
விடுவதன் மூலமே
அவர் நமக்குச்
செய்த நன்மையான
செயலை நினைவில்
வைத்துக் கொள்ள
முடியும் என்ற
காரணத்தினால் தான்

நன்றி மறப்பது

நன்றன்று

நன்றல்லது அன்றே

மறப்பது நன்று

என்றார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  21-08-2018
/////////////////////////////////////////////////


August 17, 2018

திருக்குறள்-பதிவு-3


                திருக்குறள்-பதிவு-3

“””ஏதிலார் குற்றம்போல்
தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும்
உயிர்க்கு””””

உலகில் வாழும்
மனிதர்களை மூன்று
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று : போட்டியில் கலந்து
         கொண்டு வெற்றி
         பெறுபவர்கள்

இரண்டு: போட்டியில் கலந்து
         கொண்டு தோல்வி
         அடைபவர்கள்

மூன்று : போட்டியில் கலந்து
         கொள்ளாமல்
         விமர்சிப்பவர்கள்

கிரிக்கெட் போட்டி
ஒன்றை எடுத்துக்
கொண்டால்
அந்த போட்டியில்
கலந்து கொண்டவர்களில்
ஒரு பிரிவினர்
போட்டியிட்டு போராடி
வெற்றி பெறுகிறார்கள்;
மற்றொரு பிரிவினர்
போட்டியில் கலந்து
கொண்டு போட்டியிட்டு
போராடி தோல்வி
அடைகிறார்கள்;
ஆனால் இதில்
கலந்து கொள்ளாமல்
வெளியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
அனைவரும் விமர்சனம்
செய்கிறார்கள்.

போட்டியில்
வெற்றி பெற்றவர்கள்
சரியாக ஆடவில்லை
இருந்தாலும் வெற்றி
பெற்றார்கள் என்று
வெற்றியை விமர்சிப்பார்கள்
தோல்வியடைந்தவர்கள்
பணத்தை
வாங்கிக் கொண்டு
விட்டுக் கொடுத்தார்கள்
அதனால்
தோல்வி அடைந்தார்கள்
என்று தோல்வி
அடைந்தவர்களைப் பற்றி
விமர்சிப்பார்கள்
விமர்சனம் செய்பவர்கள்

விமர்சனம் செய்பவர்கள்
விமர்சனம் செய்து
கொண்டு தான் இருப்பார்கள்
ஆனால் எதிலும் கலந்து
கொள்ள மாட்டார்கள்

அரசியல் என்று
எடுத்துக் கொண்டால்
தேர்தலில் போட்டியிட்டு
ஒரு கட்சி
ஆளுங்கட்சியாகவும்
மற்றொரு கட்சி
எதிர்க்கட்சியாகவும்
இருக்கும்
ஆனால் போட்டியிடாதவர்கள்
விமர்சகர்களாக இருந்து
கொண்டு விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்

வெற்றி பெற்றவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருக்கிறது இருந்தாலும்
வெற்றி பெற்றார்கள்
தோல்வி அடைந்தவரிடம்
இவ்வளவு குற்றங்கள்
இருந்தது அதை
சரி செய்து கொள்ளாத
காரணத்தினால் தான்
தோல்வி அடைந்தார்கள்
என்று பேசுவார்கள்
அவர்களைப் பற்றி
விமர்சனம் செய்வார்கள்

விமர்சனம் செய்பவர்கள்
அனைவரும் களத்தில்
இறங்கி வேலை
செய்ய மாட்டார்கள்.

களத்தில் இறங்கி
வேலை செய்பவர்கள்
ஒன்று வெற்றி
பெறுவார்கள்
அல்லது தோல்வி
அடைவார்கள்
வெற்றி பெற்றவர்கள்
மேலும் உயர் நிலை
அடைவதற்கு தேவையான
முயற்சிகளை செய்து
கொண்டு இருப்பார்கள்
தோல்வி அடைந்தவர்கள்
ஏன் தோல்வி  அடைந்தோம்
என்று யோசித்து
தோல்விக்கான
காரணங்களை அலசி
ஆராய்ந்து அதை
சரி செய்து
வெற்றியை நோக்கி
பயணித்துக் கொண்டிருப்பார்கள்

ஆனால் விமர்சனம்
செய்பவர்கள்
தொடர்ந்து விமர்சனம்
செய்து கொண்டிருப்பார்கள்
அவர்கள் வாழ்க்கையில்
எந்த முன்னேற்றமும்
இருக்காது
எந்த நிலையில்
இருக்கிறார்களோ அதே
நிலையில் தான்
இருப்பார்கள்

பிறருடைய குற்றங்களை
கண்டுபிடித்து
விமர்சனம் செய்து
கொண்டிருப்பதால்
இச்சமுதாயத்திற்கு
ஒரு பயனும் இல்லை

எனக்கு ஏன்
படிப்பு வரவில்லை;
எனக்கு ஏன்
நல்ல வேலை
கிடைக்கவில்லை;
எனக்கு ஏன்
அதிக சம்பளத்தில்
வேலை கிடைக்கவில்லை;
என்னுடைய குடும்பம்
ஏன் கஷ்டப்படுகிறது;
என்பதை
யோசித்துப் பார்த்து
தன்னிடம் உள்ள
குற்றங்களை
ஆராய்ந்து பார்த்து
அதை தீர்க்க என்ன
செய்ய வேண்டுமோ
அதை செய்ய வேண்டும்

அப்படி செய்தால்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக அமையும்
தனிமனிதன் வாழ்க்கை
நல்லவிதமாக
அமைந்து விட்டால்
சமுதாயம் நல்ல
சமுதாயமாக அமையும்

எனவே,
இச்சமுதாயத்தில்
வாழும் ஒவ்வொரு
தனி மனிதனும்
பிறரிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
விமர்சிப்பதை விட்டு விட்டு
தன்னிடம் உள்ள
குற்றங்களை கண்டுபிடித்து
சரி செய்து கொண்டால்
சமுதாயம் மனிதர்கள்
வாழக்கூடிய
சமுதாயமாக இருக்கும்
இல்லையென்றால்
இச்சமுதாயம்
மனிதர்கள் வாழ இயலாத
சமுதாயமாகத் தான்
இருக்கும்
என்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  17-08-2018
///////////////////////////////////////////////////////////



August 09, 2018

திருக்குறள்-பதிவு-2



                    திருக்குறள்-பதிவு-2

இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

தனக்குத் துன்பம் செய்தவரைத்
தண்டிப்பது என்பது அவர்
வெட்கப்படும்படி அவருக்கு
நல்லது செய்து விடுவதாகும்
என்று பொருள்
கொள்ளப்படுகிறது

இதற்கு இப்படியும்
அர்த்தம் சொல்லலாம்


ஒருவர் நமக்கு
தொடர்ந்து தீமையான
செயல்களையே செய்து
கொண்டிருக்கிறார்;
நமக்கு கிடைக்க
வேண்டிய நல்ல
விஷயங்களை
நமக்கு தொடர்ந்து
கிடைக்க விடாமல்
தடுக்கிறார்;
வேலையில் தடைகளை
ஏற்படுத்துகிறார்;
நம்மைப் பற்றி
பிறரிடம் பொய்யான
தகவல்களைச் சொல்லி
நம்முடைய பெயரை
கெடுக்க பார்க்கிறார்;
நம்மை பிறரிடம்
தப்பாக சொல்லி
பிறரை நமக்கு
எதிரியாக்குகிறார்;
நமக்கு சேர
வேண்டியவைகளை
அபகரித்துக் கொள்கிறார்;
இவ்வளவையும் தாங்கிக்
கொண்ட நாம்
நமக்கு கெடுதல்
செய்தவருக்கு
துன்பம் வந்த போது
நாம் ஓடிச் சென்று
உதவி செய்கிறோம்
இதனால் அவர்
ஒரு பெரிய
பிரச்சினையிலிருந்து
தப்பிக்கிறார்.

நாம் உதவி செய்த
நபர் நம்மைப் பற்றி
நினைக்கிறார்
நாம் எவ்வளவு
கெடுதல்கள் அவருக்கு
செய்திருக்கிறோம்
ஆனால் அவர்
அதை எல்லாம்
தாங்கிக் கொண்டு
அவைகளை எல்லாம்
மறந்து விட்டு
பெருந்தன்மையுடன்
நமக்கு துன்பம்
வந்தபோது ஓடி வந்து
உதவி செய்திருக்கிறார்
இவ்வளவு உயர்ந்த
குணம் கொண்ட
ஒருவருக்கு
நான் கெடுதல் செய்து
மிகப் பெரிய
பாவத்தை செய்து
விட்டேன்
என்று வருந்துகிறார்.

நாண என்பதற்கு
இந்த இடத்தில்
வெட்கப்படுதல்
என்று பொருள்
கொள்ளக் கூடாது.

நாண என்பதற்கு
இந்த இடத்தில்
வருத்தப்படுதல்
என்று பொருள்
கொள்ள வேண்டும்.

ஒருவர் தான்
செய்த தீமையான
செயலை நினைத்து
வருத்தப்படுவதில்
இரண்டு நிலைகள்
இருக்கிறது

   ஒன்று : உண்மையாக
            வருத்துப்படுவது

  இரண்டு : உண்மையாக
            இல்லாமல்
            வருத்தப்படுவது

யார் ஒருவர் தான்
செய்த தீமையான
செயலை நினைத்து
உண்மையாக
வருத்தப்படுகிறாரோ
அவர் அந்த தீமையான
செயலை மீண்டும்
அவர் தன் வாழ்க்கையில்
செய்ய மாட்டார்

ஆனால் ஒருவர்
தான் செய்த
தீமையான செயலை
நினைத்து
உண்மையாக இல்லாமல்
பொய்யாக
வருத்தப்படுகிறாரோ
அவர் தான் அந்த
தீமையான செயலை
தன் வாழ்க்கையில்
மீண்டும் மீண்டும்
செய்து கொண்டிருப்பார்

நாம் நம்முடைய
வாழ்க்கையை
எடுத்துப் பார்த்தால்
நாம் சிறிய வயது முதல்
தற்போது வரை
சிறிய வயதில் செய்த சில
தீமையான செயல்களை
இன்றும் நாம்
செய்து கொண்டிருப்போம்
அதற்குக் காரணம்
நாம் செய்த
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக
வருத்தப்படாததே
காரணம்

நாம் செய்த
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக
வருத்தப்பட்டிருப்போமேயானால்
அந்த தீமையான செயலை
நாம் செய்யாமல்
விட்டிருப்போம்

நாம் இன்றும்
தொடர்ந்து தீமையான
செயல்களை தொடர்ந்து
செய்வதற்குக் காரணம்
நாம் செய்யும்
தீமையான செயலை
நினைத்து நாம்
உண்மையாக வருத்தப்
படாததே காரணம்

இன்னா செய்தாரை
ஒறுத்தல் என்றால்
நமக்கு கெடுதல்
செய்யும் ஒருவர்
என்று பொருள்

அவர்நாண நன்னயம்
செய்து விடல் என்றால்,
நாம் செய்த
நன்மையான செயலை
நினைத்து அவர்
உண்மையாக
வருத்தப்பட்டால்
அவர் மீண்டும்
அந்த தப்பை
செய்ய மாட்டார்
என்று பொருள்.

அதாவது நமக்கு கெடுதல்
செய்த ஒருவருக்கு
நாம் நன்மை செய்தால்
அதை நினைத்து
அவர் உண்மையாக
வருத்தப்பட்டால்
அவர் மீண்டும்
அந்த தப்பை
நமக்கு மட்டும் அல்ல
யாருக்கும் செய்ய
மாட்டார்
என்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  09-08-2018
///////////////////////////////////////////////////////////