September 08, 2018

திருக்குறள்-பதிவு-16


                      திருக்குறள்-பதிவு-16

விவாதத்தில் கலந்து
கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொண்ட
சார்லஸ் டார்வினின்
ஆதரவாளர்களுக்கு
டார்வின் பேசிய
வார்த்தைகள் இது தான்

என் மூலமாக என்ன
வெளிப்பட வேண்டுமோ
அது வெளிப்பட்டு விட்டது
நான் என்ன கண்டு
பிடிக்க வேண்டுமோ
அதை கண்டு பிடித்து
இந்த உலகத்திற்கு
அளித்து விட்டேன்
அத்துடன் என் கடமை
முடிந்து விட்டது
அதை ஏற்றுக் கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாததும்
இந்த சமுதாயத்தைச்
சார்ந்தது என்னைச்
சார்ந்தது கிடையாது

என்னுடைய கண்டுபிடிப்பில்
உண்மை இருக்கிறது
என்று அறிபவர்கள்
என்னுடைய கண்டுபிடிப்பை
எற்றுக் கொள்ளட்டும்
என்னுடைய கண்டுபிடிப்பில்
உண்மை இல்லை
என்று வெறுப்பவர்கள்
எதிர்க்கட்டும்
எதிர்ப்பவர்களுக்காக
நான் விவாதம் செய்து
என்னுடைய காலத்தை
வீணாக்க நான்
விரும்பவில்லை
நான் இன்னும்
கண்டுபிடிக்க வேண்டியது  
நிறைய இருக்கிறது
ஆகவே, என்னை ஆராய்ச்சி
செய்ய விடுங்கள்
விவாதத்திற்கு என்னை
அழைக்க வேண்டாம் என்றார்
சார்லஸ் டார்வின்

இந்தப் பிரபஞ்சம்
விசித்திரம் நிறைந்தது
ஒரு விஷயத்தை
இந்த சமுதாயத்திற்கு
அளிக்க வேண்டுமானால்
அந்த விஷயத்தை
அளிக்கக் கூடிய
தகுதியான  நபர்
கிடைக்கும் வரைக்கும்
இந்த பிரபஞ்சம்
காத்திருக்கும் அவர்
வந்தவுடன் அந்த
விஷயத்தை அந்த
நபர் மூலமாக
காலம் பார்த்து
வெளிப்படுத்தும் உலகத்தில்
கண்டுபிடிக்கப்பட்டு
அளிக்கப்பட்டு வந்த
விஷயங்கள் அனைத்தும்
இப்படித்தான் இந்த
மக்களுக்கு வழங்கப்பட்டது
அதில் ஒன்றுதான்
சார்லஸ் டார்வினின்
பரிணாமக் கோட்பாடு

சார்லஸ் டார்வின்
விவாதத்திற்கு வராத
காரணத்தினால் விழா
நாயகன் டார்வின்
இல்லாமலேயே விவாதம்
தொடங்க ஆயத்தமானது

ஆண்டவன் தான் இந்த
உலகத்தைப் படைத்தான்
என்று பேசுவதற்காக
கிறிஸ்தவர்களின் சார்பாக
பிஷப் வில்பர்போர்ஸ்
சிலுவை ஏந்திய கரங்களுடன்
பலத்த ஆரவாரங்களிடையே
தன்னுடைய பேச்சை
துவங்கினார்

மதிப்பிற்குரிய மகா ஜனங்களே
பரமபிதாவின் பெயரால்
நான் உங்களை
ஒன்று கேட்கிறேன்
சாத்தானின் அவதாரமான
சார்லஸ் டார்வின்
நீங்கள் எல்லாம்
குரங்கிலிருந்து
தோன்றியவர்கள் என்று
கொஞ்சமும் நாக்கு
கூசாமல் கூறுகிறார்.
நீங்களே கூறுங்கள்
உங்களுடைய பாட்டன்களும்
முப்பாட்டன்களும்
குரங்குகளா
உங்கள் பாட்டன் குரங்கா
உங்கள் பாட்டி குரங்கா
யாரை குரங்கு என்று
நீங்கள் தீர்மானிக்கப்
போகிறீர்கள்

மற்றொரு கேள்வியையும்
நான் உங்களிடம் கேட்கிறேன்
டார்வின் தன்னுடைய
அபத்தமான தத்துவத்தில்
கூறியிருக்கிறார்
புழு பூச்சியாகி,
பூச்சி வண்டாகி,
வண்டு பறவையாகி,
பறவை பிராணியாகி,
பிராணி குரங்காகி,
குரங்கு மனிதனானான் என்று
இந்தப் பரிணாமப்படி
பார்த்தால்
குரங்கிலிருந்து
தோன்றிய மனிதன்
இத்தனை லட்ச
ஆண்டுகளுக்குப்  பின்னும்
எந்தவித பரிணாம
வளர்ச்சியும் கொள்ளாமல்
அப்படியே தானே
இருக்கிறான்
ஏன் அவனுக்கு இன்னும்
ஒரு கொம்போ,
ஒரு இறக்கையோ,
ஒரு வாலோ அல்லது
வேறு எதுவுமே
உண்டாகவில்லை

குரங்கின் பரிணாமம்
மனிதன் என்றால்
மனிதனின் பரிணாமம்
என்ன என்று டார்வின்
தன்னுடைய தத்துவத்தில்
என்ன கூறியிருக்கிறார்
பரிணாமம் என்றால்
அதற்கு ஒரு இறுதி
முடிவு இருக்க முடியாதே
இதைச் சிந்தித்து பார்க்காமல்
நம்மைப் படைத்த
ஆண்டவனை ஏளனம்
செய்வது என்பது
எவ்வளவு பெரிய பாவம்
என்பதை நீங்கள்
உணரவில்லையா
இந்த எனது கேள்விக்கு
டார்வினின் ஆதரவாளர்கள்
என்ன பதில் சொல்லப்
போகிறார்கள்
என்னுடைய கேள்விக்கு
ஏற்ற பதிலைச்
சொல்லாமல் போனால்
இங்கே குழுமியிருக்கும்
மக்கள் மத்தியில்
தங்கள் தலைவன்
டார்வின் எழுதிய
புத்தகத்தை கிழித்தெறிய
முற்படுவார்களா என்று
சரமாரியாக கேள்வி
கேட்டார்

இதற்கு டார்வின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்காரும்
என்ன பதில் சொல்ல
போகிறார்கள் என்று
அனைவரும் காத்துக்
கொண்டிருந்தனர்

--------- இன்னும் வரும்
--------- 08-09-2018
/////////////////////////////////////


September 07, 2018

திருக்குறள்-பதிவு-15


                        திருக்குறள்-பதிவு-15

டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
ஆதரவாக நடத்தப்பட்ட
கூட்டங்களும்,
டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
எதிராக நடத்தப்பட்ட
போராட்டங்களும்,
உச்ச நிலையை
அடைந்தது.

உலகத்தையே
புரட்டிப்போட்ட
டார்வினின் புத்தகம்
வெறும் 230 பக்கங்கள்
மட்டுமே கொண்டது
இந்தப் புத்தகம்
ஏற்படுத்திய
சூறாவளிக் காற்றில்
பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கள்
தவறா அல்லது
சரியா என்று
நினைக்கும்
அளவிற்கு வந்து
விட்டது

பைபிளில் சொல்லப்பட்ட
கடவுளின் வார்த்தைகள்
சர்ச்சைக்கு உள்ளாவதையும்,
கேள்விக் குறியாவதையும்,
விரும்பாத கிறிஸ்தவ
பாதிரியார்கள்
டார்வின் புத்தகத்தை
கடுமையாக எதிர்த்தனர்.

கடவுளால்
உருவாக்கப்பட்டவன்
தான் மனிதன்
அத்தகைய மனிதன்
குரங்கிலிருந்து
வரவே முடியாது
அதற்கு வாய்ப்பே
இல்லை
இதனைப் பற்றி
பொது மேடையில்
விவாதிக்கத்
தயாரா என்று
கிறிஸ்தவ பாதிரியார்கள்
டார்வின்
ஆதரவாளர்களுக்கு
சவால் விட்டனர்

கிறிஸ்தவ
பாதிரியார்களின்
சவாலை ஏற்றுக்
கொண்டனர்
டார்வினின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்கரும்
டார்வினின் புத்தகத்தைப்
பற்றி விவாதம் நடத்த
இரண்டு அணியினரும்
1860-ஆம் வருடம்
ஜுன் மாதக் கடைசியில்
ஒரு நாளைத்
தேர்ந்தெடுத்தனர்

ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்தில்
பிரிட்டிஷ் சங்கத்தின்
சார்பில்
இந்த உலகப்
 பிரசித்திபெற்ற
விவாதம் நடக்கவிருந்தது

ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தைச் சுற்றி
 பல மைல்
தொலைவு வரை
மனிதக் கூட்டமாக
இருந்தது
எங்கு நோக்கிலும்
மனிதத் தலைகளாகவே
காட்சியளித்தது
கடவுள் மனிதனைப்
படைத்தாரா அல்லது
மனிதன் குரங்கிலிருந்து
வந்தானா
என்பதைத் தெரிந்து
கொள்ளும் ஆவலில்
பல்லாயிரக்கணக்கான
மக்கள் ஒரே
நேரத்தில் திரண்டதால்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தின் விழா
மன்றத்தில் விவாதத்தை
நடத்த முடியாமல்
போனது

ஆக்ஸ்போர்டு
பல்கலைக் கழகத்திற்கு
மாற்றாக
உடனடியாக
ஆக்ஸ்போர்டு லைப்ரரி
மியூசியம் இருந்த
பெரிய கட்டிடம்
தேர்ந்தெடுக்கப்பட்டு
அந்த கட்டிடத்தில்
விவாதத்தை
நடத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது

மக்கள் வெள்ளத்தால்
அந்த இடமே
நிரம்பி வழிந்தது
வெளிநாடுகளில் இருந்து
வந்திருந்த விஞ்ஞானிகள்
அனைவரும் நடைபெறப்
போகும் நிகழ்வுகளை
காண்பதற்காக
காத்திருந்தனர்

மனிதன் என்பவன்
ஆண்டவனால் படைக்கப்
பட்டவன் என்று
வாதிடுவதற்கு,
மதத்துறையில்
சிறந்து விளங்குபவரும்,
மக்களிடையே
பிரபலமானவருமான
சோபிசாம் என்று
அழைக்கப்படும்
பிஷப் வில்பர்போர்ஸ்
அமர்ந்திருந்தார்

குரங்கிலிருந்து வந்தவன்
மனிதன் என்ற
டார்வின் கோட்பாட்டை
ஆதரித்து பேசுவதற்காக
டார்வினின்
ஆதரவாளர்களான
ஹக்ஸிலியும், ஹுக்கரும்
கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்திற்கு
அடிப்படை காரணமான
சார்லஸ் டார்வின்
இந்த விவாத
மண்டபத்திற்கு வரவில்லை
அவர் தன்னுடைய
வீட்டில் ஆராய்ச்சியில்
ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்

டார்வினின் ஆதரவாளர்கள்
டார்வினை சந்தித்து
தாங்கள் விவாதத்தில்
கலந்து கொள்ள
விவாத மண்டபத்திற்கு
வர வேண்டும்
என்று கேட்டுக் கொண்டதற்கு
சார்லஸ் டார்வின்
சொன்ன வார்த்தைகள்
மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது

--------- இன்னும் வரும்
--------- 07-09-2018
/////////////////////////////////////

September 06, 2018

திருக்குறள்-பதிவு-14


                   திருக்குறள்-பதிவு-14

கிறிஸ்தவர்களின்
புனித நூலான
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு மாறுபட்டு
டார்வினின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
ஒட்டுமொத்த
கிறிஸ்தவர்களும்
டார்வினுக்கு எதிராக
திரும்பினர்.

கிறிஸ்தவர்கள்
டார்வினை
இவர் குரங்கு
இவர் அப்பா குரங்கு
இவர் மூதாதையர்
அனைவரும் குரங்கு
என்று திட்டி தீர்த்தனர்.
டார்வின் தலையையும்
குரங்கு உடலையும்
இணைத்து கேலி
சித்திரம் போட்டார்கள்.

டார்வின் கடவுளின்
முதல் எதிரி என்றனர்;
இவர் நரகத்துக்குத்
தான் போவார்
என்றனர்;
டார்வினின் பிறந்த
நாளை பேய்
தினம் என்று
அறிவித்தனர்;

டார்வினுடைய புத்தகத்தை
மொத்தமாக வாங்கி
மக்கள் கூடும்
இடங்களில் எல்லாம்
கிழித்து வானத்தை
நோக்கி எறிந்தனர்

டார்வினின் புத்தகம்
சாக்கடையில் தான்
இருக்க வேண்டும் என்று
டார்வின் புத்தகத்தை
வாங்கி அதை கிழித்து
சாக்கடையில் போட்டனர்

டார்வின் புத்தகத்தை
மொத்தமாக வாங்கி
குவியலாக தெருவில்
ஒரே இடத்தில்
குவியலாக குவித்து
தீயிட்டு கொளுத்தினர்

பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
டார்வினின் கண்டுபிடிப்பு
இருக்கிறது
கிறிஸ்தவர்களின்
நம்பிக்கையை
இழிவு படுத்துவதாக
டார்வினின் கண்டுபிடிப்பு
இருக்கிறது என்று
டார்வின் புத்தகத்தை
கிறிஸ்தவ சர்ச்சுகளிள்
படிக்கட்டுகளில் வைத்தனர்
சர்ச்சுகளுக்கு வருபவர்கள்
அந்த புத்தகத்தை
மிதித்து விட்டு
ஆண்டவரை வணங்க
கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குள்
செல்லும் வகையில்
படிக்கட்டுகளில்
வரிசையாக அடுக்கி
வைத்தனர்
அவ்வாறே டார்வின்
புத்தகத்தை மிதித்து
விட்டு சர்ச்சுகளுக்குள்
சென்றனர்.

கிறிஸ்தவ சர்ச்சுகளில்
கருப்பு உடை தரித்த
விவிலிய பக்தர்கள்
தங்களின் கால்களின் கீழ்
டார்வினின் புத்தகத்தை
மிதித்தவாறு இறைவனின்
புனிதக் கொள்கையை
சாத்தானாகிய
டார்வினிடமிருந்து
காப்பதாக உறுதி
பூண்டார்கள்

புத்தகம் வெளியான
ஒரு சில நாட்களில்
முழு இங்கிலாந்தில்
ஏற்பட்ட புயல்
ஒரு சில
மாதங்களுக்கெல்லாம்
அகில உலகையும்
தாக்க ஆரம்பித்து
உலகில் உள்ள
பல மொழிகளில்
டார்வினின் புத்தகம்
மொழி பெயர்க்கப்பட்டது       

உலகில் உள்ள
கிறிஸ்தவர்கள் அனைவரும்
ஒட்டு மொத்தமாக
டார்வினை எதிர்த்தனர்.

டார்வினை
ஆதரிப்பவர்கள் கூட
டார்வின் புத்தகத்தை
அதிக அளவில்
வாங்கவில்லை
டார்வினை
எதிர்ப்பவர்கள் தான்
டார்வின் புத்தகத்தை
அதிக அளவில்
வாங்கினர்

டார்வின் புத்தகத்தில்
அப்படி என்னதான்
எழுதப் பட்டிருக்கிறது
என்பதைத்
தெரிந்து கொள்வதற்கு
உலகில் உள்ள
கிறிஸ்தவ மத
குருமார்கள் மட்டுமல்ல
உலகில் உள்ள
கிறிஸ்தவர்களில்
பெரும்பாலானவர்கள்
வாங்கினர்

டார்வின் புத்தகத்திற்கு
கிறிஸ்தவர்களால்
எவ்வளவு எதிர்ப்பு
டார்வினுக்கு இருந்ததோ
அதற்கு சமமான ஆதரவு
கடவுள் இல்லை
என்று சொல்பவர்களால்
டார்வினுக்கு உண்டானது

டார்வின் ஆதரவாளர்கள்
உண்மையான குரங்கைப்
பிடித்து வந்து
குரங்கை அழகாக
அலங்கரித்து
வண்டியில் வைத்து
வீதிவீதியாக அழைத்து
வந்தனர்
டார்வின் வாழ்க
நம் மூதாதையர்
வாழ்க என்று
கோஷங்கள் எழுப்பிக்
கொண்டு சென்றனர்.

சிலர் டார்வின்
படத்தையும்,
சிலர் டார்வின்
புத்தகத்தையும்,
சிலர் குரங்கையும்
வண்டியில் வைத்து
டார்வின் வாழ்க
என்று கோஷம் எழுப்பிக்
கொண்டு சென்றனர்.

டார்வினுக்கு எதிராக
அனைத்து கிறிஸ்தவர்கள்
ஒரு புறமும்,
டார்வினுக்கு ஆதரவாக
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
மறுபுறமும்,
இருந்து கொண்டு
ஒருவருக் கொருவர்
மோதிக் கொண்ட
மோதல் உலக அளவில்
உச்ச நிலையை
அடைந்தது.

அடுத்து என்ன நடக்கப்
போகிறது என்று
உலகமே நடக்கும்
நிகழ்வுகளை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தது


---------  இன்னும் வரும்
---------  06-09-2018
/////////////////////////////////////