December 04, 2018

திருக்குறள்-பதிவு-62


                      திருக்குறள்-பதிவு-62

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
(Nicolaus Coper Nicus)
போலந்து நாட்டின்
ராயல் புருசியாவில்
தோர்ன் என்ற நகரில்
1473 -ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம்
19-ஆம் தேதி
பிறந்தார்

இவரது தந்தை
கிராக்கொவ் நகரில்
பெரிய வணிகர்
தாயார்
பார்பரா வாட்சன்ராட்
தோர்ன் நகரின்
மிகப் பெரிய
செல்வந்தரின் மகள்

இவர்களுக்கு
நான்கு பிள்ளைகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தான்
கடைசி பிள்ளை
11-வது வயதில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தன்னுடைய
அப்பாவை இழந்தார்

நிக்கோலஸின்
தாய்மாமன்
லூகாஸ்
வாக்ஸன்ரோடு
என்பவர்
நிக்கோலஸையும்
அவரது உடன்பிறப்புகள்
ஒரு சகோதரர்
இரண்டு சகோதரிகள்
ஆகியோரையும்
வளர்த்தார்

கணிதப் பேராசிரியர்
டாமினிகோ நோவாரா
(DOMENICO NOVARA)
என்பவருடைய வீட்டில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தங்கி இருக்க
வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டது
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வானியல், பூகோளம்
ஆகியவற்றில்
ஆர்வம் எழக்
காரணமாக இருந்தவர்
டாமினிகோ நோவாரா

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் மற்றும்
டாமினிகோ நோவாரா
இருவரும் சேர்ந்து
வானத்தில் உள்ள
விண்மீன்களை
உற்று கவனிப்பதும்
சந்திர கிரகணத்தை
ஆராய்வதும்
போன்ற செயல்களைச்
செய்தனர்

டாலமி மற்றும்
கிரேக்க விஞ்ஞானிகளின்
வானியல் கொள்கைகளை
டாமினிகோ நோவாரா
அவருக்கு கற்பித்தார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
டாலமியின் பூமி மையக்
கோட்பாட்டை
படித்து அதை
ஏற்றுக் கொள்ளவில்லை

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
மருத்துவப் படிப்பை
தொடராது வெறும்
மதச் சட்ட்த்தில்
டாக்டர் பட்டம் வாங்கி
போலந்துக்கு சென்றார்

அங்கே பிரௌன்பர்க்
என்னும் நகரில்
கிறிஸ்துவப் பாதிரியாக
நியமனம் ஆகிப்
பணிபுரிந்து வந்தார்,.

இத்தகைய
சூழ்நிலையில்
1514-ல் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ் அவர்கள்
Commentariolus
(Latin
For “Small
Commentary”)
என்ற 40 பக்கங்கள்
கொண்ட புத்தகம்
ஒன்றை வெளியிட்டார்
அதில் முக்கியமாக
7 கோட்பாடுகள்
கூறப்பட்டன

அதில் சொல்லப்பட்ட
முக்கியமான
கோட்பாடு இது தான்
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்ற வில்லை
சூரியனை மையமாக
வைத்து தான்
பூமி சுற்றுகிறது
என்பதே அந்த
கோட்பாடு

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் சேகரித்து
வைத்திருந்த
பல தகவல்களையும்
தனக்கு முன்னர்
பலர் சேகரித்து
வைத்திருந்த
தகவல்களையும்
வைத்து பல
ஆண்டுகளாக
மக்கள் நம்பிக்
கொண்டிருந்த
பூமி மையக்
கோட்பாட்டை மாற்றி
சூரிய மையக்
கோட்பாட்டை
எடுத்து வைத்தார்

மேலும் அறிவியலில்
பல ஆண்டுகளாக
பலர் சேகரித்து
வைத்திருக்கும்
தகவல்களை
வைத்து ஒரு
முடிவுக்கு வரலாம்
என்ற புதியதொரு
வழிமுறையையும்
கொண்டு வந்தார்

அதற்கு முன்பு
வரை யாராவது
ஒருவரின் எண்ணத்தில்
தோன்றுவது தான்
கண்டுபிடிப்புகள்
என்ற நிலையில்
இருந்தன

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இதனை
மாற்றிக் காட்டினார்
பல தகவல்களை
வைத்து இப்படித்தான்
இருக்க வேண்டும்
என்று முடிவுக்கு
வந்தார்
இப்போது பல
கண்டுபிடிப்புகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வழிமுறையையே
பின்பற்றி
நடத்தப்படுகின்றன

இதனை அறிமுகப்
படுத்தியவரும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்பதை
நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  04-12-2018
///////////////////////////////////////////////////////////


December 02, 2018

திருக்குறள்-பதிவு-61


                    திருக்குறள்-பதிவு-61

ஒத்த எண்ணம்
கொண்டவர்கள்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டு இருந்தாலும்,
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருப்பார்கள்

தாயையும், தாரத்தையும்
எடுத்துக் கொள்வோம்
  
மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பு
மகன் இரும்புவதை
நேரில் காணும் தாய்
இவ்வாறு சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆன பின்பு மகனுடன்
தொலைபேசியில்
பேசும் போது தாய்
இவ்வாறு சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பும் ;
மகனுக்கு திருமணம்
ஆன பின்பும் ;
மகனுக்கு உடல்நிலை
சரியில்லாதபோது
தாய் சொல்லும்
வார்த்தைகள் இவை.

காதலனுக்கும், காதலிக்கும்
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலியை
நேரில் சந்திக்கும்
காதலன் இரும்புகிறான்
காதலி இவ்வாறு
சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு  தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

காதலன், காதலி
திருமணம் செய்து
கணவன், மனைவி
ஆன பின்பு,
மனைவி தொலைபேசியில்
பேசும்போது
கணவன் இரும்புகிறான்
மனைவி இவ்வாறு
சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

காதலன், காதலிக்கு
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலனுக்கு
உடல்நிலை சரியில்லாத
போது காதலியும் ;
காதலன், காதலிக்கு
திருமணம் முடிந்து
கணவன், மனைவி
ஆன பின்பு ;
கணவனுக்கு உடல்நிலை
சரியில்லாத போது
மனைவியும் ;
சொல்லும்
வார்த்தைகள் இவை.
  
தாயும், தாரமும்
சொன்ன வார்த்தைகளை
நன்றாக ஒப்பிட்டு
மீண்டும் ஒரு முறை
படித்துப் பார்த்தால்
ஒரு எழுத்து மாறாமல்
வேறு வேறு
சூழ்நிலைகளில் இருவரும்
பேசி  இருப்பதை நாம்
உணர்ந்து கொள்ளலாம்
இவ்வாறு
தாயும். தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும் எண்ணத்தில்
ஒன்று படுகிறார்கள்
அதாவது தாயானவள்
தன்னுடைய மகனுடைய
உடல்நலத்தின் மீதும்
தாரமானவள் தன்னுடைய
கணவனின் உடல்நலத்தின்
மீதும் அக்கறையுடன்
இருக்கிறார்கள்
இது தான்
தாயும், தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும்
எண்ணத்தில்
ஒன்றுபடுவது

நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
தாங்கள் கண்டு பிடித்த
கண்டு பிடிப்புகளை
இந்த சமுதாயத்திற்கு
சொன்னது
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டதைக் குறிக்கிறது
தாங்கள் சொன்ன
கருத்திற்காக தங்களுடைய
உயிரை இழப்பதற்கும்
தயாராக இருந்தது
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருந்ததைக் குறிக்கிறது

---------  இன்னும் வரும்
---------  02-12-2018
///////////////////////////////////////////////////////////


November 30, 2018

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்






                            வாழ்த்து மடல்


தலைமை ஆசிரியர்
பணிக்கான
ஆணையைப் பெற்று,  
தலைமை ஆசிரியர்
பணியில்
30-11-2018-ஆம் தேதி
வெள்ளிக் கிழமை
பணியில் சேர்ந்த
என்னுடைய
இரண்டாவது
அண்ணன்
திரு,K.தர்மேந்திரராஜ்
அவர்களை
வாழ்த்துகிறேன் !

சுட்டெரிக்கும்
சூரியனின்
சுடர் நெருப்பில்
உதித்து வந்த
உயர்வுகளின் தலைவனே !

சுழன்றடிக்கும்
சூறாவளிக்
காற்றைக்
கடந்து வந்த
காவியத்தின் நாயகனே !

கல்லாதவருக்கும்
இல்லாதவருக்கும்
கல்விக் கண் திறந்த
அருட்பெருஞ்
ஜோதியில் பூத்த
அறிவுக் கடலே !

உறவுகளின்
உன்னத அன்பில்
உயிர்த்திருக்கும்
அன்பில் விளைந்திருக்கும்
அருள் நிதியே !

அறிவை
அறிவால் அறிந்து ;
அறிவை பயன்படுத்தும்
வழி அறிந்து ;
அறிவாய்
நின்றவர்களையும்
வீழ்த்தும்
உபாயம் அறிந்து ;
போட்டியாளர்களை
போட்டித்
தேர்வில் வீழ்த்தி ;
போட்டித்
தேர்வில் கிடைத்த
வெற்றி மாலையையும்
புகழ் மாலையையும்
அணிந்து ;
அன்பாய் ,
அறிவாய் ,
எளிமையாய் ,
ஆசிரியப்
பணியில் சேர்ந்து ;

மாணவர்கள்
உயர்வு ஒன்றையே
கருத்தில் கொண்டு
அதற்காக உழைத்து ,
உணவு அருந்தாமல்
கண் உறக்கம்
கொள்ளாமல் ,
ஆசிரியப்
பணிக்கென்று
தனியாக ஒரு
நேரத்தை ஒதுக்காமல் ,
பள்ளி ;
மாணவர்கள் ;
பாடம் ; - என்ற
மூன்றை மட்டுமே
வாழ்க்கையின்
தாரக மந்திரமாகக்
கொண்டு
உழைத்தால்
இப்படித் தான்
உழைக்க வேண்டும்
என்று
உழைப்பிற்கு
உதாரணமாக இருந்து ,
ஆசிரியராக இருந்தால்
இப்படித் தான்
இருக்க வேண்டும்
என்று
பெரியோர்களால்
பாராட்டப்பட்டு ,
சிறந்த ஆசிரியராக
பணியில்
சிறப்பிடம் பெற்று ,

காலம் தன்
கணக்கை முடிக்க
கபட நாடகம்
நடத்தினாலும் ,
விதி தன்
முடிவுரையை தீட்ட
எழுதுகோலை எடுத்து
எழுத துடித்தாலும் ,
வரலாற்றை மாற்றி
புதிய வரலாறு
படைத்து
புதிய வார்ப்பாய் ;
புனித மனிதனாய் ;
உயிர்த்தெழுந்து , 

தலைமை ஆசிரியராக
பதவி ஏற்றிருக்கும்
தங்களுக்கு
கடவுள் அருள்
மட்டுமல்ல
கடவுள் துணையும்
என்றும் உண்டு
என்று வாழ்த்தும் !

அன்பு தம்பி
K.பாலகங்காதரன்

தம்பியின் மனைவி
P.பிரதீபா பாலகங்காதரன்

அன்பு அம்மா
K.சொர்ணம்


////////////////////////////////////////////////