December 07, 2018

திருக்குறள்-பதிவு-64


                       திருக்குறள்-பதிவு-64

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை விளக்கும்
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions
of the
Heavenly Spheres
என்ற நூலை
கி.பி.1530-ல்
முடித்திருந்தாலும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அந்த நூலை
அச்சிட்டு
வெளியிடவில்லை

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய நூலை
அச்சிட்டு
வெளியிடாததற்கு
காரணம்
அவருக்கு ஏற்பட்ட
அச்சமே ஆகும்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வாழ்ந்த
கால கட்டத்தில்
பைபிளுக்கு
எதிராக கருத்து
சொல்பவர்களையும் ;
கிறிஸ்தவ 
மதத்திற்கு
எதிராக நடந்து
கொள்பவர்களையும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
செயல்படுபவர்களையும் ;
சிறிது கூட
கருணை காட்டாமல்
சிறையில் இட்டு
சித்திரவதைகள்
செய்வதும் ;
உயிரோடு எரித்து
கொல்வதும் ;
போன்ற
விரும்பத்தகாத
கொடுமையான
செயல்கள்
நடைபெற்றுக்
கொண்டிருந்த
காலகட்டம்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
கண்டுபிடிப்பு
பைபிளில் உள்ள
கருத்துக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
கிறிஸ்தவ
மதவாதிகளுக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
தன்னுடைய
கண்டுபிடிப்பை
நூலாக
அச்சிட்டு வெளியிட
அஞ்சினார்.

கிறிஸ்தவ
மதவாதிகளின்
மிரட்டலுக்கு
பயந்து ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
பயந்து ;
தண்டனை என்ற
பெயரில்
அவர்கள்
செய்யும்
கொடுமையான
செயல்களுக்குப்
பயந்து ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தனது நூலை
அச்சிடாமலே
வைத்திருந்தார்.

தான் இறந்த
பின்பு தான்
தன்னுடைய நூலான
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
என்ற நூல் அச்சிட்டு
வெளியிடப் பட
வேண்டும் என்று
யோசித்து
வைத்து இருந்தார்

ஆனால்
மறைவாக அந்நூல்
ஜெர்மனிக்கு எடுத்துச்
செல்லப்பட்டு
நூரம்பர்க்கில் (Nuremberg)
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அவர்களுடைய
பாதிரி நண்பர்
கெய்ல் ஆஃப்குல்ம்
(Bishop Giese of kulm)
என்பவருடைய
உதவியால்
1543-ல்
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions
of the
Heavenly Spheres
என்ற நூல்
பதிப்பானது

1543-ஆம் ஆண்டு
மரணப் படுக்கையில்
நோயின் தாக்கத்தால்
துவண்டு போய்
அவதிகள் பலவற்றை
அனுபவித்துக்
கொண்டு ,
இறக்கும் நிலையில்
பக்கவாதம் தாக்கி
ஆழ்ந்த மயக்க
நிலையில் இருந்தார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
ஆழ்நிலை மயக்கத்தில்
அவர் இருந்த போது
அவர் எழுதிய நூலான
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
என்ற நூல் அச்சிட்டு
எடுத்துவரப்பட்டு
அவரது கரங்களில்
வைக்கப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  7-12-2018
///////////////////////////////////////////////////////////


December 06, 2018

திருக்குறள்-பதிவு-63


                       திருக்குறள்-பதிவு-63

கி.பி.87-150
ஆண்டுகளில் வாழ்ந்த
கிரேக்க ஞானி
டாலமி (Ptolemy)
தான் எழுதிய
இரண்டு நூல்களான
மாபெரும்
வானியல் ஞானி ;
(The Great
Astronomer)
அல்மகெஸ்ட் ;
(Almagest)
என்னும் இரண்டு
நூல்களில் தன்னுடைய
பூமி மையக்
கோட்பாட்டை விளக்கி
சொல்லி இருந்தார்

பூமியே பிரபஞ்சத்தின்
மையம் ஆகும் ;
அது அசையாமல்
நகராமல் அப்படியே
நிலைத்து நிற்கிறது ;
எல்லா அண்டங்களும்
பிரபஞ்சத்தின்
மையமாக இருக்கும்
பூமியை நோக்கி
வருகின்றன ;

பூமியை
மையமாக வைத்து
நிலவு,
புதன், வெள்ளி,
சூரியன், செவ்வாய்,
வியாழன், சனி
எனக் கூறப்படும்
வரிசையில்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
சுற்றி வருகின்றன ;

டாலமி சொன்ன
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்ற
பூமி மையக் கோட்பாடு
பைபிளில் உள்ள
கருத்துக்கு
ஒன்றுபட்டு இருந்த
காரணத்தினாலும் ;
ரோமன் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
ஏற்றுக் கொண்ட
காரணத்தினாலும் ;
கிறிஸ்தவ
மதவாதிகளால்
ஒப்புக் கொள்ளப்பட்ட
காரணத்தினாலும் ;
1500 ஆண்டுகளாக
டாலமியின் பூமி
மையக் கோட்பாடு
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு
வந்தது

1500 ஆண்டுகளாக
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்ற டாலமியின்
பூமி மையக்
கோட்பாட்டு
தவறு என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை சொன்ன
காரணத்திற்காக
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அச்சுறுத்தப்பட்டார்

பல்வேறு
அச்சுறுத்தல்களுக்கும்
இடையூறுகளுக்கும்
இடையில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
ஆராய்ச்சியை தொடர்ந்து
செய்து கொண்டு
இருந்தார்,

1517-ஆம்
ஆண்டு முதல்
1530-ஆம்
ஆண்டு வரை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பான
சூரிய மையக்
கோட்பாட்டை
பல்வேறு குறியீடுகள்
எண்கள்
எழுத்துக்கள்
வரை படங்கள்
ஆகியவற்றின் மூலம்
பல்வேறு
உதாரணங்கள் மூலம்
எடுத்துக் காட்டி  
அவர் தன்னுடைய
இரண்டாவது நூலான
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions of the
Heavenly Spheres
என்ற தன்னுடைய
நூலில் தன்னுடைய
சூரிய மையக்
கோட்பாட்டை
விளக்கி உள்ளார்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
இரண்டாவது நூலில்
வலியுறுத்தி சொன்ன
கோட்பாடு இது தான்
பூமி தினமும்
தன்னச்சில்
தன்னைத் தானே
ஒரு முறை
சுற்றிக் கொண்டு
சூரியனையும்
ஓராண்டில்
சுற்றி வருகிறது
அந்த சமயம் பூமி
பம்பரம் போன்று
தலை சாய்ந்து
ஆடுகிறது
பிற அண்டங்களும்
சூரியனை மையமாக
வைத்து சுற்றி
வருகின்றன
பிரபஞ்சத்தின்
உண்மையான மையம்
சூரியன்,
பூமி இல்லை
சூரியனை
விண்கோள்கள்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
(Uniform Motion
in Circular Orbits)
சுற்றி வருகின்றன
என்று ஆணித்தரமாக
கூறினார்

---------  இன்னும் வரும்
---------  06-12-2018
///////////////////////////////////////////////////////////


December 04, 2018

திருக்குறள்-பதிவு-62


                      திருக்குறள்-பதிவு-62

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
(Nicolaus Coper Nicus)
போலந்து நாட்டின்
ராயல் புருசியாவில்
தோர்ன் என்ற நகரில்
1473 -ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம்
19-ஆம் தேதி
பிறந்தார்

இவரது தந்தை
கிராக்கொவ் நகரில்
பெரிய வணிகர்
தாயார்
பார்பரா வாட்சன்ராட்
தோர்ன் நகரின்
மிகப் பெரிய
செல்வந்தரின் மகள்

இவர்களுக்கு
நான்கு பிள்ளைகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தான்
கடைசி பிள்ளை
11-வது வயதில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தன்னுடைய
அப்பாவை இழந்தார்

நிக்கோலஸின்
தாய்மாமன்
லூகாஸ்
வாக்ஸன்ரோடு
என்பவர்
நிக்கோலஸையும்
அவரது உடன்பிறப்புகள்
ஒரு சகோதரர்
இரண்டு சகோதரிகள்
ஆகியோரையும்
வளர்த்தார்

கணிதப் பேராசிரியர்
டாமினிகோ நோவாரா
(DOMENICO NOVARA)
என்பவருடைய வீட்டில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தங்கி இருக்க
வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டது
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வானியல், பூகோளம்
ஆகியவற்றில்
ஆர்வம் எழக்
காரணமாக இருந்தவர்
டாமினிகோ நோவாரா

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் மற்றும்
டாமினிகோ நோவாரா
இருவரும் சேர்ந்து
வானத்தில் உள்ள
விண்மீன்களை
உற்று கவனிப்பதும்
சந்திர கிரகணத்தை
ஆராய்வதும்
போன்ற செயல்களைச்
செய்தனர்

டாலமி மற்றும்
கிரேக்க விஞ்ஞானிகளின்
வானியல் கொள்கைகளை
டாமினிகோ நோவாரா
அவருக்கு கற்பித்தார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
டாலமியின் பூமி மையக்
கோட்பாட்டை
படித்து அதை
ஏற்றுக் கொள்ளவில்லை

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
மருத்துவப் படிப்பை
தொடராது வெறும்
மதச் சட்ட்த்தில்
டாக்டர் பட்டம் வாங்கி
போலந்துக்கு சென்றார்

அங்கே பிரௌன்பர்க்
என்னும் நகரில்
கிறிஸ்துவப் பாதிரியாக
நியமனம் ஆகிப்
பணிபுரிந்து வந்தார்,.

இத்தகைய
சூழ்நிலையில்
1514-ல் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ் அவர்கள்
Commentariolus
(Latin
For “Small
Commentary”)
என்ற 40 பக்கங்கள்
கொண்ட புத்தகம்
ஒன்றை வெளியிட்டார்
அதில் முக்கியமாக
7 கோட்பாடுகள்
கூறப்பட்டன

அதில் சொல்லப்பட்ட
முக்கியமான
கோட்பாடு இது தான்
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்ற வில்லை
சூரியனை மையமாக
வைத்து தான்
பூமி சுற்றுகிறது
என்பதே அந்த
கோட்பாடு

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் சேகரித்து
வைத்திருந்த
பல தகவல்களையும்
தனக்கு முன்னர்
பலர் சேகரித்து
வைத்திருந்த
தகவல்களையும்
வைத்து பல
ஆண்டுகளாக
மக்கள் நம்பிக்
கொண்டிருந்த
பூமி மையக்
கோட்பாட்டை மாற்றி
சூரிய மையக்
கோட்பாட்டை
எடுத்து வைத்தார்

மேலும் அறிவியலில்
பல ஆண்டுகளாக
பலர் சேகரித்து
வைத்திருக்கும்
தகவல்களை
வைத்து ஒரு
முடிவுக்கு வரலாம்
என்ற புதியதொரு
வழிமுறையையும்
கொண்டு வந்தார்

அதற்கு முன்பு
வரை யாராவது
ஒருவரின் எண்ணத்தில்
தோன்றுவது தான்
கண்டுபிடிப்புகள்
என்ற நிலையில்
இருந்தன

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இதனை
மாற்றிக் காட்டினார்
பல தகவல்களை
வைத்து இப்படித்தான்
இருக்க வேண்டும்
என்று முடிவுக்கு
வந்தார்
இப்போது பல
கண்டுபிடிப்புகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வழிமுறையையே
பின்பற்றி
நடத்தப்படுகின்றன

இதனை அறிமுகப்
படுத்தியவரும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்பதை
நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  04-12-2018
///////////////////////////////////////////////////////////