December 09, 2018

திருக்குறள்-பதிவு-65


                       திருக்குறள்-பதிவு-65

வானியலாளர்,
கணிதவியலாளர்
பொருளியலாளர்
என பல்வேறுபட்ட
துறைகளில்
உயர்ந்த திறமைகளை
வெளிப்படுத்திய
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் கைகளில்
அவர் எழுதிய நூல்
வைக்கப்பட்ட பிறகு
சிறிது நாட்கள்
கழித்து அதாவது
1543-ஆம் ஆண்டு
மே மாதம் 24-ஆம் நாள்
இவ்வுலக வாழ்வை
நீத்தார் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இறந்தவுடன்
அவருடன் அவர்
கண்டுபிடித்த
சூரிய மையக் கோட்பாடும்
இறந்து விட்டது என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
நினைத்துக் கொண்டு
இருந்தனர்.

ஆனால்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் சூரிய மையக்
கோட்பாட்டை
நிறுவும் முயற்சியில்
இறங்கியவுடன் தான்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் சூரிய மையக்
கோட்பாடு அவருடன்
இறக்கவில்லை
இன்னும் இந்த
உலகத்தில் உயிரோடு
இருக்கிறது என்பதை
பல ஆண்டுகள் கழித்து
காலதாமதாகத் தான்
புரிந்து கொண்டனர்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின்
அண்டக் கோள்களின்
சுற்றுகள் என்ற நூல்
1517-ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டு
13 ஆண்டுகள் கழித்து
1530-ஆம் ஆண்டு
எழுதி முடிக்கப்பட்டது

1530-ஆம் ஆண்டு
எழுதி முடிக்கப்பட்ட நூல்
13 ஆண்டுகள் கழித்து
1543-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்டது

1543-ஆம் ஆண்டு
பதிப்பிக்கப்பட்ட நூல்
73 ஆண்டுகள் கழித்து
1616-ஆம் ஆண்டு
தடை செய்யப்பட்டது

1616-ஆம் ஆண்டு
நூலிற்கு விதிக்கப்பட்ட
தடையானது
18-ஆம் நூற்றாண்டின்
இறுதிவரை
விலக்கப்படவில்லை

1616-ஆம் ஆண்டு
ரோமபுரியில் ஐந்தாம்
போப்பாண்டவர் பால்
(Pope Paul V)
நூல் பதிப்பு ஆசிரியர்
ஒருவருக்கு கடுமையான
ஓர் கண்டன
அறிக்கையை வெளியிட்டார்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் எழுதிய
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
(Revolutions of the
Heavenly Globes)
என்னும் நூலில்
சொல்லப்பட்ட கோட்பாட்டை
உங்களது செய்தித்தாள்
வெளியிட்டிருப்பது
எங்களது கவனத்திற்கு
வந்துள்ளது சூரியன்
பிரபஞ்சத்தின் நடுவில்
அமர்ந்திருப்பதாகவும்
பூமி உள்பட மற்ற
கோள்கள் அதைச்
சுற்றி வருவதாகவும்
அந்த கோட்பாடு
தெரிவிக்கிறது

படைப்பின் கருத்தை
இந்த உலகத்திற்கு
எடுத்து உரைக்கும்
பைபிளைப் பின்பற்றும்
மதக்கோயில் உபதேசத்தை
அந்த கோட்பாடு
நேரடியாக எதிர்க்கிறது
தோற்ற அடிப்படைகளைக்
கூறும் வேதநூல்
பண்டைய டெஸ்டமன்ட்
(Book of Genesis)
பூமி தான் பிரபஞ்ச
மையம் சூரியன் இல்லை
என்று தெளிவாகக் கூறுகிறது

பைபிளை அவமதிக்கும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் எழுதிய
அந்நூல் இன்றிலிருந்து
படிக்க படாத நூலாக
ஒதுக்கப்பட்டிருக்கிறது
அந்த நூலை ஆதரிப்போர்
கிறிஸ்தவ மதத்
துரோகியாகக் (Heres)
கருதப்பட்டுக் கடும்
தண்டனைக்குள்ளாவார்கள்
என்று அறிவிக்கிறோம்
மேலும், மரண
தண்டனையும்
விதிக்கப்படலாம் என்பது
நன்றாய் உமது நினைவில்
இருக்கட்டும்

இவ்வறிப்பைக்
கேள்விப்பட்டதும்
நீங்கள் இனிமேல்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் உடைய கருத்தை
உமது செய்தித் தாளில்
ஒரு போதும் பதிப்பிக்காமல்
உமது தவறைத்
திருத்திக் கொள்வீர் என்று
உறுதியாக நம்புகிறோம்
என்று சொன்னதிலிருந்து
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் கோட்பாடு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர் மீது
எவ்வளவு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தி
இருக்கிறது என்பதை நாம்
தெரிந்து கொள்ளலாம்

1500 ஆண்டுகளாக
மக்களால் நம்பப்பட்டு வந்த
டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாட்டை
தவறு என்று சொல்லி
சூரியனை மையமாக
வைத்தே பூமி சுற்றுகிறது
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை இந்த
உலகத்திற்கு அளித்து
அறிவு விளக்கை
ஏற்றி வைத்த
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸின் அறிவு
விளக்கை மக்கள்
மத்தியில் கொண்டு
செல்வதற்கு அரும்பாடு
பட்டவர்கள் தான்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  08-12-2018
///////////////////////////////////////////////////////////


December 07, 2018

திருக்குறள்-பதிவு-64


                       திருக்குறள்-பதிவு-64

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை விளக்கும்
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions
of the
Heavenly Spheres
என்ற நூலை
கி.பி.1530-ல்
முடித்திருந்தாலும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அந்த நூலை
அச்சிட்டு
வெளியிடவில்லை

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய நூலை
அச்சிட்டு
வெளியிடாததற்கு
காரணம்
அவருக்கு ஏற்பட்ட
அச்சமே ஆகும்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வாழ்ந்த
கால கட்டத்தில்
பைபிளுக்கு
எதிராக கருத்து
சொல்பவர்களையும் ;
கிறிஸ்தவ 
மதத்திற்கு
எதிராக நடந்து
கொள்பவர்களையும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
செயல்படுபவர்களையும் ;
சிறிது கூட
கருணை காட்டாமல்
சிறையில் இட்டு
சித்திரவதைகள்
செய்வதும் ;
உயிரோடு எரித்து
கொல்வதும் ;
போன்ற
விரும்பத்தகாத
கொடுமையான
செயல்கள்
நடைபெற்றுக்
கொண்டிருந்த
காலகட்டம்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
கண்டுபிடிப்பு
பைபிளில் உள்ள
கருத்துக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
கிறிஸ்தவ
மதவாதிகளுக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
தன்னுடைய
கண்டுபிடிப்பை
நூலாக
அச்சிட்டு வெளியிட
அஞ்சினார்.

கிறிஸ்தவ
மதவாதிகளின்
மிரட்டலுக்கு
பயந்து ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
பயந்து ;
தண்டனை என்ற
பெயரில்
அவர்கள்
செய்யும்
கொடுமையான
செயல்களுக்குப்
பயந்து ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தனது நூலை
அச்சிடாமலே
வைத்திருந்தார்.

தான் இறந்த
பின்பு தான்
தன்னுடைய நூலான
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
என்ற நூல் அச்சிட்டு
வெளியிடப் பட
வேண்டும் என்று
யோசித்து
வைத்து இருந்தார்

ஆனால்
மறைவாக அந்நூல்
ஜெர்மனிக்கு எடுத்துச்
செல்லப்பட்டு
நூரம்பர்க்கில் (Nuremberg)
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அவர்களுடைய
பாதிரி நண்பர்
கெய்ல் ஆஃப்குல்ம்
(Bishop Giese of kulm)
என்பவருடைய
உதவியால்
1543-ல்
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions
of the
Heavenly Spheres
என்ற நூல்
பதிப்பானது

1543-ஆம் ஆண்டு
மரணப் படுக்கையில்
நோயின் தாக்கத்தால்
துவண்டு போய்
அவதிகள் பலவற்றை
அனுபவித்துக்
கொண்டு ,
இறக்கும் நிலையில்
பக்கவாதம் தாக்கி
ஆழ்ந்த மயக்க
நிலையில் இருந்தார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
ஆழ்நிலை மயக்கத்தில்
அவர் இருந்த போது
அவர் எழுதிய நூலான
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
என்ற நூல் அச்சிட்டு
எடுத்துவரப்பட்டு
அவரது கரங்களில்
வைக்கப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  7-12-2018
///////////////////////////////////////////////////////////


December 06, 2018

திருக்குறள்-பதிவு-63


                       திருக்குறள்-பதிவு-63

கி.பி.87-150
ஆண்டுகளில் வாழ்ந்த
கிரேக்க ஞானி
டாலமி (Ptolemy)
தான் எழுதிய
இரண்டு நூல்களான
மாபெரும்
வானியல் ஞானி ;
(The Great
Astronomer)
அல்மகெஸ்ட் ;
(Almagest)
என்னும் இரண்டு
நூல்களில் தன்னுடைய
பூமி மையக்
கோட்பாட்டை விளக்கி
சொல்லி இருந்தார்

பூமியே பிரபஞ்சத்தின்
மையம் ஆகும் ;
அது அசையாமல்
நகராமல் அப்படியே
நிலைத்து நிற்கிறது ;
எல்லா அண்டங்களும்
பிரபஞ்சத்தின்
மையமாக இருக்கும்
பூமியை நோக்கி
வருகின்றன ;

பூமியை
மையமாக வைத்து
நிலவு,
புதன், வெள்ளி,
சூரியன், செவ்வாய்,
வியாழன், சனி
எனக் கூறப்படும்
வரிசையில்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
சுற்றி வருகின்றன ;

டாலமி சொன்ன
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்ற
பூமி மையக் கோட்பாடு
பைபிளில் உள்ள
கருத்துக்கு
ஒன்றுபட்டு இருந்த
காரணத்தினாலும் ;
ரோமன் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
ஏற்றுக் கொண்ட
காரணத்தினாலும் ;
கிறிஸ்தவ
மதவாதிகளால்
ஒப்புக் கொள்ளப்பட்ட
காரணத்தினாலும் ;
1500 ஆண்டுகளாக
டாலமியின் பூமி
மையக் கோட்பாடு
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு
வந்தது

1500 ஆண்டுகளாக
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்ற டாலமியின்
பூமி மையக்
கோட்பாட்டு
தவறு என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை சொன்ன
காரணத்திற்காக
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அச்சுறுத்தப்பட்டார்

பல்வேறு
அச்சுறுத்தல்களுக்கும்
இடையூறுகளுக்கும்
இடையில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
ஆராய்ச்சியை தொடர்ந்து
செய்து கொண்டு
இருந்தார்,

1517-ஆம்
ஆண்டு முதல்
1530-ஆம்
ஆண்டு வரை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பான
சூரிய மையக்
கோட்பாட்டை
பல்வேறு குறியீடுகள்
எண்கள்
எழுத்துக்கள்
வரை படங்கள்
ஆகியவற்றின் மூலம்
பல்வேறு
உதாரணங்கள் மூலம்
எடுத்துக் காட்டி  
அவர் தன்னுடைய
இரண்டாவது நூலான
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions of the
Heavenly Spheres
என்ற தன்னுடைய
நூலில் தன்னுடைய
சூரிய மையக்
கோட்பாட்டை
விளக்கி உள்ளார்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
இரண்டாவது நூலில்
வலியுறுத்தி சொன்ன
கோட்பாடு இது தான்
பூமி தினமும்
தன்னச்சில்
தன்னைத் தானே
ஒரு முறை
சுற்றிக் கொண்டு
சூரியனையும்
ஓராண்டில்
சுற்றி வருகிறது
அந்த சமயம் பூமி
பம்பரம் போன்று
தலை சாய்ந்து
ஆடுகிறது
பிற அண்டங்களும்
சூரியனை மையமாக
வைத்து சுற்றி
வருகின்றன
பிரபஞ்சத்தின்
உண்மையான மையம்
சூரியன்,
பூமி இல்லை
சூரியனை
விண்கோள்கள்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
(Uniform Motion
in Circular Orbits)
சுற்றி வருகின்றன
என்று ஆணித்தரமாக
கூறினார்

---------  இன்னும் வரும்
---------  06-12-2018
///////////////////////////////////////////////////////////