December 17, 2018

திருக்குறள்-பதிவு-69


                       திருக்குறள்-பதிவு-69

1581-ஆம் ஆண்டு
பிரான்ஸ் வந்த
ஜியார்டானோ புருனோ
பிரான்ஸிலுள்ள
பாரிசில் அரசர்
மூன்றாம் ஹென்றியின்
(Henry III) ஆதரவுடன்
1581-1582
1582-1583
ஆகிய இரண்டு
ஆண்டுகள் தங்கினார்

இங்கே ஜியார்டானோ
புருனோ தன்னுடைய
அசாத்திய பேச்சுத்
திறமையால் தனக்கென்று
பல நண்பர்களை
உருவாக்கிக் கொண்டார்
இவர்கள் அனைவரும்
ஜியார்டானோ புருனோ
அவர்களின் பேச்சால்
கவரப்பட்டவர்கள் ;
இவர்கள் அனைவரும்
கடவுள் தொடர்பான
செயல்களில்
நம்பிக்கை உள்ளவர்கள் ;
நினைவுக் கலையை
பலப்பல வடிவங்களில்
அவர்களுக்கு
ஜியார்டானோ புருனோ
சொல்லித் தந்தார்.

ரோமாண்டுலாலி
(Raymond Lully)
பற்றியும்,
நினைவுக்கலையின்
அற்புதம் பற்றியதுமான
இவரின் வெளியீடுகள்
பாரிஸில் தான் நிகழ்ந்தன.

ஜியார்டானோ புருனோ
1583-ஆம் ஆண்டு
இங்கிலாந்து சென்றார்
அங்கே காஞ்டெலாஜோ
என்ற நண்பரின்
உதவியுடன்
இங்கிலாந்து அரசியை
(Queen Elizabeth I)
அணுகினார்.
1583-1584
1584-1585
ஆகிய இரண்டு ஆண்டுகள்
இங்கிலாந்தில் தங்கினார்
இங்கிலாந்தில் இரண்டு
ஆண்டுகள் வாழ்ந்த
போதே அவரது
சிறந்த படைப்புகள்
வெளியிடப்பட்டன
இங்கு தான் பிரபஞ்சம்
பற்றிய தனது புதிய
கருத்தை புத்தகமாக
வெளியிட்டார்
ஜியார்டானோ புருனோ

இங்கிலாந்தில் தான்
ஜியார்டானோ புருனோ
உலகப் பிரசித்திப்
பெற்ற தன்னுடைய
புத்தகங்களை ;
வரலாற்றை மாற்றி
அமைத்த தன்னுடைய
புத்தகங்களை ;
மிகப் பெரும்
பிரச்சினைகளை
ஏற்படுத்திய தன்னுடைய
புத்தகங்களை ;
வெளியிட்டார்


டa Cena de
le Ceneri
(1584 ; The Ash
Wednesday Supper)


De I'infinito
universo et mondi
(1584 ; On the
Infinite Universe
and Worlds)


De la causa,
principio et uno
(1584 ; Concerning
the Cause,
principle, and One)

இந்த மூன்று
புத்தகங்களிலும்
ஜியார்டானோ புருனோ
தன்னுடைய இரண்டு
முக்கியமான
கருத்துக்களை விளக்கமாக
குறிப்பிட்டு இருந்தார்

ஒன்று
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கருத்து சரியானது
என்ற கருத்தை
வெளியிட்டு இருந்தார்

இரண்டு
விண்மீன்களுக்கு
இடையே ஈதர் என்ற
காற்று உள்ளது
என்ற கருத்தை
வெளியிட்டு இருந்தார்.

பிரபஞ்சம்
எல்லையில்லாதது ;
முடிவில்லாதது ;
பிரபஞ்சத்தின் ஒரு
பகுதியாக உள்ளது தான்
சூரிய குடும்பம் ;

சூரிய குடும்பத்தில்
பூமி தன்னைத்தானே
சுற்றுகிறது ;
பூமி தன்னைத்தானே
சுற்றுவதால் இரவுபகல்
உண்டாகிறது ;
சூரியன் என்பது இரவு
வானத்தில் தெரியும்
விண்மீன் போல
இருப்பது ஆகும் ;
“””“”சூரியன் தான்
பூமி போன்ற
கோள்களின் மையம்””””
சூரியனை மையமாக
வைத்துத் தான்
பூமி சுற்றுகிறது
இவையனைத்தும்
சேர்ந்தது தான்
சூரிய குடும்பம் ;

வானத்தில் தெரியும்
பல்வேறுபட்ட
விண்மீன்களுக்கும்
இதே போன்ற
கோள்கள் உண்டு ;
விண்மீன்கள்
பிரபஞ்ச வெளியில்
விரவிக் கிடக்கின்றன ;

விண்மீன்கள் இயற்பியல்
விதிப்படி இயங்குகின்றன ;
விண்மீன்களுக்கு
இடையே ஈதர் என்ற
காற்று உள்ளது ;
என பல்வேறுபட்ட
கருத்துக்களை விதைத்தார்
ஜியார்டானோ புருனோ

டாலமி சொன்ன
பூமி மையக் கொள்கை
தவறு என்றும் ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன சூரிய
மையக் கொள்கையே
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்னது அவருக்கு
பிரச்சினையை கொஞ்சம்
கொஞ்சமாக கொண்டு
வந்து கொண்டு இருந்தது

---------  இன்னும் வரும்
---------  17-12-2018
///////////////////////////////////////////////////////////


December 16, 2018

திருக்குறள்-பதிவு-68


                       திருக்குறள்-பதிவு-68

1576-ஆம் ஆண்டு
ஜியார்டானோ
புருனோ
ரோமை விட்டு
வெளியேறினார்

அவர் முதலில்
ஜெனிவா (Geneva)
சென்றார்

1579-ஆம் ஆண்டு
ஜெனிவாவிலிருந்து
டௌலோவ் (Toulouse)
சென்றார்

அங்கு
1579 முதல் 1581 வரை
இரண்டு ஆண்டுகள்
தங்கினார்
முதுகலை
பட்டம் பெற்றார்
கற்பித்தல் தொழிலை
நடத்தி வந்தார்

ஜியார்டானோ புருனோ
காலத்தில்
அரிஸ்டாட்டில்
சொல்வது தான்
சரியானது என்றும்
அது தான் அறிவியல்
என்றும் இருந்தது

அரிஸ்டாட்டில்
சொன்னால்அனைத்தும்
சரியானதாக இருக்கும்
என்று அனைவரும்
கண்மூடித்தனமாக
நம்பிக் கொண்டிருந்த
காலகட்டம்

அந்தக் காலகட்டத்தில்
வாழ்ந்த மக்கள்
ஒருவர் கூட
அரிஸ்டாட்டில்
சொன்ன கண்டுபிடிப்பில்
தவறு இருக்கிறது
என்று சொன்னால்
ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்

நாம் ஒருவரை
கண்மூடித் தனமாக
நம்பி விட்டால்
அவர் உண்மையாக
தப்பு செய்து
இருந்தாலும்
அவர் தப்பு
செய்திருக்கிறார்
என்று பிறர் சொன்னால்
நாம் அந்த உண்மையை
ஏற்றுக் கொள்ள
மாட்டோம்

அத்தகைய ஒரு
மனநிலையில்
அதாவது
அரிஸ்டாட்டில் செய்த
தப்பை சொன்னாலும்
அதை ஏற்றுக்
கொள்ளாத மன
நிலையில்
மக்கள் இருந்தனர்

அதாவது மக்கள்
அனைவரும்
அரிஸ்டாட்டிலின் மீதும்
அவருடைய அறிவியல்
கண்டுபிடிப்பின்
மீதும் அளவற்ற
நம்பிக்கை
வைத்து இருந்தனர்
அரிஸ்டாட்டிலை
விஞ்ஞான
உலகத்தின் கடவுளாக
நினைத்திருந்தனர்

அந்த
காலகட்டத்தில் தான்
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து பல்வேறு
விதமான கருத்துக்களை
வலியுறுத்தி
அரிஸ்டாட்டில்
சொன்ன கருத்துக்களை
தப்பு என்று
எடுத்துக் காட்டுகளுடன்
எடுத்துச் சொல்லி
கட்டுரைகள்
எழுதி இருந்தார்

ஆண்களுக்கும்
பெண்களுக்கும்
பற்களின்
எண்ணிக்கை வேறுபடும்
பெண்களின் பற்களின்
எண்ணிக்கை
ஆண்களின் பற்களின்
எண்ணிக்கையை
விட குறைவு
என்று அரிஸ்டாட்டில்
எழுதி இருந்தார்

அதைத் தவறு
என்று சுட்டிக் காட்டி
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து
கருத்து சொன்னது
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்க்கிறார்
என்ற நிலையை
உருவாக்கி விட்டது

அதுமட்டுமல்லாமல்
அரிஸ்டாட்டிலின்
பெரும்பாலான
கருத்துக்கள்
பைபிளில் உள்ள
கருத்துக்களுடன்
ஒன்றுபட்டு இருந்த
காரணத்தினால்
ஜியார்டானோ  புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து
கருத்து சொன்னது
பைபிளையும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
மறைமுகமாக
ஜியார்டானோ
புருனோ எதிர்க்கிறார்
என்ற நிலையை
உருவாக்கி விட்டது

அரிஸ்டாட்டிலின்
கருத்து தவறு என்றால்
பைபிளின் கருத்தும்
தவறு என்று தானே
அர்த்தம்

பைபிளை மக்களிடம்
கொண்டு செல்லும்
கத்தோலிக் கிறிஸ்தவ
திருச்சபையின்
செயல்களும் தவறு
என்று தானே அர்த்தம்

ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலின்
கருத்தை தவறு
என்று சொன்னதன்
மூலமாக
மறைமுகமாக
பைபிளையும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
இழிவு படுத்தியது
போல் ஆகிவிட்டது

எனவே
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
ஜியார்டானோ புருனோ
மீது அளவற்ற
கோபம் கொண்டது

அதன் விளைவாக,
ஜியார்டானோ புருனோ
டௌலோவ்விலிருந்து
பிரான்ஸ் நோக்கி
1581-ஆம் ஆண்டு
பயணம் செய்ய
வேண்டியது
ஆகிவிட்டது

---------  இன்னும் வரும்
---------  16-12-2018
///////////////////////////////////////////////////////////


December 14, 2018

தவறான கருத்திற்கு பதில் !!


              தவறான கருத்திற்கு பதில் !!

#பெண்களைப் பற்றி
வில்லியம் கோல்டிங்
என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-

பெண்கள் தங்களை
ஆண்களுக்கு சமம் என்று
முட்டாள்தனமாக எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான் நினைக்கிறேன்…….

பெண்கள் ஆண்களுக்கு
நிகரானவர் இல்லை;

மாறாக, ஆண்களைவிட
பன்மடங்கு உயர்ந்தவர்கள்
பெண்கள்..

ஒரு பெண்ணிடம்
நீ எதையாவது கொடுத்தால்,
அவள் அதனை பெரிதாக்கி
சிறப்பு செய்துவிடுவாள்.

உன் உயிர்
அணுவைக் கொடு,
அவள் உனக்கு
ஒரு குழந்தையைத்
பெற்றுத் தருவாள்.

ஒரு வீட்டைக் கொடு
அதனை அவள்
குடும்பமாக
மாற்றிக்காட்டுவாள்……

நீ மளிகைப்
பொருட்களைக் கொடு
அவள் விருந்து படைப்பாள்..

நீ வெறும் புன்னகையை
செய்தால் போதும்

அவள் தன் இதயத்தையே
உனக்குக் பரிசளிப்பாள்……..

நீ கொடுப்பது எதுவாயினும்
அதனை பலமடங்கு
பெரிதாக்குவது
பெண்ணின் குணம்.

எனவே நீ அவளுக்கு
*சிறிய அளவில்
 துன்பம் தொல்லை*
கொடுத்தாயானால் அவள்
உடனே அதையே
டன் கணக்கில்
உனக்குத் திருப்பித்தருவாள்
என்பதைமட்டும்
எப்போதும் மறந்துவிடாதீர்.
///////////////////////////////////////////////////////////

ஒரு பெண்ணுக்கு நீ
கொடுப்பது எதுவாயினும்
அதை பலமடங்கு
பெரிதாக்குவது பெண்ணின்
குணம் அதாவது
நீ பெண்ணிற்கு
எதை கொடுத்தாலும்
அதை பெரிதாக்கி
டன் கணக்கில்
திருப்பித் தருவாள்
என்பது தான் இதில்
சொல்லப்பட்ட கருத்து
இந்த கருத்தே தவறானது

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
இப்போது அந்த பையன்
அந்த பெண்ணிடம்
காதலை காட்டுகிறான்
எதை கொடுத்தாலும்
பன்மடங்கு பெரிதாக்கி
டன் கணக்கில்
திருப்பிக் கொடுக்கும்
அந்த பெண்
அந்த பையனிடம் என்ன
செய்து இருக்க வேண்டும்
காதலை பன்மடங்காக
பெருக்கி அந்த பையனிடம்
காதலை கொடுத்திருக்க
வேண்டும் ஆனால்
அந்த பெண்
காதலைக் காட்டாமல்
வெறுப்பைக் காட்டுகிறாள்
அப்படி இருக்கும்போது
இந்தக் கருத்து எப்படி
சரியானது என்று
சொல்ல முடியும்


இந்த உலகம்
ஒரு பெண்ணிற்கு
எதை கொடுத்தாலும்
அதை பன்மடங்காக
பெருக்கி இரண்டு
நிலைகளில் அந்த பெண்
திருப்பித் தருவாள்

ஒன்று
ஒரு செயலை
ஒரு பெண் விரும்பினால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்

இரண்டு
ஒரு செயலை
ஒரு பெண்
விரும்பவில்லை என்றால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
அந்த பெண்ணிற்கு
அந்த பையனை
பிடித்து இருந்த
காரணத்தினால்
அவள் அந்த
பையனுக்கு தன்
காதலை பன்மடங்கு
திருப்பித் தருகிறாள்

ஒரு பையன்
ஒரு பெண்ணை
காதலிக்கிறான்
அந்த பெண்ணிடம் சென்று
நான் உன்னை
காதலிக்கிறேன்
நீ இல்லை என்றால்
நான் செத்து
விடுவேன் என்கிறான்
அந்த பையனை
அந்த பெண்ணிற்கு
பிடிக்கவில்லை
என்ற காரணத்தினால்
இப்போது அந்த பெண்
அந்த பையன் மீது
வெறுப்பை பன்மடங்கு
காட்டுகிறாள்

இப்போது
யோசித்துப் பாருங்கள்
ஒரு பெண்
அன்பு என்றாலும்
கோபம் என்றாலும்
பன்மடங்கு திருப்பித்
தருவாள் என்பது
தவறான கருத்து

ஒரு செயலை
ஒரு பெண் விரும்பினால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்
ஒரு செயலை
ஒரு பெண்
விரும்பவில்லை என்றால்
அதற்குரிய பலனை
அந்த பெண் பன்மடங்கு
திருப்பித் தருவாள்
என்பது தான்
சரியான கருத்து
என்பதை நாம்  உணர்ந்து
கொள்ள வேண்டும்

மேலும்,
ஆங்கில நாவலாசிரியர்
வில்லியம் கோல்டிங்
என்பவர் அயல்
நாட்டைச் சேர்ந்தவர்
சொன்னார் என்பதற்காக
அவருடைய கருத்து
சரியான கருத்து
என்று ஆகி விடாது

கம்பர்
இளங்கோவடிகள்
கண்ணதாசன்
பட்டுக் கோட்டை
கல்யாணசுந்தரம்
போன்ற  கணக்கிலடங்காத
மாபெரும் அறிவாளிகளை
நாம் மறந்து விட்டால்
இந்த நிலை தான்
தமிழகத்திற்கு
ஏற்படும் என்பது
நன்றாகத் தெரிகிறது

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
14-12-2018
//////////////////////////////////////////////