March 02, 2019

திருக்குறள்-பதிவு-116


                    திருக்குறள்-பதிவு-116

“கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
கருத்து சொல்லி,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டுக்
கொண்டிருந்தவர்களுடைய
நடவடிக்கைகளை அடக்க
வேண்டும் என்பதற்காக,
இரண்டு விதமான
முறைகள் அவர்களுக்கு
எதிராக கையாளப் பட்டன;”

ஒன்று :
விசாரணை இல்லாமல்
கொன்றனர்

இரண்டு :
விசாரணை செய்து
கொன்றனர்

“ பெரும்பான்மையான
மக்களால் இவர் யார்
என்று அறியப்படாமல்
இருப்பவர்கள் ;
மக்களுடைய ஆதரவு
எதுவும் இல்லாமல்
இருப்பவர்கள் ;
பணம், பதவி, அதிகாரம்
என்ற மூன்றில் ஒன்று
கூட இல்லாதவர்கள் ;
இவர்களில் யாரேனும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை, சர்ச்சுகள்,
பைபிள் ஆகியவற்றிற்கு
எதிராக செயல்பட்டால்
அவர்கள் விசாரணை
எதுவும் இல்லாமல் ;
இருந்த சுவடு தெரியாமல் ;
யாருக்கும் தெரியாமல்  ;
அழிக்கப்பட்டு வந்தனர்;”

“ஆனால்
பெரும்பான்மையான
மக்களால் இவர் யார்
என்று அறியப்பட்டு,
இருப்பவர்கள்  ;
மக்களுடைய ஆதரவு
பெற்று இருப்பவர்கள்
இருப்பவர்கள் ;
பணம், பதவி, அதிகாரம்
இந்த மூன்றைப் பெற்று
இருப்பவர்கள் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை, சர்ச்சுகள்,
பைபிள் ஆகியவற்றிற்கு
எதிராக செயல்பட்டால் ;
அவர்கள் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு அவருக்கு
எதிராக ஆதாரங்கள்
திரட்டப்பட்டு குற்றவாளி
என்று நிரூபிக்கப்பட்டு
சித்திரவதை செய்து
கொல்லப்பட்டு வந்தனர்; “

“ ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மதத்தில்
Father ஆக இருந்தவர் ;
உலக மக்களால்
நன்கு அறியப்பட்டவர் ;
தன்னுடைய பேச்சாலும்
எழுத்தாலும் ஐரோப்பாவையே
தன் வசப்படுத்தி
வைத்து இருந்தவர் ;
அவருடைய புரட்சிக்
கருத்துக்களால்
இளைய தலைமுறையினரை
தன் சொற்கேட்டு
நடக்க வைத்தவர் ;
அவருடைய
கருத்துக்களுக்கும் ;
எழுத்துக்களுக்கும் ;
பேச்சுகளுக்கும் ;மக்கள்
கட்டுப்பட்டு இருந்தனர்; “

“ ஐரோப்பா மக்களால்
தத்துவமேதை; விஞ்ஞானி ;
என்று போற்றப்பட்ட
அவரை - உலக
மக்களால் அறிவாளி
என்று போற்றப்பட்ட
அவரை - கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
சர்ச்சுகள் ; பைபிள் ;
ஆகியவற்றை எதிர்த்த
அவரை - அவ்வளவு
எளிதாக கொல்ல
முடியவில்லை - எனவே
அவரை விசாரணை என்ற
பெயரில் அலையவைத்து
சித்திரவதை செய்து
கொன்றனர் - ஆம்
ஜியார்டானோ புருனோ
மக்களால்
அறியப்பட்டவராக
இருந்த காரணத்தினால் ;
மக்கள் செல்வாக்கு
பெற்று இருந்த
காரணத்தினால்; - அவரை
விசாரணை என்ற
பெயரில் கொன்றனர் ;
விசாரணை இல்லாமல்
ஜியார்டானோ புருனோவை
கொல்ல முடியவில்லை;”

“ பல்லாயிரக்
கணக்கானவர்களில்
எட்டு நபர்கள் தனித்து
நிற்கிறார்கள்; – அந்த
எட்டு நபர்களில் இருந்தும்
ஜியார்டானோ புருனோ
தனித்து நிற்கிறார்;”

“பல்லாயிரக்
கணக்கானவர்களும் ;
எட்டு நபர்களும் ;
ஜியார்டானோ புருனோவும்
கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்று
தான் போராடினார்கள் ;
ஆனால் ஜியார்டானோ
புருனோ ம்ட்டும் தனித்து
நிற்பதற்கு ஒரு முக்கிய
காரணம் இருக்கிறது ;”

“ இவர்கள் யாரும்
கண்டுபிடித்து சொல்லாத
ஒரு விஷயத்தை
ஜியார்டானோ புருனோ
கண்டு பிடித்து சொன்னது
தான் முக்கிய காரணம் ;”

“ கிறிஸ்தவ மக்களும் ;
கிறிஸ்தவ மதத்திற்கு
மதம் மாறிய மக்களும் ;
தங்கள் தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்காக ;
கிறிஸ்தவ மதத்தின் மீது
நம்பிக்கை வைக்கும்
போது - கிறிஸ்தவ மதம்
கிறிஸ்தவர்களுடைய
நம்பிக்கையை தங்களுக்கு
சாதகமாக பயன் படுத்திக்
கொண்டு மக்களை
அடிமைகளாக வைத்து
உலகை அரசாள முயற்சி
செய்து கொண்டிருக்கிறது ;
என்ற உண்மையை
ஜியார்டானோ புருனோ
கண்டு பிடித்து கிறிஸ்தவ
மதத்தின் புனிதத் தன்மை
காப்பாற்றப்பட வேண்டும் ;
என்று போராடிய
காரணத்திற்காக ;
இயேசு கிறிஸ்து சொன்ன
கருத்துக்கள் மக்களை
போய் சென்று அடைவதற்கு
முயற்சிகள் செய்யப்படாமல்
மதத்தின் மூலம் உலக
மக்களை அடிமைகளாக
வைப்பதற்கு செய்யப்படும்
முயற்சிகளை எதிர்த்து
போராடிய காரணத்தினால் ;
தான் ஜியார்டானோ
புருனோ பல்லாயிரக்
கணக்கானவர்களிடமிருந்தும்
எட்டு நபர்களிடமிருந்தும்
தனித்து இருக்கிறார் ;”

“ ஜியார்டானோ
புருனோவுடன் சம்பந்தப்பட்ட
அந்த எட்டு நபர்களைப்
பற்றி இனி பார்ப்போம்……….!

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  02-03-2019
//////////////////////////////////////////////




March 01, 2019

திருக்குறள்-பதிவு-115


                     திருக்குறள்-பதிவு-115

“கல்வியும், விஞ்ஞானமும்
மதத்தின் கால் பிடித்து
அதற்கு அடிமையாக
இல்லாமல் ;
வியாபாரிகளுடைய
வியாபாரப் பொருளாக
இல்லாமல் ;
அரசியல் ஆதிக்கத்தின்
ஊடுருவல் இல்லாமல்  ;
சுதந்திரமாக தனித்து
இயங்கக்கூடியதாக 
இருந்தால் மட்டுமே
கல்வியும், விஞ்ஞானமும்
மனித இனத்திற்கு
பயனுள்ளதாக இருக்கும் ; “

“ மனித இனம்
அறிவு வளர்ச்சி பெற்று
அடிமையாக இல்லாமல் ;
சுயமாக சிந்தித்து
செயல்படக்கூடிய
நிலையில் இருக்கும் ; “

“ இல்லை என்றால்
அதாவது கல்வியும்,
விஞ்ஞானமும்
சுதந்திரமாக
இந்த உலகத்தில்
இல்லை என்றால்
மனித இனம்
மதத்திற்கு அடிமையாகவும்;
வியாபாரிகளுக்கு
வியாபாரப் பொருளாகவும் ;
அரசியல்வாதிகளுக்கு
தலையாட்டி
பொம்மைகளாகவும் ;
இருக்கக் கூடிய
சூழ்நிலை தான் ஏற்படும்: “

என்பதை இந்த
உலகத்தில் உள்ள மக்கள்
அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும்
என்பதை விளக்கும்
வகையில் ஜியார்டானோ
புருனோ சிலையின்
கைகளில் புத்தகம்
உள்ளது. “

“ ஜியார்டானோ புருனோ
சிலையின் இரண்டாவது
முக்கியமான கூறு
எட்டு நபர்களைப்
பற்றிக் கூறுகிறது “

“ சிலையின்
இரண்டாவது கூறில்
உலகின் பல்வேறு
நாடுகளில் வாழ்ந்த
புகழ்பெற்ற சிறந்த
தத்துவ மேதைகள் ;
அறிவிற் சிறந்த
விஞ்ஞானிகள் ;
ஆகியோரில் குறிப்பாக
எட்டு நபர்களின்
உருவங்கள் ;
பதக்கங்களாக ;
(Medallions)
சிலையில்
செதுக்கப்பட்டுள்ளது “

“ அந்த எட்டு நபர்களில்
ஆறு நபர்கள்
ஜியார்டானோ புருனோ
வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்த
சமகாலத்தவர்கள் ;
(Contemporaries).
இரண்டு நபர்கள்
ஜியார்டானோ
புருனோவிற்கு முன்பு
வாழ்ந்தவர்கள் ; “

“ இந்த எட்டு நபர்களுக்கும்
ஒரு முக்கிய
ஒற்றுமை உள்ளது,
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
நடைமுறைப்படுத்தி
இருக்கும் பழக்க
வழக்கங்களை
சீர்திருத்தம் செய்ய
வேண்டும் என்றும் ;

சர்ச்சுகளில் கடை
பிடிக்கப்பட்டு வரும்
மத பழக்கங்களை
மாற்ற வேண்டும்
என்றும் ;

பைபிளில் உள்ளவைகளில்
பெரும்பாலான கருத்துக்கள்
தவறானவைகளாக
இருக்கின்றன அவைகளை
திருத்த வேண்டும் ;

என்றும் கருத்து சொல்லி
போராடியவர்களில்
இந்த எட்டு
நபர்களும் அடங்குவர் “

“ இந்த எட்டு நபர்களும்
கிறிஸ்தவ மதத்தில்
உள்ள தவறுகளை
தைரியமாக எதிர்த்தவர்கள் ;

கிறிஸ்தவ மதத்தில்
உள்ள பல்வேறு
தவறுகளைச்
சுட்டிக் காட்டி
அதை சரிசெய்ய
வேண்டும் என்று
சொன்ன காரணத்திற்காக
பல்வேறு துன்பங்களை
அனுபவித்தவர்கள் ;

சிறைச்சாலையில்
சித்திரவதைகளால்
கொடுமைப் படுத்தப்
பட்டவர்கள் ;

சொல்லொணாத்
துயரை வாழ்வில்
சுமந்தவர்கள் ;

சிலர் உயிரோடு
எரித்துக் கொல்லப்
பட்டவர்கள் ;

சிலர் கொடுமையான
சித்திரவதைகள் மூலம்
கொல்லப்பட்டவர்கள் ;

இந்த எட்டு பேரும்
தாங்கள் கொண்ட
கொள்கைக்காக எதைக்
கண்டும் அஞ்சாமல்
முன்வைத்த காலை
பின் வைக்காமல்
வாழ்க்கையை
இழந்தவர்கள்;
உயிரை துறந்தவர்கள் ; “

“ ஜியார்டானோ
புருனோவுக்கும் இந்த
எட்டு நபர்களுக்கும்
உள்ள ஒற்றுமை
இது தான் “

“ கிறிஸ்தவ மதத்தில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொல்லி போராடிய
காரணத்திற்காக
வாழ்க்கையை
இழந்தவர்கள் ;
அதற்காக உயிரைத்
துறந்தவர்கள் ; “

“இந்த எட்டு நபர்களுக்கும்
ஜியார்டானோ புருனோவுக்கும்
உள்ள ஒற்றுமையை
நாம் நன்றாக யோசித்துப்
பார்த்தால் ஒரு
வியக்கத்தக்க உண்மை
நமக்கு புலப்படும்
அந்த உண்மை……………………………? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  01-03-2019
//////////////////////////////////////////////


February 28, 2019

திருக்குறள்-பதிவு-114


                  திருக்குறள்-பதிவு-114

“ ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
மூன்று முக்கியமான
கூறுகளைத் தன்னுள்
கொண்டதாக இருக்கிறது “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
அனைவரையும் ஈர்த்து
விடும் வகையில்
அமைந்து இருப்பதோடு
மட்டுமல்லாமல் - அந்த
சிலையைப் பார்ப்பவர்கள்
நின்று பார்த்து அதன்
பெருமையை உணர்ந்து
கொள்ள வேண்டும் என்ற
நினைப்பை தூண்டும்
விதத்திலும் அமைந்து
இருப்பது இந்த
சிலையின் சிறப்பாகும் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலையை
மக்கள் பார்க்கும்போது
அவர்களுடைய மனதில்
ஜியார்டானோ புருனோ
நிறைய தன்னம்பிக்கைகளை
கொண்ட ஒரு மனிதராகவும்
அஞ்சா நெஞ்சத்தையுடைய  
ஒரு மனிதராகவும் தெரிகிறார் “

 “ உலகில் உள்ள
பெரும்பாலான சிலைகளின்
தலை மேல் நோக்கி
வானத்தை நோக்கி
பார்த்த வண்ணம் இருக்கும் ;
அல்லது தலை நேராக
இந்த உலகத்தை பார்த்தபடி
இருக்கும்  ; - ஆனால்
ஜியார்டானோ புருனோவின்
சிலை இதிலிருந்து
மாறுபட்டு தலை கவிழ்ந்த
நிலையில் இருக்கிறது ;
அதாவது ஜியார்டானோ
புருனோ தான் சொன்ன
உண்மைகள் மக்களுக்கு
புரிந்திருக்கிறதா ? என்ற
சிந்தனையுடன் மக்களை
பார்க்கும்படியான
நிலையில் இருக்கிறது ;
அதேபோல் மக்கள் அவர்
சொன்ன கருத்துக்கள்
அனைத்தும்
உண்மையானதாக
இருக்குமோ  ? என்று
தலையை மேல் நோக்கி
ஆச்சரியத்துடன் அவரை
வியந்து பார்க்கும்
வண்ணம் சிலை
அமைந்து இருக்கிறது ; “

“ தன்னுடைய கருத்துக்கள்
எவ்வளவு தூரம் மக்களை
சென்று அடைந்திருக்கிறது
என்ற பதில் தெரியாத
கேள்விக் குறியுடன்……?
ஜியார்டானோ புருனோ
இருக்கிறார் என்பதைக்
குறிக்கும் வகையில்
ஜியார்டானோ
புருனோவின் முகம்
ஏதோ ஒன்றை சிந்தித்துக்
கொண்டு இருப்பதைக்
குறிக்கும் வகையில்
அமைந்து இருக்கிறது ; ‘

“ ஜியார்டானோ புருனோ
அணிந்து இருக்கின்ற
உடையை வைத்து
அவர் எத்தகைய மனிதர்
என்பதை அந்த சிலை
சொல்கிறது - அவர்
அணிந்து இருக்கின்ற
உடையானது தலை
முதல் பாதம் வரை
மூடிய நிலையில் இருக்கிறது
அவர் அணிந்து இருக்கின்ற
உடை ஒரு டொமினிக்கன்
அணியும் உடை
போன்று உள்ளது “


“ ஜியார்டானோ
புருனோவிற்கு அளிக்கப்பட்ட
சித்திரவதையின் மூலம்
அவர் பலமான மன
அழுத்தத்தில் இருந்த போதும்
விசாரணையின் போது
அவர் அளித்த பதில்கள்
மூலம் ஜியார்டானோ
புருனோ எவ்வளவு
நெஞ்சுறுதி படைத்த மனிதர்
என்பதை விசாரணை
அதிகாரிகள் இந்த
உலகத்தில் உள்ள
மக்களுக்கு தெரியப்
படுத்த நினைத்தனர்”

“ ஜியார்டானோ புருனோ
தான் சொன்ன உண்மைகளை
நிலைநாட்டுவதற்காக
தன்னுடைய உயிரே
போனாலும் பரவாயில்லை
என்று இறுதி வரை
பின்வாங்காமல் தான்
சொன்ன வார்த்தையில்
உறுதியாக இருந்தார் “

“ நீதி விசாரணையை
ஜியார்டானோ புருனோ
கையாண்ட விதம் பற்றி
குறிப்பிடும் குறிப்புகள்
அனைத்தும் அவருடைய
குணத்திற்கும் அவர்
வாழ்ந்து காட்டிய
வாழ்க்கைக்கும்
பொருத்தமானவையாக
இருக்கிறது “

“ ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
பழக்க வழக்கங்கள் ;
சர்ச்சுகள் கடைபிடித்து
வரும் மத பழக்கவழக்கங்கள் ;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கள் ஆகியவற்றிற்கு
எதிராக கருத்துக்கள் ;
கொண்டிருந்தாலும் - அவர்
கிறிஸ்தவ மதத்தின் மீதும்
இயேசு கிறிஸ்து மீதும்
மிகுந்த கடவுள் நம்பிக்கை
கொண்டவராக இருந்தார் “

“ இந்த உலகத்தைப் பற்றிய
அவருடைய எண்ணங்கள்
ஒரு போப்பிற்கு இருப்பதை
விடவும் வேறுபட்டு இருந்தது. “

“ ஜியார்டானோ புருனோ
சொன்ன அனைத்து
கருத்துக்களும் அறிவியல்
பூர்வமாக இருந்தது ;
ஆனால் போப் சொன்ன
அனைத்து கருத்துக்களும்
அறிவியல் பூர்வமாக
இல்லாமல் இருந்தது ;
எனவே, போப் சொன்ன
கருத்துக்களை மட்டுமே
வேத வாக்காக எடுத்துக்
கொண்டு வாழ்ந்து கொண்டு
இருந்த மக்களுக்கு போப்பின்
கருத்துக்கள் அனைத்தும்
பொய்யானது என்றும்
ஜியார்டானோ புருனோவின்
கருத்துக்கள் அனைத்தும்
உண்மையானது என்றும்
நினைக்கத் தொடங்கி
விட்டனர்.”

போன்ற கருத்துக்களை
வெளிப்படுத்தும் வகையில்
ஜியார்டானோ புருனோ
சிலையின் ஒரு கூறு
அமைந்து இருந்தது
மட்டுமல்லாமல்
ஜியார்டானோ புருனோ
கையில் வைத்திருக்கும்
புத்தகமும் ஒரு முக்கியமான
கருத்தை சொல்ல
வருகிறது ………………….?

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  28-02-2019
//////////////////////////////////////////////