April 27, 2019

பரம்பொருள்-பதிவு-7


                      பரம்பொருள்-பதிவு-7

“உலகம் முழுவதும்
காணப்படும் கற்கள்
அனைத்தையும்
எடுத்துக் கொண்டால்
அவைகளை
இரண்டே இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்”

ஒன்று :
உயிருள்ள கல்

இரண்டு :
உயிரற்ற கல்

“உலகத்தில் உள்ள
இந்துமதக் கோயில்கள்
அனைத்திலும் காணப்படும்
கடவுள் சிலைகள்
அனைத்தும்  ;
அந்தக்காலம் முதல்
இந்தக் காலம் வரை
உயிருள்ள கற்களில்
மட்டுமே செதுக்கப்பட்டு
கோயில்களில் - மக்களின்
இறைவழிபாட்டிற்காக
வைக்கப்பட்டுள்ளது “

“ இந்துமதக் கோயில்களில்
காணப்படும் – இத்தகைய
கடவுள் சிலைகள்
மூலமாக பெறப்படும்
சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கோயிலுக்குள் சக்தியானது
தொடர்ந்து உற்பத்தி
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும் வகையில்
உயிருள்ள கற்களில்
கடவுள் சிலைகள்
செதுக்கப்பட்டு அனைத்து
இந்துமதக் கோயில்களிலும்
வைக்கப்பட்டுள்ளது. ;”

“இந்துமதக் கோயில்கள்
கட்டப்பட்டு மக்களின்
இறைவழிபாட்டிற்காக
மக்களுக்கு வழங்கப்பட்ட
நாள் முதல்
இன்று வரை
இந்துமதக் கோயில்கள்
சக்தியின் மையங்களாகத்
திகழ்ந்து கொண்டிருக்கின்றன”

“அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்துமதக் கோயில்கள்
சக்தியின் மையங்களாக
திகழ்வதற்கு காரணம்
கடவுள் சிலைகள்
உயிருள்ள கற்களினால்
செதுக்கப்பட்டதும் ஒரு
காரணம் ஆகும் “

“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலையை செதுக்கி
மக்களின் வழிபாட்டிற்காக
வைக்கப்படுவதற்கு முன்
கடவுள் சிலையானது
எவ்வளவு நீளம்,
அகலம், உயரம்
இருக்க வேண்டும் என்பது
முடிவு செய்யப்பட்டு
அதற்கேற்றவாறு கல்லானது
தேர்ந்தெடுக்கப்பட்டு
பிறகு அந்தக் கல்லானது
உயிருள்ள கல்லா (அல்லது)
உயிரற்ற கல்லா என்பது
ஆராய்ந்து அறியப்படுகிறது “

“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலையை
செதுக்கி வைப்பதற்காக
முதலில் ஒரு கல்லானது
தேர்ந்தெடுத்துக்
கொள்ளப்படுகிறது,
கருங்காலி மரத்தில்
சாண் அளவு கருங்காலி
கட்டை செய்து - அதை
கல்லின் மேல் அடிக்க
கல்லில் இருந்து
ஒரு நாதம் எழும்”

“ கருங்காலிக் கட்டையால்
கல்லில் அடிக்கும்போது
எழும் நாதத்தை வைத்து
கல்லானது
உயிருள்ள கல்லா(அல்லது)
உயிரற்ற கல்லா
என்று கண்டுபிடிப்பர் “

“ உயிருள்ள கல்லிலிருந்து
ஒரு நாதமும் ;
உயிரற்ற கல்லிலிருந்து
வேறு ஒரு நாதமும் ;
வெளிப்படும் ;
கல்லிலிருந்து வெளிப்படும்
இந்த இரு வேறுபட்ட
நாதத்தை உணரும்
ஆற்றல் படைத்தவர்கள்
உயிரற்ற கல்லை விடுத்து
உயிருள்ள கல்லை
கடவுள் சிலையை
செதுக்குவதற்கு
தேர்ந்தெடுக்கிறார்கள் “

“கல்லில் எழும்
நாதத்தை வைத்து
உயிருள்ள கல்லா (அல்லது)
உயிரற்ற கல்லா - என்று
கண்டுபிடிப்பவர்களுக்கு
ஸ்தபதிகள் என்று பெயர் “

“உயிருள்ள கல்லை
தேர்ந்தெடுத்தபின்
கடவுள் சிலையை
உடனே செதுக்கக் கூடாது ; “

“கல்லிடம் மக்கள்
வழிபடுவதற்காக உன்னை
கடவுள் சிலையாக
செதுக்கப்போகிறேன்
செதுக்கலாமா
வேண்டாமா – என்று
கல்லிடம் அனுமதி
வாங்க வேண்டும் ;
கல்லானது அனுமதி
கொடுத்தால் மட்டுமே
அந்த உயிருள்ள கல்லில்
கடவுள்சிலையை
செதுக்க வேண்டும் ;
இல்லையென்றால்
கடவுள் சிலையை
செதுக்கக் கூடாது ; “

“கடவுள் சிலையை
செதுக்க உயிருள்ள
கல்லானது அனுமதி
அளித்தபிறகு
கடவுள் சிலையை
செதுக்க துவங்க
வேண்டும் “

“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் சிலையை
வைப்பதற்கு
உயிருள்ள கல்லை
கண்டுபிடிப்பது ;
கல்லிடம் கடவுள்
சிலையை செதுக்குவதற்கு
அனுமதி பெறுவது - என்ற
இரண்டு முக்கியமான
முறைகள்
பின்பற்றப்படுகின்றன ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  27-04-2019
/////////////////////////////////////////////////////


April 24, 2019

பரம்பொருள்-பதிவு-6


                       பரம்பொருள்-பதிவு-6

(ஆ) கடவுள் சிலைகளின்
மூலம் பெறப்படும் சக்தி:

“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை மற்றும்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையை
மையமாக வைத்து
கோயிலைச் சுற்றி
அமைக்கப்பட்டுள்ள
அனைத்து கடவுள் சிலைகள்
ஆகியவற்றின் மூலமாக
பெறப்படும் சக்தியானது;
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படுகிறது ; “

“கோயிலுக்குள் உள்ள
பல்வேறு கடவுள்
சிலைகளின் மூலமாக
சக்தியானது பெறப்பட்டு ;
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்பட்டாலும் ;
அடிப்படை சக்தியாகவும் ;
முக்கிய சக்தியாகவும் ;
அனைத்திற்கும் ஆதார
சக்தியாகவும் ; உள்ளது
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை மூலமாக
பெறப்படும் சக்தியாகும் “

“கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை
அதற்கென்று உள்ள
சில முக்கியமான
முறைகளை வைத்துத்தான்
செய்யப்பட வேண்டும் ;
அவ்வாறு செய்யப்படும்
போது தான்
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையை
மூலமாக வைத்து
சக்தியானது பெறப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
செலுத்தப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படும் ; “

“கர்ப்பக் கிரகத்தில்
உள்ள கடவுள் சிலை
அதற்கென்று உள்ள
சில முக்கியமான
முறைகளை வைத்து
செய்யப்படவில்லையெனில்  ;
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையால்
சக்தியை பெறமுடியாது ;
அதன் காரணமாக
கோயிலுக்குள் சக்தியை
செலுத்த முடியாது ;
அதன் காரணமாக
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது ;”

“ பல நூற்றாண்டுகளைக்
கடந்த இந்துமதக்
கோயில்களும்
பல ஆயிரம் ஆண்டுகளைக்
கடந்த இந்துமதக்
கோயில்களும் – இந்த
உலகத்தில் கணக்கிலடங்காத
எண்ணிக்கையில் உள்ளன”

“கோயில்கள் எத்தனை
ஆண்டுகள் பழமையானதாக
இருக்கிறதோ
அத்தனை ஆண்டுகள் ;

கோயில்கள் எத்தனை
நூற்றாண்டுகள் பழையானதாக
இருக்கிறதோ
அத்தனை நூற்றாண்டுகள் ;

கோயில்கள் எத்தனை
ஆயிரம் ஆண்டுகள்
பழமையானதாக இருக்கிறதோ
அத்தனை ஆயிரம் ஆண்டுகள் ;

பழமையானது கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைகள்”

“பல நூற்றாண்டுகளாக
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைக்கு
அபிஷேகங்கள்,
பூஜைகள் செய்தும்
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உடையாமல்
இருந்தால் மட்டுமே ;
கீறல் ஏதும் விழாமல்
இருந்தால் மட்டுமே ;
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
சக்தியை பெற்று ;
கோயிலுக்குள் சக்தியை
செலுத்தி ;
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியும் ;”

“ கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
பல நூற்றாண்டுகளைக்
கடந்தாலும் ;
பல அபிஷேகங்கள்
பல பூஜைகள் செய்தாலும்
கடவுள் சிலையானது
உடையாமல்
கீறல் விழாமல் இருக்க
வேண்டுமானால் ;
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
மூன்று முக்கியமான
தன்மைகளைத் தன்னுள்
கொண்டதாக இருக்க
வேண்டும் “

ஒன்று :
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உயிருள்ள கல்லினால்
மட்டுமே செதுக்கப்பட்டிருக்க
வேண்டும்

இரண்டு:
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
ஆகமசாஸ்திர முறைப்படி
செதுக்கப் பட்டிருக்க வேண்டும்


மூன்று :
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உயிரோட்டத்துடன் இருக்க
வேண்டும்

“இந்த முன்று தன்மைகளும்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையில்
இருந்தால் மட்டுமே
கடவுள் சிலையானது
உடைந்து போகாமல் ;
கீறல் விழாமல் இருக்கும்
இல்லையென்றால் ,
சிலையானது உடைந்து
விடும் - அல்லது
கீறல் விழுந்து விடும் ; “

“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக்கிரகத்தில்
வைத்து வழிபடுவதற்கு
செதுக்கப்படும் கடவுள்
சிலைக்கு உயிருள்ள
கல்லை எப்படி
தேர்ந்தெடுக்கிறார்கள் ;
எப்படி ஆகமசாஸ்திர
முறைப்படி சிற்பங்களைச்
செதுக்குகிறார்கள் ;
எப்படி சிலைகளை
உயிரோட்டத்துடன்
இருக்கும்படி
அமைக்கிறார்கள் ;
என்று தெரியுமா…………………………?”

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  23-04-2019
/////////////////////////////////////////////////////

April 21, 2019

பரம்பொருள்-பதிவு-5


                       பரம்பொருள்-பதிவு-5

“கோயில் கோபுரங்களில்
உள்ள கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்யும்
மிகப்பெரிய வேலையை
செய்து வருகின்றன “

“கோபுரக் கலசங்கள்
என்பது தங்கம், வெள்ளி,
செப்பு மற்றும் ஐம்பொன்
இவைகளில் ஏதேனும்
ஒன்றால் செய்யப்பட்டதாக
இருக்கும் “

“கோபுரக் கலசத்திற்குள்
உயிர்ச்சக்தி கொண்ட
பொருள் வைக்கப்பட்டிருக்க
வேண்டும் - அப்படி
உயிர்ச்சக்தி கொண்ட பொருள்
கோபுரக் கலசத்திற்குள்
வைக்கப்பட்டு இருந்தால்
மட்டுமே கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் - இல்லை என்றால்
கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்காது “

“கோபுரக் கலசங்கள் பிரபஞ்ச
சக்தியை கிரகிக்க வேண்டும்
என்பதற்காக - கோபுரக்
கலசத்திற்குள்
நவ தானியங்கள் அல்லது
பாதரசம் வைப்பார்கள்”

“ நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியுடன் இருக்கும்
வரை தான் - கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கும் தன்மையுடன்
இருக்கும்- நவ தானியங்கள்
உயிர்ச்சக்தியை இழந்து
விட்டால் கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும்
சக்தியை இழந்து விடும்”

“ கோபுரக் கலசத்தில்
நிரப்பப்பட்டிருக்கும்
நவதானியங்கள் எனப்படும்
நெல், கம்பு, கேழ்வரகு,
திணை, வரகு,சோளம்,
மக்காச்சோளம், சாமை
எள் ஆகியவை 12 ஆண்டுகள்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
12 வருட காலத்தை
தாண்டும் போது அந்த
நவதானியங்கள்
தங்கள் உயிர்ச்சக்தியை
இழந்து விடும் ; “

“ 12 வருடங்கள் கழித்து
கோபுரக் கலசங்கள்
பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கக்கூடிய தன்மையை
இழந்து விடக் கூடிய
நிலைக்கு வந்து விடும் ;
12 வருடங்களுக்கு
ஒரு முறை கும்பாபிஷேகம்
என்ற பெயரில்-கோபுரக்
கலசத்தில் உள்ள
உயிர்ச்சக்தியை இழந்த
நவதானியங்கள் மாற்றப்பட்டு
புதியதாக உயிர்ச்சக்தி
கொண்ட நவதானியங்கள்
நிரப்பப்படுகின்றன “

“நவதானியங்கள் ஒரு
குறிப்பிட்ட காலம்
வரை தான் உயிர்ச்சக்தி
கொண்டதாக இருக்கும் ;
அந்த குறிப்பிட்ட காலம்
முடிந்தவுடன் அந்த
நவதானியங்களை
மாற்ற வேண்டும்- ஆனால்
பாதரசம் எப்போதும்
உயிர்ச்சக்தியுடன்
தான் இருக்கும்;-பாதரசம்
ஒருபோதும் தன்
உயிர்ச்சக்தியை இழக்காது  
எனவே கோபுரக் கலசத்தில்
ஒருமுறை பாதரசத்தை
நிரப்பி விட்டால்
12 வருடங்களுக்கு
பாதரசத்தை மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை;”

“இவ்வாறாக கோபுரக்
கலசங்கள் பிரபஞ்ச சக்தியை
கிரகிக்கின்றன;”

“கோபுரக் கலசங்களின்
நீளம், அகலம், உயரம்
ஆகியவற்றைப்
பொறுத்து தான்
கோபுரங்கள் அமைக்கப்பட
வேண்டும் “

“கோபுரக் கலசங்கள்
மூலம் கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரத்தின் வழியாக
இறங்கி கோயிலுக்குள்
செல்கிறது”

“கோபுரக் கலசங்கள்
மூலமாக கிரகிக்கப்படும்
சக்தியானது கோபுரத்தின்
குறுகிய இடம் வழியாக
உட்புறமாக இறங்கி
அகன்று கொண்டே
சென்று கோபுரத்தின்
கீழ் வரை சென்று
கோயிலுக்குள் சென்று
சக்தியை உற்பத்தி
செய்கிறது “

“கோபுர கலசத்திற்கு
ஏற்றவிதத்தில்
கோயில் கோபுரங்கள்
அமைக்கப்படவில்லை எனில்
கோபுரக் கலசங்கள்
வழியாக கிரகிக்கப்படும்
பிரபஞ்ச சக்தியானது
கோபுரங்கள் வழியாக
கீழே இறங்காது ;
கோபுரக் கலசங்கள்
மூலமாக கோயிலுக்குள்
சக்தியை உற்பத்தி செய்ய
முடியாத நிலை உருவாகும்

எனவே, கோயிலுக்குள்
சக்தியானது கோபுரக்
கலசங்கள் மூலமாக
உற்பத்தி செய்யப்பட
வேண்டுமானால்
கோபுரக் கலசங்கள்
எத்தகைய நீளம்,
அகலம், உயரம்,
கொண்டிருக்கிறதோ
அதற்கேற்றவாறு கோயில்
கோபுரங்களின் நீளம்,
அகலம், உயரம்,
அமைக்கப்பட வேண்டும்
இல்லை என்றால்,
கோபுரக் கலசங்கள்
மூலமாக பிரபஞ்ச
சக்தியை கிரகித்து
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  21-04-2019
/////////////////////////////////////////////////////