May 28, 2019

பரம்பொருள்-பதிவு-17


                       பரம்பொருள்-பதிவு-17

“பிராண பிரதிஷ்டை
மூலம்
உயிரூட்டப்பட்டு
உயிர்ப்பெற்ற
கடவுள் சிலை ;
கும்பாபிஷேகத்தின்
மூலம்
இயங்கும் சக்தியைப்
பெறுகிறது ;”

“ஒரு சாதாரண காகிதம்
சாதாரண காகிதமாக
இருக்கும் போது
அதை யாரும்
மதிப்பது இல்லை ;
அரசாங்கம் அந்த
காகித்தை அச்சடித்து
பணமாக
வெளியிடும் போது
அதன் மதிப்பு
கூடுகிறது ;
அனைவரும்
பணத்தை மதித்து
போற்றுகின்றனர் ; “

“சாதாரணமான
காகிதமாக
இருக்கும் போது
காகிதத்தை மதிக்காத
இந்த உலகம் காகிதம்
அச்சடிக்கப்பட்டு
பணமாக மாற்றப்பட்ட
பின்பு இந்த
உலகம் மதிக்கிறது”

“சாதாரணமாக
இருக்கும் போது
அதற்குப் பெயர்
காகிதம் ;
பணமாக மாற்ற
அச்சடிக்கப்பட்ட
பின்பு அதற்குப்
பெயர் பணம் ; “

“அதைப்போலத் தான்
சாதாரணமாக
இருக்கும் போது
அதற்குப் பெயர் கல் ;
கும்பாபிஷேகம்
முடிந்த பின்
அதற்குப் பெயர்
கடவுள் ; “

“இதிலிருந்து
கும்பாபிஷேகம்
எவ்வளவு மதிப்பு
வாய்ந்தது என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் “

“கும்பாபிஷேகம்
செய்வதற்கு
செய்ய வேண்டிய
செயல்கள்
64 - என்றும்
55 - என்றும்
பல்வேறு
ஆகமங்களில்
கூறப்பட்டுள்ளன ;
இருந்தாலும்
கும்பாபிஷேகம்
செய்வதற்கு
முக்கியமாக
13 - செயல்கள்
பின்பற்றப்படுகின்றன ; “

“இந்த
13 செயல்களைச்
செய்யாமல்
எந்த ஒரு
கும்பாபிஷேகமும்
நடைபெறுவதும்
இல்லை - எந்த ஒரு
கும்பாபிஷேகமும்
முழுமை
அடைவதும் இல்லை”

“கும்பாபிஷேகத்தின்
போது செய்யப்படும்
13 முக்கிய செயல்கள்”

(1) அனுக்ஞை
(அனுமதி வாங்குதல்)
(2) விக்னேஸ்வர பூஜை
(3) வாஸ்து சாந்தி
(4) மிருத்ஸங்கிரஹணம்
(மண் எடுத்தல்)
(5) அங்குரார்ப்பணம்
(முளையிடுதல்)
(6) ரசஷாபந்தனம்
(காப்பு கட்டுதல்)
(7) கும்பஸ்தாபனம்
(8) கலாகர்ஷணம்
(சக்தி அழைத்தல்)
(9) யாகசாலை
(10) ஸ்பர்சாஹீதி
(11) கும்பாபிஷேகம்
(குடமுழுக்கு)
(12) மகாபிஷேகம்
(13) மண்டலாபிஷேகம்
“இந்த
13 - செயல்களைப்
பின்பற்றி செய்யப்படும்
எந்த ஒரு
கும்பாபிஷேகமும்
முழுமையடைகின்ற
காரணத்தினால்
கடவுள் சிலை
இயங்கும் சக்தியைப்
பெறுகிறது”

“கும்பாபிஷேகத்தை
பார்ப்பதற்கு
வாழ்க்கையில்
புண்ணியம்
செய்திருக்க வேண்டும் ;
தன் வாழ்நாளில்
கும்பாபிஷேகத்தைப்
பார்ப்பவர்களுக்கு
இறைவனின் அருள்
முழுமையாக
கிடைக்கும் ;”

“இத்தகைய சிறப்புகள்
பலவற்றைத்
தன்னுள் கொண்ட
கும்பாபிஷேகம் எப்படி
செய்யப்படுகிறது
என்பதைப் பற்றிப்
பார்ப்போம் “

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 28-05-2019

/////////////////////////////////////////////////////


May 27, 2019

பரம்பொருள்-பதிவு-16


அன்பிற்கியவர்களே,

அந்தம்+ஆதி=
அந்தாதி எனப்படும்

அந்தம் என்றால்
முடிவு என்று பொருள்
ஆதி என்றால்
தொடக்கம்
என்று பொருள்

முதற்பாவின்
ஈற்றடியில்
முடியும் எழுத்து
அசை, சீர் , சொல்
அடுத்து வரும்
பாவின் முதலடியில்
தொடங்கி ஒன்றாக
அமைதலையே
அந்தாதி என்கிறார்கள்

அந்தாதி என்றால்
முடிகின்ற ஒன்றாலேயே
அடுத்து தொடங்குவது
எனலாம்

அந்தாதியில் பாடல்
கட்டுரை எழுதுவது
என்பது அவ்வளவு
எளிதானதல்ல
கடினமானது

நான் இந்தக் கட்டுரை
முழுவதையும்
அந்தாதியைப்
பயன்படுத்தியே
எழுதியிருக்கிறேன்

அந்தாதியைப்
பயன்படுத்தி
எழுத வேண்டும்
என்பதற்காக- நான்
பரம்பொருள்
கட்டுரையையும்
கருத்தையும்
சிதைத்துவிடவில்லை
என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
///////////////////////////////////

                      பரம்பொருள்-பதிவு-16

இரண்டு

“கடவுள் சிலையை”
கர்ப்ப கிரகத்தில்
நிறுவ வேண்டும்
என்பதற்காக
கடவுள்
சிலையை
நிறுவுவதற்கு
தேவையான
நடவடிக்கைகள்
எடுத்து
முதலில்
உயிருள்ள
கல்லானது
“தேர்ந்தெடுக்கப்படுகிறது“

“தேர்ந்தெடுக்கப்பட்ட“
உயிருள்ள
கல்லிடம்
உயிருள்ள
கல்லை
கடவுள் சிலையாக
செதுக்குவதற்கு
தேவையான
அனுமதி
“பெறப்படுகிறது“

“பெறப்பட்ட“
அனுமதியின்
அடிப்படையில்
கல்லானது
ஆகம சாஸ்திர
முறைகளின்படி
கடவுள் சிலையாக
“செதுக்கப்படுகிறது“

“செதுக்கப்பட்ட“
கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டை
மூலம் உயிர்
“கொடுக்கப்படுகிறது“

“கொடுக்கப்பட்ட“
உயிரினால்
கடவுள்
சிலையானது
கடவுளாகவே
“மாற்றப்படுகிறது“

“மாற்றப்பட்ட“
கடவுள் சிலை
மந்திரம்
யந்திரம்
தந்திரம்
ஆகிய மூன்றின்
மூலம்
அஷ்டபந்தனம்
செய்யப்பட்டு
கடவுள் சிலை
பீடத்துடன்
இணைக்கப்பட்டு
“நிறுவப்படுகிறது“

“நிறுவப்பட்ட“
கடவுள் சிலை
கடவுளாகவே
“மாற்றமடைகிறது“

“மாற்றமடைந்த“
கடவுள் சிலைக்கு
கும்பாபிஷேகம்
“செய்யப்படுகிறது“

“செய்யப்பட்ட“
கும்பாபிஷேகத்தின்
மூலம்
கடவுள்
சிலையானது
“இயங்குகிறது“

“இயங்குவதற்கான“
தன்மையைப் பெற்ற
கடவுள் சிலைக்கு
அன்றாடம்
மந்திரங்கள்
மூலம் பூஜைகள்
“செய்யப்படுகிறது“

“செய்யப்படும்“
பூஜைகள் மூலம்
மந்திரம்,
யந்திரம்,
தந்திரம்
ஆகிய மூன்றும்
ஒன்றாகச்
செயல்பட்டு
சக்தியானது
“உற்பத்தியாகிறது“

“உற்பத்தியாகும்“
சக்தியானது
யந்திரத்தின்
மூலம்
கடவுள்
சிலைக்கு
“செலுத்தப்படுகிறது“

“செலுத்தப்பட்ட“
சக்தியை
கடவுள் சிலை
பெற்று
பெற்ற சக்தியை
கோயிலுக்குள்
செலுத்துவதன்
மூலம்
கோயிலுக்குள்
சக்தியானது
“உற்பத்தியாகிறது“

“உற்பத்தி“
செய்யப்பட்ட
சக்தியானது
கோயிலுக்குள்
பரவி
கோயில்
முழுவதும்
சக்தியானது
“நிரப்பப்படுகிறது“

“நிரப்பப்பட்ட“
சக்தியின் மூலம்
கோயிலானது
ஒரு சக்தி மிக்க
ஆற்றல் களமாக
மாறுவதுடன்
கோயிலானது
மாபெரும்
“சக்தியாகிறது“

“சக்தி“
அனைத்தையும்
பெற்று
சக்தியின்
மையமாக
கோயிலானது
திகழ்வதற்கு
காரணம்
கர்ப்பகிரகத்தில்
செதுக்கி
வைக்கப்பட்டுள்ள
“கடவுள் சிலை“

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 27-05-2019
/////////////////////////////////////////////////////

May 14, 2019

பரம்பொருள்-பதிவு-15


                     பரம்பொருள்-பதிவு-15

"அஷ்ட பந்தனம் செய்து
கடவுள் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்பு
பயன்படுத்தப்படும்
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகிய மூன்றும்
இரண்டு நிலைகளில்
பயன்படுத்தப்படுகிறது"

ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
முன்

இரண்டு
கும்பாபிஷேகத்திற்கு
பின்

ஒன்று
"அஷ்ட பந்தனம் செய்து
கடவுள் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகிய மூன்றும்
ஒன்றுக் கொன்று
தொடர்பு கொண்டு
இயங்கும் விதத்தில்
அமைக்கப்பட வேண்டும்"

"கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைக்கு
எந்த மந்திரத்தை
பயன்படுத்தி பூஜை
செய்யப் போகிறோமோ ?
அந்த மந்திரத்தை
எடுத்துக் கொண்டு
அந்த மந்திரத்திற்குரிய
யந்திரம் தங்கம்
அல்லது வெள்ளி
போன்ற உலோகங்களில்
அதற்கு என்று
வரையறுக்கப்பட்ட
முறைகளைப் பயன்படுத்தி
யந்திரம் எழுதப்பட
வேண்டும்"

"மந்திரத்திற்கு ஏற்ற
விதத்தில் யந்திரம்
எழுதப் பட வேண்டும்
சொல்லப்படும் மந்திரத்தை
ஏற்றுக்கொண்டு இயங்கும்
விதத்தில் யந்திரம்
எழுதப்பட வேண்டும்"

"மந்திரம் சொல்லப்படும்
போது மந்திரத்திற்கும்,
யந்திரத்திற்கும்
தொடர்பை ஏற்படுத்தி
மந்திரத்தின் மூலம்
யந்திரம் செயல்பட்டு
யந்திரமானது சக்தியை
வெளியிடும் வகையில்
மந்திரமும், யந்திரமும்
ஒன்றொக்கொன்று
தொடர்பு கொண்டு
இயங்கும் விதத்தில்
யந்திரம் எழுதப்பட
வேண்டும்"

"சொல்லப்படும்
மந்திரத்திற்கு
ஏற்றவிதத்தில்
மந்திரத்தின் ஒலியை
உள்வாங்கிக் கொண்டு
யந்திரம் இயக்கம் பெற்று
சக்தியை வெளியிடும்
வேலையை யந்திரம்
செய்வதற்கு தந்திரம்
உதவி செய்கிறது"
  
"அதாவது சொல்லப்படும்
மந்திரத்திற்கு ஏற்ற
விதத்தில் யந்திரம்
இயங்குவதற்கு தேவையான
செயல்களைச் செய்வதற்கு
தந்திரம் உதவுகிறது"

"அதைப் போல்
யந்திரத்திலிருந்து
வெளிப்படும் சக்தியானது
கர்ப்பக்கிரகத்தில்
வைக்கப்பட்டுள்ள
கடவுள் சிலைக்கு
அளிக்கப்படுவதும் ;
கடவுள் சிலை அந்த
சக்தியை ஏற்றுக் கொண்டு
அந்த சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
சக்தியை உற்பத்தி
செய்வதும் தந்திரம்"

"அதாவது சொல்லப்பட்ட
மந்திரத்திற்கு ஏற்ப
யந்திரம் இயக்கம் பெற்று
சக்தியை வெளியிடுவதும் ;
யந்திரத்திலிருந்து
வெளிப்பட்ட சக்தியை
கடவுள் சிலை
பெற்றுக்கொண்டு
பெற்றுக் கொண்ட சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதும்
தந்திரம் ஆகும் ;"
  
"மந்திரம், யந்திரம், தந்திரம்
ஆகியவை ஒன்றுக்கொன்று
ஒன்றுபட்டு ஒன்றாக
இயங்க வேண்டும் அவ்வாறு
ஒன்றுபட்டு ஒன்றாக  
இயங்கினால் மட்டுமே
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றினால் சக்தியானது
உற்பத்தி செய்யப்பட்டு
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
சக்தியை கோயிலுக்குள்
உற்பத்தி செய்ய முடியும் ;
இல்லை என்றால்
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது ; "

"கும்பாபிஷேகம்
செய்யப்படுவதற்கு முன்
கடவுள் சிலையை பீடத்துடன்
இணைக்க வேண்டும்"
  
"கடவுள் சிலையை
பீடத்துடன் இணைப்பதற்கு
முன் கடவுள் சிலைக்குரிய
மந்திரத்தை தேர்ந்தெடுத்து
அந்த மந்திரத்திற்குரிய
யந்திரத்தை எழுதி
சொல்லப்படும் மந்திரத்திற்கு
ஏற்ப யந்திரத்திலிருந்து
வெளிப்படும் சக்தியை
கடவுள் சிலை பெற்று
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்படுகிறதா என்று
சோதித்து அறிந்த பின்னரே
யந்திரத்தை சிலையின்
கீழ் வைத்து பீடத்துடன்
கடவுள் சிலையை
அஷ்ட பந்தனம் மூலம்
இணைக்க வேண்டும்”
  
--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  14-05-2019
/////////////////////////////////////////////////////