July 08, 2019

பரம்பொருள்-பதிவு-37


                  பரம்பொருள்-பதிவு-37

" உயிருள்ள கல்லானது
தேர்ந்தெடுக்கப்பட்டு ;
ஆகம சாஸ்திர
விதிமுறைகளின் படி
கடவுள் சிலையாக
செதுக்கப்பட்டு ;
பிராண பிரதிஷ்டையின்
மூலம் கடவுள் சிலைக்கு
உயிரூட்டப்பட்டு ;
கும்பாபிஷேகத்தின் மூலம்
கடவுள் சிலையில்
உள்ள கடவுள் சக்தியானது
இயங்கும் சக்தியை பெறும்
வகையில் செயல்கள்
செய்து வைக்கப்பட்டு ;
அன்றாடம் செய்யப்படும்
பூஜைகள் ; அபிஷேகங்கள் ;
ஆகியவற்றின் மூலம்
கடவுள் சிலையானது
கடவுளாகவே மாற்றப்பட்டு ;
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
செயலை - உலகில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களில் உள்ள
அனைத்து கடவுள்
சிலைகளும் செய்து
கொண்டிருக்கின்றன ; "

" ஒரு கல்லானது
பல்வேறு நிலைகளைக்
கடந்து கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
வேலையைச் செய்து
கொண்டிருக்கிறது  ;
என்ற உண்மையை
உணரக்கூடிய
அறிவு உள்ளவர்கள் ;
கல்லில் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையை
பார்க்கும் போது
அவர்களுக்கு
கடவுள் சிலையில்
கடவுள் மட்டுமே
தெரிகிறது ;
கல்லானது தெரிவதே
இல்லை ;

" ஆனால், ஒரு கல்லானது
பல்வேறு நிலைகளைக்
கடந்து கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
வேலையைச் செய்து
கொண்டிருக்கிறது என்ற
உண்மையை உணரும்
அறிவு இல்லாதவர்கள் ;
கல்லில் செதுக்கப்பட்ட
கடவுள் சிலையை
பார்க்கும் போது
அவர்களுக்கு
கடவுள் சிலையில்
கல் மட்டுமே தெரிகிறது ;
கடவுள் தெரிவதே இல்லை ; "

"கும்பாபிஷேகத்தின் மூலம்
ஒரு கல்லானது
கடவுளாகவே மாறி
பக்தர்களுக்கு அருள்
வழங்கும் மிகப்பெரிய
செயலைச் செய்கிறது
என்றால்
கும்பாபிஷேகத்தின்
மகிமையைத் ;
தெரிந்து கொள்ளுங்கள் "

(12) மகாபிஷேகம் :
"கும்பாபிஷேகத்தை
நிறைவு செய்வதற்கு முன்
அதாவது கும்பாபிஷேகத்தை
முடிப்பதற்கு முன்
சூட்சும நிலையில் உள்ள
உயிர்களை நினைத்து
அவர்களுக்கு நன்றி
சொல்வதற்காக
செய்யப்படும் செயலுக்கு
மகாபிஷேகம்
என்று பெயர் "

" கலச நீரால்
அபிஷேகம் செய்தபின்
கடவுள் சிலைக்கு
பூர்ணாபிஷேகம் செய்து,
பூர்ண வைவேத்தியம்
படைத்து,
சோடசோபசாரம்
செய்ய வேண்டும் ;
இதனால் இதுவரை
யாகத்தில் பங்கு
கொண்டிருந்த
தேவர்களும் உயிர்களும்
திருப்தி அடைகின்றனர் ;
இது மகா அவிர்
நிவேதனமாகும் ;"

(13) மண்டலாபிஷேகம் :
" இதற்கு த்ரைபசஷிகம்
என்று பெயர்
மண்டலாபிஷேகம்
மூன்று பட்சங்கள்
செய்யப்படுகிறது "

" ஒரு பட்சம் என்பது
பதினைந்து நாட்களைக்
கொண்டது ஆகும் ;
மூன்று பட்சங்கள் என்பது
45 நாட்களைக்
கொண்டது ஆகும் ;"

" இந்த 45 நாட்களும் 
முறைப்படி
விசேஷமாய் ஆராதனை
நடத்தி முடிவில்
பூர்ணாபிஷேகம் செய்து
பின் காப்புக் களைதல்
மண்டலாபிஷேகமாகும் "

" இவ்வாறு 13 முக்கிய
செயல்களைப் பின்பற்றி
செய்யப்படும்
கும்பாபிஷேகத்தின்
மூலம் கல்லானது
கடவுளாகவே மாறுகிறது
என்பதை அனைவரும்
தெரிந்து கொண்டால்
கும்பாபிஷேகத்தின்
சிறப்பைத் தெரிந்து
கொள்ளலாம்

"கும்பாபிஷேகத்தின்
மகிமையைத் தெரிந்து
கொள்ள வேண்டும் என்றால்
சிறப்பு வாய்ந்த - ஒரு
பெண்ணின் வாழ்க்கை
வரலாற்றைத் தெரிந்து
கொள்ள வேண்டியது
அவசியம் ஆகும்
அந்தப் பெண்ணின்
வாழ்க்கை வரலாற்றைத்
தெரிந்து கொண்டாலே
கும்பாபிஷேகத்தின்
மகிமை தெரியும் "

"அந்தப் பெண் தான்…………………?
அந்தப் பெண்ணின்
பெயர் தான்………………………………………….?
அந்தப் பாவையின்
பெயர் தான்…………………………………………?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  08-07-2019
//////////////////////////////////////////////////////////



July 07, 2019

தலைமையாசிரியர் வாழ்த்து மடல்-07-07-2019


அன்பிற்கினியவர்களே,

“ திருநெல்வேலி
மாவட்டத்தில்
வீரத்திற் கொரு
விளை நிலமாய் ;
பல்வகைக் கலைகளும்
பூத்துக் குலுங்கும்
சிறப் பிடமாய் ;
அறிவுத் திறனில்
உயர்ந்து விளங்கும்
புகழி டமாய் ;
அன்பு ஈவதில்
சிறந்து விளங்கும்
உயர் விடமாய் ;
விளங்கும்
கிராமத்தில் பிறந்து
இளவயது முதல்
தமிழில் படித்து ;
தமிழாய் வளர்ந்து ;
கல்லூரி படிப்பை
ஆங்கில
இலக்கியத்தில் படித்து ;
ஆங்கில ஆசிரியராக
பணியில் சேர்ந்த
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்கள்
தலைமையாசிரியராக
பதவி உயர்வு பெற்று
சீரிய முறையில்
பணியாற்றிக்
கொண்டிருக்கிறார் !”

“ அவர் கல்வித் துறையில்
இந்த அளவிற்கு
உயர்ந்ததற்கு காரணம்
அவர் சுவாசமாக
சுவாசித்தது
செய்யும் தொழிலே
தெய்வம் “ - என்ற
பழமொழியைத் தான் “

“ செய்யும் தொழிலே
தெய்வம் என்று
தாங்கள் செய்யும்
தொழிலை
நினைப்பவர்கள்
வாழ்க்கையின் உயர்ந்த
நிலைகளைத் தொட்டு
மக்களின் மனதில்
இடம் பெறுவார்கள்
என்பதற்கு
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களே சாட்சி !”

என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்கள்
தலைமையாசிரியராக
பதவியேற்ற போது
காலம் குறுகியதாக
இருந்த காரணத்தினால்
அவருடைய
பதவியேற்பு
விழாவிற்கு
என்னாலும்
என்னுடைய
நண்பர்களாலும்
செல்ல முடியவில்லை ! “

“ தற்போது
பணி நிமித்தம்
காரணமாக
சென்னை
வந்திருந்த போது
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களை
நானும் என்னுடைய
நண்பர்களும்
வாழ்த்தும் பேறு
பெற்றோம் ! “

“ உழைப்புக்கு
உதாரணமாக திகழ்ந்து
கொண்டிருக்கும் ;
மாணவர்களின்
எதிர்கால
வாழ்வாதாரத்திற்கு
வழிகாட்டியாக
விளங்கிக்
கொண்டிருக்கும் ;
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களை
வாழ்த்தும் போது !
பெருமையும்
மகிழ்ச்சியும் அடைவது, !
நானும் என்னுடைய
நண்பர்களும் மட்டுமல்ல ?
எங்களுடைய தந்தை
தெய்வத்திரு
T.காசிநாதன்
மற்றும்
எங்களுடைய தாயார்
K.சொர்ணம்
அவர்களும்
சேர்ந்து தான்
என்று சொல்லிக்
கொள்வதில் நான்
மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன்

----------என்றும் அன்புடன்

----------- K.பாலகங்காதரன்

--------- 07-07-2019
//////////////////////////////////////////////////////////








July 04, 2019

பரம்பொருள்-பதிவு-36


                  பரம்பொருள்-பதிவு-36

“நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
இறைவன் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும்- என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
மூன்று விஷயங்களை
உருவாக்கி இந்த
உலகத்திற்கு அளித்து
விட்டுச் சென்றுள்ளனர்
நம்முடைய முன்னோர்கள்”

ஒன்று
சிவலிங்கம்

இரண்டு
ஓம் என்ற எழுத்து

மூன்று
சின்முத்திரை

சிவலிங்கம் :
“ சிவன் கோயிலுக்கு
செல்லுங்கள் - அங்கு
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
சிவலிங்கத்தை கண்களை
நன்றாக திறந்து பார்த்துக்
கொண்டே சிறிது நேரம்
இருங்கள் - பிறகு மெள்ள
மெள்ள கண்களை மூடுங்கள் ;
சிவலிங்கத்தின் உருவத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில் வெளியே
இரு புருவங்களுக்கு மத்தியில்
வைத்து அப்படியே
உள்ளுக்குள் சிரசின் மையம்
வரை செல்லுங்கள் ;
மையத்தில் சிவலிங்கம்
தெள்ளத் தெளிவாகத் தெரியும்
வகையில் உள்ளுக்குள் உற்று
நோக்கிக் கொண்டே இருங்கள் ;
இப்போது உங்களுக்கு
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் சிவலிங்கம்;”

ஓம் என்ற எழுத்து
“புதையல் தேடி செல்ல
வேண்டும் என்றால் ஒரு
வரைபடம் வேண்டும் ;
வரைபடத்தில் புதையல்
எந்த இடத்தில்
இருக்கிறது என்பதும் ;
புதையலை எந்த வழிகளைக்
கடந்து சென்று
எடுக்க வேண்டும் என்பதும் ;
அந்த வரைபடத்தில்
குறிக்கப்பட்டிருக்கும் ;”

“அதைப்போல் ஓம்
என்ற எழுத்தானது இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
விளக்கிக் காட்டும்
வரைபடம் ஆகும் ;”

“ஓம் என்ற எழுத்தை
கண்களை நன்றாக திறந்து
பார்த்துக் கொண்டே சிறிது
நேரம் இருங்கள்- பிறகு
மெள்ள மெள்ள கண்களை
மூடுங்கள் - ஓம்
என்ற எழுத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசு
முழுவதும் பரவவிட்டு
நம்முடைய கண்களை
மூடிக் கொண்டு சிரசுக்குள்
தொடர்ந்து பார்த்துக்
கொண்டே இருங்கள்  
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் ஓம் என்ற எழுத்து;”

 சின்முத்திரை
“சின்முத்திரை என்பது
தவம் செய்யும் போது
பயன்படுத்துவதற்காகவோ
அல்லது
ஆன்மீக தத்துவங்களை
சொல்லுவதற்காகவோ
சின்முத்திரை
உண்டாக்கப்படவில்லை “

“ இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
காட்டுவதற்காக
உருவாக்கப்பட்ட முத்திரை
தான் சின்முத்திரை ;”

“சின்முத்திரையை
கைகளில் பிடித்துக்
கொள்ளுங்கள்- அந்த
சின்முத்திரையை
கண்களை நன்றாக
திறந்து பார்த்துக் கொண்டே
சிறிது நேரம் இருங்கள் ;
பிறகு மெள்ள மெள்ள
கண்களை மூடுங்கள் ;
சின்முத்திரையின் உருவத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
வெளியே இரு
புருவங்களுக்கு மத்தியில்
வைத்து அப்படியே
உள்ளுக்குள் சிரசின்
மையம் வரை செல்லுங்கள் ;
மையத்தில் சின்முத்திரை
தெள்ளத் தெளிவாகத் தெரியும்
வகையில் உள்ளுக்குள்
உற்று நோக்கிக் கொண்டே
இருங்கள் - இப்போது
உங்களுக்கு இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும்  ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் சின்முத்திரை;”

“இறைவன் நம்முடைய
உடலில் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதும்;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதும் ;
மக்கள் அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில்
சிவலிங்கம் வடிவில்
சிற்பமாகவும் ;
ஓம் என்ற எழுத்தில்
எழுத்து வடிவமாகவும் ;
சின்முத்திரை வடிவில்
முத்திரையாகவும் ;
பல்வேறு நிலைகளில்
அளித்துச் சென்றுள்ள
நம்முடைய முன்னோர்களின்
செயல் வணங்கத்தக்கதாகும்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-07-2019
//////////////////////////////////////////////////////////