December 17, 2019

பரம்பொருள்-பதிவு-100


          பரம்பொருள்-பதிவு-100

கிருஷ்ணன் :
"அர்ஜுனா ! நீ எப்போதோ
விதைத்து விட்டு வந்த
விதை ஒன்று இப்போது
மரமாக வளர்ந்து
அரவான் என்ற பெயரில்
பலன் தர உன்னைத் தேடி
நேரில் வந்து இருக்கிறது. "

"நீ ! யாருக்கும் தெரியாது
என்று செய்து விட்டு
வந்த செயலுடைய
விளைவானது உன்
முன்னால் அரவான்
என்ற பெயரில்
நிற்பதிலிருந்து
தெரிந்து கொள்………………?
செயலைச் செய்து விட்டு
விளைவிலிருந்து யாரும்
தப்ப முடியாது என்பதை !
நீ செய்து விட்டு
வந்த செயலுக்குரிய
விளைவாக அரவான்
உன் முன்னால்
வந்து நிற்கிறான் "

"அரவான் செய்யப் போகும்
வீரச் செயலை - இந்த
உலகத்தில் - இது
வரை யாரும் செய்து
இருக்க மாட்டார்கள்  ;
இனிமேலும் யாராலும்
செய்யவே முடியாது ; '"

"அரவான் செய்யப் போகும்
தியாகச் செயலைக் கண்டு
இந்த உலகமே
அரவானைப் பார்த்து
தலை தாழ்த்தி
வணங்கத் தான் போகிறது  "

"குருஷேத்திரப் போரின்
அஸ்திவாரமாக
இருக்கப் போகிறவன்
அரவான் !
பாண்டவர்களின்
வெற்றிக்கு காரணமாக
இருக்கப் போகிறவன்
அரவான் !
தர்மம் வெற்றி பெற
வேண்டும் என்பதற்காக
தன்னையே
தரப் போகிறவன்
அரவான் !
அதர்மத்தை அழிப்பதற்காக
மிகப்பெரிய
தியாகச் செயலைச்
செய்யப் போகிறவன்
அரவான் !
இந்த உலகம் அழியாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக யாராலும்
செய்ய முடியாத
யாரும் செய்யவும்
யோசிக்கக் கூடிய
மிகப் பெரிய செயலை
செய்யப் போகிறவன்
அரவான் !
இந்த உலகம் முழுவதும்
தேடிப்பார்த்தாலும்
இத்தகைய ஒரு
தைரியமான மனத்தைக்
கொண்டவனை
பார்க்க முடியாது
என்று சொல்லத்தக்க
வகையில் செயலைச்
செய்யப் போகிறவன்
அரவான் !"

" நாளை இந்த உலகம்
கிருஷ்ணன் என்ற
கடவுளைக் கூட மறந்து
போய் இருக்கலாம்  ;
அர்ஜுனன் என்ற
ஒருவன் இருந்தானா
என்பதை தேடுவதற்காக
ஒரு கும்பலே
அலைந்து திரிந்து
கொண்டிருக்கலாம் ;
ஆனால் இந்த உலகம்
அழியும் வரை
அரவானை நினைத்துக்
கொண்டிருக்கக் கூடியவர்கள் 
இந்த உலகத்தில்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;
அரவானுக்காக கண்ணீர்
வடிக்கக் கூடியவர்கள்  
இந்த உலகத்தில் இருந்து
கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;
அரவானை தெய்வமாக
வணங்கக் கூடியவர்கள் 
இந்த உலகத்தில்
வசித்துக் கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;"

"அரவான்
நாளைய உலகத்தின்
விடிவெள்ளி !
எதிர்காலத்தின்
நம்பிக்கை நட்சத்திரம் !
இருண்ட வீட்டில்
ஒளி விளக்கு !
கோடை காலத்தின்
குளிர் நிலவு !
என்பதை நினைவில்
கொண்டால்
அரவானின் பெருமை
உனக்குப் புரியும் "

அர்ஜுனன்  :
"கிருஷ்ணா ! அரவான்
எத்தகைய வீரச்
செயலை புரிவான்  ;
எத்தகைய தியாகச்
செயலைச் செய்வான் ;
என்பதை அறிவதற்கு
என் மனம்
ஆவலால் துடிக்கிறது ;
எனக்கு அதை விவரமாகச்
சொல்வாயா கிருஷ்ணா "

கிருஷ்ணன்  :
"நாளை என்ன
நடக்கப்போகிறது
என்பதை அறிந்தால்
இன்றைய வாழ்க்கை
நரகமாகி விடும் என்ற
காரணத்தினால் தான்
நாளை நடக்கப்
போகிறவைகள்
மறைபொருளாக
வைக்கப்பட்டிருக்கிறது ;  
இன்று நடக்கப்
போகிறவைகளைப்
பற்றி சிந்தி அர்ஜுனா !
நாளை நடக்கப்
போகிறவைகளை நான்
பார்த்துக் கொள்கிறேன் ! "

"ஆனால் ஒன்று அர்ஜுனா
நாளை இந்த உலகம்
அர்ஜுனனின் மகன்
யார் என்று கேட்காது  ?
அரவானின் தந்தை
யார் என்று தான்
கேட்கப் போகிறது ?
என்பதை மட்டும்
நினைவில் கொள்
அர்ஜுனா !"

அர்ஜுனன்  :
(கிருஷ்ணன் சொல்வதைக்
கேட்டுக் கொண்டிருந்த
அர்ஜுனன் அரவானைப்
பற்றிய சிந்தனையில்
ஆழ்ந்தான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 17-12-2019
//////////////////////////////////////////

December 16, 2019

பரம்பொருள்-பதிவு-99


            பரம்பொருள்-பதிவு-99

“யாருக்கும் பயப்படாமல்
அரவான் பேசிய
அர்த்தம் நிறைந்த
வாத்தைகளைக் கொண்ட
பேச்சைக் கேட்ட
இந்திரன் அவையில்
உள்ளோர் அனைவரும்
அரவானின் மயக்கும்
பேச்சைக் கேட்டு
பேசுவதற்கு வார்த்தை
எதுவும் இல்லாமல்
இருந்த போதும்
தங்களையும் அறியாமல்
எழுந்து நின்றனர் “

“அர்ஜுனன்
எழுந்து நின்று
மகனே ! என்று
அழைத்துக் கொண்டே
அரவானை
நோக்கி சென்று
கொண்டிருந்தார் ;
அரவானும் தன்
தந்தை அர்ஜுனனைக்
கண்ட மகிழ்ச்சியில்
அர்ஜுனனை
நோக்கி ஓடினான்  
தன்னுடைய
தந்தை அர்ஜுனன்
காலில் விழுந்து
வணங்கினான் அரவான்;”

அரவான் :
“என்னை
ஆசிர்வதியுங்கள்
தந்தையே ! “

அர்ஜுனன் :
“எல்லா நலமும்
பெற்று வளமுடன்
வாழ்க மகனே !
(என்று சொல்லிக்
கொண்டே காலில்
விழுந்த அரவானை
தூக்கி நிறுத்தி
இறுக தழுவிக்
கொண்டான்
அர்ஜுனன்) ;”

“உன் அன்னை
எப்படி இருக்கிறார் ?”

அரவான் :
“தங்கள் நினைவாகவே
இருக்கிறார் ;
தங்களுக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறார் ;
என்றேனும் ஒரு
நாள் உங்களைக்
காண முடியும்
என்ற நினைப்பில்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார் ;
தங்களைக்
காண்பதற்கு காலம்
வழி ஏற்படுத்திக்
கொடுக்கும் என்ற
நம்பிக்கையுடன்
உயிரை
உடலில் வைத்துக்
கொண்டிருக்கிறார் ;
உங்களைத் தவிர
அவர் வேறு
எதையும் சிந்தனை
செய்வதில்லை ;
உங்களைப்
பற்றியே பேசிக்
கொண்டிருக்கிறார் ;
உங்கள்
சிந்தனையிலேயே
காலத்தை ஓட்டிக்
கொண்டிருக்கிறார் ;”

அர்ஜுனன் :
“உன் அன்னை
பெண்களுக்குள்
தெய்வம் ;
காணக்கிடைக்காத
மாணிக்கம் ;
மாசு குறையாத
தங்கம் ; “

அரவான் :
“ஆமாம்”

அர்ஜுனன் :
“உன் தாய் உன்னிடம்
என்ன சொல்லி
அனுப்பினார்?”

அரவான் :
“என் தாய் போர்
ஏற்படப்
போவதை அறிந்து
தந்தைக்கு
உதவியாக இரு
என்று என்னை
அனுப்பி வைத்தார் ;
தந்தை என்ன
சொன்னாலும் எதை
செய்யச் சொன்னாலும்
தட்டாமல் செய்ய
வேண்டும் என்று
சொல்லி என்னை
அனுப்பி வைத்தார் ;”

“என்னுடைய தாயின்
உத்தரவை ஏற்று
நான் தங்களைக்
காண வந்தேன் ;
போரில் உங்களுக்கு
துணையாக இருப்பேன் ;
எத்துன்பம் வரினும்
உங்களை விட்டு
விலக மாட்டேன் ;
நான் தங்களுக்காக
போர் புரிய
எனக்கு அனுமதி
வழங்க வேண்டும் ;”

அர்ஜுனன் : 
“அரவானே! நீ !
பாண்டவர்
சார்பாக போரில்
பங்கேற்பதைக் கண்டு
நான் மனம்
மகிழ்ச்சி
அடைகிறேன் ;
போர் நேரும் போது
நீ எங்களுக்கு
உதவி செய்வாயாக ;”

அரவான் :
“அப்படியே ஆகட்டும்”

“அர்ஜுனனும்
அரவானும் பேசி
முடித்த பின்
அர்ஜுனனிடமிருந்து
விடை பெற்றுச்
சென்ற அரவானை
அர்ஜுனன் மட்டுமல்ல
கிருஷ்ணனும்
அரவான் செல்வதையே
பார்த்துக்
கொண்டிருந்தார் ;”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 16-12-2019
//////////////////////////////////////////

December 13, 2019

பரம்பொருள்-பதிவு-98


            பரம்பொருள்-பதிவு-98

அரவான்  :
"அன்பும் ;கருணையும் ;
கொண்டவனாக
இந்த உலகத்தில்
நான் வாழ்வதற்கு
காரணமாக இருப்பவர் ;
உலகில் உள்ள
அனைத்து உயிர்களையும்
நேசிக்க வேண்டும்
என்று எனக்கு
கற்றுக் கொடுத்தவர் ;
தன்னைப் போல
பிறரை எண்ணும்
தன்மை உள்ளத்தில்
வர வேண்டும்
என்பதை எனக்கு
சொல்லிக் கொடுத்தவர் ;"

"பிறர் நமக்கு துன்பம்
செய்தால்
நாம் எவ்வாறு
கஷ்டப்படுவோமோ ?
அதே போல் தான்
பிற உயிர்களை
நாம் துன்புறுத்தும் போது
அந்த உயிர்களும்
நம்மைப் போல்
கஷ்டப்படும் - எனவே
பிற உயிர்களை
துன்புறுத்தக்கூடாது ?
என்ற உயர்ந்த நெறியை
எனக்கு போதித்தவர் ;"

"அன்பிற்கு
இலக்கணமாக இருப்பவர் ; ;
பாசத்திற்கு
பிறப்பிடமாக உதித்தவர் ;
மாதருக்குள்
மாணிக்கமாகத் திகழ்பவர் ;
பெண்களுக்குள்
வரலாறாக வசிப்பவர் ;
தாய்களுக்குள்
தெய்வத் தாயாக
வாழ்பவர் ;"

"தன்னுடைய கணவனை
எப்போதும் நினைவில்
வைத்து போற்றிக்
கொண்டிருப்பவர் ;
கணவரை கண்
கண்ட தெய்வமாக
அனுதினமும் வழிபட்டுக்
கொண்டிருப்பவர் ;
தன்னுடைய
கணவரைத் தவிர
வேறு யாரையும்
சிந்தனையால் கூட
தீண்டாதவர் ;"

"இந்த உலகம்
கண்டிராத அற்புத
பிறவி அவர்  ;
உலகமே கண்டிராத
அதிசயத்தின் அதிசயமாக
வாழ்ந்து கொண்டிருக்கும்
கருணை தெய்வமான
உலூபியே
என்னுடைய தாய் ;"

"அர்ஜுனன் தன்
இருக்கையில் இருந்து
எழ முயற்சி செய்தான்  ;
கிருஷ்ணன் அவன்
கையைப் பிடித்து
அழுத்தினான் ;
அவன் பேசட்டும்
என்று கண்ணால்
சொன்னார் கிருஷ்ணன்
அர்ஜுனன் தன்
இருக்கையில் அமர்ந்தான் ;"

"அரவான்
தொடர்ந்து பேசினான் "

அரவான்  :
"பொன்னைப் போன்ற
உடல் படைத்து
பொன்னிறமாக
ஒளிர்பவர்  ;
எஃகைப் போன்ற
உள்ளம் படைத்து
கஷ்டங்களை
புறமுதுகிட்டு
ஓடச் செய்தவர் ;
சிங்கம் நிகர்த்த
நடை கொண்டவர்  ;"

"அச்சம் என்றால்
என்ன என்றும்
அச்சத்திற்கான பொருள்
என்னவென்றும்
தெரியாதவர்  ;”

"யாருக்கும் எதற்கும்
எதைக் கண்டும்
எப்போதும்
எந்த காலத்திலும்
அஞ்சாதவர் ;
கலக்கம் என்ற
ஒன்று எப்போதும்
எழாத வகையில்
உறுதியான மனதைக்
கொண்டவர் ;"

"சூழ்ச்சிகளைத்
தகர்த்தெறிந்து
சூதுமதியினரை
அழித்தொழித்து
சூதினால் தன்னை
அழிக்க முடியாது
என்று நிரூபித்துக்
காட்டியவர்  ;
பெண்களை மதித்துப்
போற்றி தெய்வமென
வணங்கி வாழ்ந்து
கொண்டிருப்பவர் ;"

"எதிரிகளின் தூக்கத்தைக்
கலைத்து மரண
பயத்தை ஏற்படுத்திக்
கொண்டிருப்பவர்  ;
இந்த உலகத்தில்
வீரத்திற்கு
எடுத்துக்காட்டாக
திகழ்ந்து
கொண்டிருப்பவர் ;
இந்த உலகம் கண்டிராத
மாவீரனாக இருப்பவர் ;
இனியும் இந்த
உலகம் காண
முடியாத மாவீரனாக
இருக்கக் கூடியவர் ;"

"பீஷ்மரின் அன்பைப்
பெற்றவர்  ;
கிருபாச்சாரியாரின்
ஆசியைப் பெற்றவர்  ;
விதுரரின்
மதிப்பைப் பெற்றவர்  ;
துரோணாச்சாரியாரின்
பிரதம சீடரான
அர்ஜுனனே
என்னுடைய தந்தை !"

"நான் அவர்களுடைய
மகன்
என்னுடைய பெயர்
அரவான் "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 13-12-2019
//////////////////////////////////////////