February 01, 2020

பரம்பொருள்-பதிவு-121


            பரம்பொருள்-பதிவு-121

கிருஷ்ணன் :
"துரியோதனனுக்காக- நீ
களப்பலியாகி
குருஷேத்திரப் போரில்
துரியோதனன்
வெற்றி பெற்று
விட்டான் என்றால்
வருங்கால உலகம்
இருள்மயமானதாக
இருப்பதோடு
மட்டுமல்லாமல்
அதற்குக் காரணமான
உன்னை இந்த
உலகம் வசைபாடும்"

"ஆனால்
பாண்டவர்களுக்காக - நீ
களப்பலியாகி
குருஷேத்திரப் போரில்
பாண்டவர்கள்
வெற்றி பெற்று
விட்டார்கள் என்றால்
வருங்கால உலகம்
ஒளிமயமானதாக
இருப்பதோடு
மட்டுமல்லாமல்
அதற்குக் காரணமான
உன்னை இந்த உலகம்
தெய்வமென வழிபடும் "

"அதனால் நீ
துரியோதனனுக்காக
களப்பலியாகக் கூடாது  ;
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
வேண்டும் - என்று
நான் உன்னை
கேட்கமுடியாது?"

"ஏனென்றால் நீ
ஏற்கனவே
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக வாக்கு
கொடுத்திருக்கிறாய் "

"இப்போது
துரியோதனனிடம்
சென்று
துரியோதனனுக்காக
களப்பலி ஆக
மாட்டேன் என்று
நீ சொன்னால் 
துரியோதனனுக்கு
நீ செய்து
கொடுத்த வாக்கை
மீறியவன் ஆவாய் "

"ஆனால், துரியோதனன்
வரவில்லை என்ற
காரணத்திற்காக
பாண்டவர்களுக்காக நீ
களப்பலியானாய் என்றால்
துரியோதனனுக்கு நீ
செய்து கொடுத்த
வாக்கை மீறியவன்
ஆக மாட்டாய் "

"அதனால் தான் நான்
உன்னை கேட்கிறேன்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா ?"

அரவான் :
“நீங்கள் கேட்டதில்
எந்தவித முடிவும்
இருப்பதாக எனக்குத்
தெரியவில்லையே ! “

“அது அல்லது இது
என்று விடை
காண முடியாத
கேள்வியுடன் நிற்கிறது”

கிருஷ்ணன் :
“நம்முடைய
வாழ்க்கையில்
நமக்கு எதிராக
எதிர்ப்படுபவை எல்லாம்
அது அல்லது இது
என்ற நிலையில்
தான் இருக்கும் “

“சிலவற்றை நாம்
தீர்மானம் செய்ய
வேண்டியதாய் இருக்கும் ;

சிலவற்றை காலம்
தீர்மானம் செய்ய
வேண்டியதாய் இருக்கும் ;”

“நீ துரியோதனனுக்காக
களப்பலியாகப்
போகிறாயா அல்லது
பாண்டவர்களுக்காக
களப்பலியாகப்
போகிறாயா என்பதை
காலம் தான் தீர்மானம்
செய்ய வேண்டும் “

“அதனால் வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று வாக்கு
கொடு அது போதும் “

“மற்றதை காலம்
பார்த்துக் கொள்ளும்”

அரவான் :
"நான் கொஞ்சம்
யோசிக்க வேண்டும்?"

கிருஷ்ணன்  :
"அதர்மத்தை
நிலைவாட்டுவதற்காக
துரியோதனன்
உன்னை நாடி வந்து
களப்பலியாக
உன்னைத் தருகிறாயா?
என்று கேட்டபோது
யோசிக்காமல்
களப்பலியாகிறேன் ;
என்று வாக்கு
கொடுத்த - நீ
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
தர்மத்தை
நிலை நாட்டுவதற்காக
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
உன்னைத் தருகிறாயா ?
என்று நான் கேட்கும்
போது மட்டும் எப்படி
நீ யோசிக்க
வேண்டும் என்கிறாய் ?"

"எதற்கு
யோசிக்க வேண்டுமோ?
அதற்கு எல்லாம்
யோசிக்காமல்
விட்டு விட்டு - எதற்கு
யோசிக்கக் கூடாதோ
அதற்கு எல்லாம்
யோசிக்க வேண்டும்
என்கிறாய் கேட்கவே
விசித்திரமாக இருக்கிறது "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

------------01-02-2020
//////////////////////////////////////////

January 31, 2020

பரம்பொருள்-பதிவு-120


                பரம்பொருள்-பதிவு-120

அரவான் :
"நான் ஏற்கனவே
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு
களப்பலியாவதாக
வாக்கு
கொடுத்திருக்கிறேன் !"

"அப்படி இருக்கும்
போது நான் எப்படி
பாண்டவர்களுக்காக
களப்பலி
ஆக முடியும்?"

"பாண்டவர்களுக்காக
நான் களப்பலியானால்
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
செய்து கொடுத்த
வாக்கை மீறியவன்
ஆக மாட்டேனா ?"

கிருஷ்ணன் :
"பாண்டவர்களுக்காக
களப்பலியாக வேண்டும்
என்று தான் - நான்
உன்னை கேட்டேனே தவிர
துரியோதனனுக்காக
களப்பலியாக வேண்டாம்
என்று - நான் உன்னை
கேட்கவேயில்லையே?"

அரவான் :
"நீங்கள் சொல்வது
எனக்குப் புரியவில்லை?"

கிருஷ்ணன்  :
"வருகின்ற அமாவாசை
தினத்தன்று தானே
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
வாக்கு கொடுத்திருக்கிறாய் "

அரவான் :
"ஆமாம்"

கிருஷ்ணன்  :
"வருகின்ற  அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு "

அரவான் :
"அது எப்படி சாத்தியம்?"

கிருஷ்ணன்  :
"யோசித்துப் பார்த்தால்
எல்லாமே சாத்தியம் தான்"

"சாத்தியமாகாதது என்று
எதுவுமே - இந்த
உலகத்தில் இல்லை"

"ஒரு விஷயத்திற்காக
ஒரு நாள் குறித்து
அந்த நாளை
ஒருவர் பயன்படுத்திக்
கொள்வதற்காக
ஒரு வாய்ப்பு கொடுத்து
அந்த வாய்ப்பைப்
பெற்றவர்
அந்த  வாய்ப்பைப்
பயன்படுத்திக்
கொள்வதற்காக
வரவில்லையென்றால்
வாய்ப்பு
கொடுக்கப்பட்டவருக்கு
அடுத்து யார் இருக்கிறாரோ
அவருக்கு
அந்த வாய்ப்பை
வழங்குவது தானே
உலக நடைமுறை ;

அந்த உலக
நடைமுறையின்
படியே தான்
நான் கேட்கிறேன் ;
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று வாக்கு கொடு
அது போதும்."

அரவான் :
“நான் வாக்கு
கொடுப்பதினால் - எனக்கு
எந்தவிதமான நன்மைகளும்
ஏற்படப் போவதாகத்
தெரியவில்லையே ?”

“வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வரவில்லை
என்றால் தானே
பாண்டவர்களுக்காக-நான்
களப்பலியாக முடியும் ;
எனக்கு வருங்காலத்தில்
நல்ல பெயர் கிடைக்கும் ”

“ஆனால், பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வந்து விட்டால்
அவருக்கு தானே - நான்
களப்பலியாக முடியும் ;
அப்படி என்றால்
வருங்காலத்தில் எனக்கு
கெட்ட பெயர்
தானே ஏற்படும் ;”

“பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாகாமல்
தடுப்பதற்கு நீங்கள்
எந்தவிதமான உபாயமும்
சொல்லவே இல்லையே?”
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாவது
தடுக்கப்படவில்லையே !”

கிருஷ்ணன்  :
“அரவான் ஒன்றை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள் ;
இந்த உலகத்தில்
நடக்கக் கூடியவைகள்
எவற்றையும் தடுத்து
நிறுத்த முடியாது ;
மாற்றி அமைக்கத்
தான் முடியும் ;”

“துரியோதனனுக்காக-நீ
களப்பலியாவதை
தடுத்து நிறுத்த-நான்
முயற்சி செய்யவில்லை ;
துரியோதனனுக்காக
செய்யவிருக்கும்
உன்னுடைய களப்பலியை
பாண்டவர்களுக்கு
மாற்றி அமைக்கத் தான்
நான் முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் ;”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

------------31-01-2020
//////////////////////////////////////////


January 27, 2020

பரம்பொருள்-பதிவு-119


              பரம்பொருள்-பதிவு-119

அரவான்  :
“நாட்டை ஆளும்
மன்னரின் மகனும்  ;
உறவு முறையில்
எனக்கு பெரிய
தந்தையுமாகிய
துரியோதனன்
அவர்கள் என்னை
நாடி வந்து
கைகளை ஏந்தி
யாசகமாக
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கொடு
என்று கேட்கும் போது
நான் எப்படி
கொடுக்காமல்
இருக்க முடியும் ? “

கிருஷ்ணன் :
“யாசகம்
அளிப்பதற்கு முன்
யாசகம் கேட்பவர்
யார் என்பதையும் ;
யாசகமாக
அளிக்கப் போவது
எது என்பதையும் ;
யாசகம் அளிப்பதால்
ஏற்படக்கூடிய
பிரச்சினைகள் எவைகள்
என்பதையும் ;
யோசித்துப்
பார்த்திருந்திருக்க
வேண்டாமா ?”

அரவான்  :
“யாசகம் அளிப்பவர்
இவைகள்
எவற்றையும் பார்க்கக்
கூடாது என்ற விதி
தான் உங்களுக்குத்
தெரியுமே பரந்தாமா ? “

கிருஷ்ணன் :
“சில விதிகளை எல்லா
சந்தர்ப்பங்களிலும்
ஒரே மாதிரியாக
பயன்படுத்த முடியாது  ;
சில விதிகளை
சந்தர்ப்பத்திற்கு
ஏற்றவாறு மாற்றி
பயன்படுத்தித் தான்
ஆக வேண்டும் ;
அப்படி மாற்றி
பயன்படுத்தவில்லை
என்றால் விரும்பத்தகாத
விளைவுகள் தான்
ஏற்படும் ; “

அரவான் :
“பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாகிறேன்
என்று வாக்கு
கொடுத்திருக்கிறேன்  ;
நான் செய்யப்
போகும் இந்த
செயலினால் தான்
விரும்பத்தகாத
விளைவுகள் ஏற்படும்
என்கிறீர்களா பரந்தாமா ! “

கிருஷ்ணன்  :
“ஆமாம் அரவான் !
ஆமாம் “

“துரியோதனனுக்காக
நீ களப்பலி ஆனாய்
என்றால் எத்தகைய
விரும்பத்தாத
விளைவுகள் ஏற்படும்
என்பதை - நீ
யோசித்துப் பார்த்து
இருக்கிறாயா ? “

அரவான்  :
“எத்தகைய
விரும்பத்தகாத
விளைவுகள்
ஏற்படும் என்கிறீர்கள் “

கிருஷ்ணன் :
“துரியோதனனுக்காக நீ
களப்பலியாகி
துரியோதனன்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விட்டான் என்றால் ….?

“தர்மம் அழிந்து
அதர்மம் தழைத்து
ஓங்கும் !

“இன்பம் அழிந்து
துன்பமே
மேலோங்கி நிற்கும் !

“வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
நல்லவர்கள்
வாழ்வதற்கு
இடமே இல்லாமல்
போய் விடும் !”

“துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாகி
துரியோதனன்
வெற்றி பெற்ற
காரணத்தினால் தான்  ;
தாங்கள் அனைவரும்
இத்தகைய துன்ப
நிலைக்கு தள்ளப்பட்டு
அவதிப்பட்டுக்
கொண்டிருக்கிறோம் ;”

“தாங்கள் அடைந்து
இருக்கும் இத்தகைய
ஒரு இழிநிலைக்கு
அரவான் தான் காரணம்.  ;’

“அரவான் மட்டும்
துரியோதனனுக்காக
களப்பலியாகா விட்டால்
தங்களுக்கு இத்தகைய
ஒரு இழிநிலை
ஏற்பட்டு இருக்காது  

“என்று இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும் உன்னை
வசைபாடக் கூடிய
விரும்பத்தகாத
விளைவுகள்
தான் ஏற்படும் “

அரவான் :
“இந்தகைய
விரும்பத்தாத
விளைவுகள்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால் - நான்
என்ன செய்ய
வேண்டும் என்கிறீர்கள்”

கிருஷ்ணன் :
“களப்பலியாகப் போகும்
உன்னுடைய
உயர்ந்த செயலால்
விரும்பத்தகாத
விளைவுகள்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால்…….?”

"""நீ……………………..?

பாண்டவர்களுக்காக

களப்பலியாக

வேண்டும்"""""

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------27-01-2020
//////////////////////////////////////////