February 26, 2020

பரம்பொருள்-பதிவு-140


             பரம்பொருள்-பதிவு-140

சகாதேவன் :
“என்னால்
ஏற்பட்டதல்ல
காலத்தால்
ஏற்பட்டது”

உலூபி :
“தவறை நீங்கள்
செய்து விட்டு
பழியை ஏன்
காலத்தின் மேல்
போடுகிறீர்கள் ? ”

சகாதேவன் :
“இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;
காலத்தை மீறி
எந்த ஒரு செயலும்
நடைபெறாது ; “

“நேற்று நடைபெற்றது ;
இன்று நடைபெற்றுக்
கொண்டிருப்பது ;
நாளை
நடைபெறப்போவது ;
அனைத்தும்
காலத்திற்கு
உட்பட்டது தான் ;  

“காலத்தை மீறி
எதுவும் நடைபெறாது”

உலூபி :
“அரவானின்
பெயரை
சொல்லாமல்
நீங்கள்
மறைத்திருக்கலாமே ?”

சகாதேவன் :
“அரவானின் பெயரை
மறைப்பதால்
ஒரு பயனும்
ஏற்படப்
போவதில்லை”

“நான்
சொல்லாவிட்டாலும்
அரவானின் பெயரை
அனைவரும்
தெரிந்து
கொள்ளத்தான்
போகிறார்கள் ”

உலூபி :
“அப்படி என்றால்
சோதிட
சாஸ்திரத்தைப்
பயன்படுத்தி
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்கப்போவதை
தடுத்திருக்கலாம்
அல்லவா?“

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
இந்த உலகத்தில்
நடைபெறும் எந்த
ஒரு செயலையும்
தடுத்து நிறுத்த
முடியாது - அந்த
செயலை
மாற்றியமைக்கத்
தான் முடியும் “

“பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
செய்யப்படும்
செயல்கள்
அனைத்தும்
நடக்கவிருக்கும்
செயலை மாற்றி
அமைப்பதற்கு
செய்யப்படும்
முயற்சிகள் தான்”

“அதனால் தான்
நான் ஒப்புதல்
அளித்தேன்”

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானைத் தவிர
வேறு யாரும்
இந்த உலகத்தில்
இல்லையா?

சகாதேவன் :
“இரண்டு பேர்
இருக்கிறார்கள்”

உலூபி :
“கெளரவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தை பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்களை
நெருங்க
முடியாது
என்பதால்”

உலூபி :
“அப்படியென்றால்
பாண்டவர்கள் ஏன்
அவர்களுடைய
சம்மதத்தைப் பெற
முயற்சிக்கவில்லை?”

சகாதேவன் :
“அவர்கள்
நெருக்கமானவர்கள்
என்பதால்”

உலூபி :
“யார் அவர்கள்”

சகாதேவன் :
“சில கேள்விக்குரிய
விடையை
தெரிந்து கொள்ள
முயற்சி
செய்யக் கூடாது” .

“சில விஷயங்களை
தெரிந்து
கொள்ளாமல்
இருப்பதே நல்லது”  .

“நீங்கள் கேட்ட
கேள்விக்கு நான்
பதிலை சொன்னால்
உங்களுடைய
காதுகளை நீங்கள்
மூடிக் கொள்வீர்கள்”.

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-02-2020
//////////////////////////////////////////

February 25, 2020

பரம்பொருள்-பதிவு-139


           பரம்பொருள்-பதிவு-139

சகாதேவன் :
" களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவன்
அரவான்
என்பதையும்  ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
வருகின்ற
அமாவாசை
என்பதையும் ;
குறித்துக்
கொடுத்தேன் ; "

"இதில் தவறு
எதுவும்
இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே ! "

"நான் சொன்னதில்
அரவானைப்
பற்றிய
தனிப்பட்ட
விஷயங்கள்
எதுவும்
இல்லையே ! "

"பொதுவான
விஷயங்கள்
தானே
இருக்கிறது ! "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி எந்த ஒரு
சொல்லையும்  
நான் சொல்லவே
இல்லையே  ! "

உலூபி :
"அரவானைப் பற்றி
நீங்கள் சொன்னது
இன்னொருவருடைய
தனிப்பட்ட
விஷயம்
இல்லையா ? "

சகாதேவன் :
"அரவான்
எதிர்காலத்தில்
எப்படி இருப்பான்  ?
அரவானுடைய
எதிர்கால
வாழ்க்கை
எப்படி இருக்கும் ?
என்ற கேள்வி
எழுப்பப்பட்டு
அதற்கு நான்
பதில் சொல்லி
இருந்தால் - அது
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
சொன்னதாக
இருக்கும் "

"அப்போது தான்
நான் சோதிட
சாஸ்திரத்தை
மீறியவனாவேன் "

"ஆனால் நான்
களப்பலி
கொடுப்பதற்கு
தகுந்த ஆள்
அரவான்
என்பதையும்  ;
வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
என்பதையும்  ;
குறித்துக்
கொடுத்தேன் ;"

"இது எப்படி
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
நான் சொன்னதாக
எடுத்துக் கொள்ள
முடியும் "

"அரவானைப்
பற்றிய
பொதுவான
விஷயங்களைத்
தானே
சொல்லியிருக்கிறேன் "

"இது எப்படி
தவறாகும்  "

"நான் தவறு
எதுவும்
செய்யவுமில்லை "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறவும் இல்லை "

"எந்த ரகசியத்தை
சொல்ல வேண்டும்
எந்த ரகசியத்தை
சொல்லக்கூடாது
என்று
சோதிட சாஸ்திரம்
வகுத்து வைத்த
விதியின் படி
தான் சொன்னேன் ;
சோதிட சாஸ்திர
விதிகளுக்குக்
கட்டுப்பட்டுத்தான்
சொன்னேன் ; "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி நான்
எந்த ஒரு
சொல்லையும்
சொல்லவேயில்லை  !

உலூபி :
"ஆனால்
உங்களுடைய
செயலால்
எத்தகைய
விளைவுகள்
ஏற்பட்டிருக்கிறது
என்பதைப்
பார்த்தீர்களா ? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 25-02-2020
//////////////////////////////////////////

February 24, 2020

பரம்பொருள்-பதிவு-138


            பரம்பொருள்-பதிவு-138

உலூபி :
“களப்பலியை
ஆரம்பித்து
வைத்தது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் இல்லை ”

உலூபி :
“வேறு யார் ? ”

சகாதேவன் :
“அண்ணன்
துரியோதனன்”

உலூபி :
“அவருக்கு
வழி காட்டியது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் யாருக்கும்
வழி காட்டவில்லை “

உலூபி :
“ வழிகாட்டாமல்
என்ன செய்தீர்கள் ?”

சகாதேவன் :
“அவர் கேட்ட
கேள்விகளுக்கு
பதில் சொன்னேன்”

உலூபி :
“சோதிடத்தை
பயன்படுத்தி
அல்லவா பதில்
சொல்லி
இருக்கிறீர்கள் ? ”

சகாதேவன் :
“ஆமாம்! அவர்
கேட்ட
கேள்விகள்
அப்படி”

உலூபி :
“சோதிட
சாஸ்திரப்படி
ஒருவருடைய
விவரங்களை
அவருடைய
அனுமதி
இல்லாமல்
இன்னொருவருக்கு
சொல்லக்கூடாது
என்பது
உங்களுக்கு
தெரியுமில்லையா?”

சகாதேவன் :
“தெரியும்”

உலூபி : 
அப்படி
தெரிந்திருந்தும்
நீங்கள் எப்படி
அரவானைப்
பற்றிய
விஷயங்களை
வேறொருவரிடம்
சொன்னீர்கள் ? “

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
என்ன சொல்ல
வேண்டுமோ
அதைத் தான்
சொன்னேன்”

உலூபி :
“ரகசியங்களை
வெளியிடக் கூடாது
என்று சோதிட
சாஸ்திர விதி
சொல்கிறதே!”

சகாதேவன் :
“சோதிட சாஸ்திரம்
சொல்லும்
விதியை மீறி
நான் எந்த ஒரு
ரகசியத்தையும்
வெளியிடவேயில்லையே ? “

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானையும்,
களப்பலி
கொடுப்பதற்குரிய
நாளையும்
குறித்துக்
கொடுத்தது
நீங்கள் தானே ?
இது சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?”

சகாதேவன் :
“மீறிய செயல்
இல்லை”

உலூபி :
“அது எப்படி
மீறிய செயல்
இல்லாமல் போகும்”

சகாதேவன் :
“ஆமாம் ! மீறிய
செயல்
இல்லை தான் “

உலூபி :
“ஒரு நபரின்
தனிப்பட்ட
விஷயங்களை
சொல்வது
சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?
அரவானைப்
பற்றிச்
சொன்னது
தவறில்லையா ? “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 24-02-2020
//////////////////////////////////////////