July 25, 2023

தென்காசி சரித்திரம்-(7)-மறைந்திருக்கும் உண்மைகள்-(5)- தாவரங்கள்-வனிதா தேவி-24-07-2023

 தென்காசி சரித்திரம்-(7)-மறைந்திருக்கும் உண்மைகள்-(5)-

தாவரங்கள்-வனிதா தேவி-24-07-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்

இலஞ்சி ஊரில்

மருத்துவம் குணம் கொண்ட மரங்கள்

மூலிகைகள்

செடிகள்

ஆறுகள்

ஆகியவற்றின் 

விசேஷங்கள்

வரலாற்று உண்மைகள்

ஆகியவற்றை

வனிதா தேவி

AGRICULTURAL OFFICER,

அவர்கள்

விவரிக்கிறார்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 24-07-2023

------- திங்கட் கிழமை

 

///////////////////////////////////////////////////////

வனிதா தேவி அவர்கள்

மரங்கள்

மூலிகைகள்

செடிகள்

ஆறுகள்

ஆகியவற்றைப்பற்றி

அதன்

தன்மைகள்,

சிறப்புகள்,

விசேஷங்கள்

ஆகியவற்றைப்பற்றி

பேசி இருக்கிறார்

அதைத் தெரிந்து கொள்ள

கீழே உள்ள

YOU TUBE

முகவரிக்கு செல்லவும்

நன்றி

 

https://www.youtube.com/watch?v=yFsDm1OsXLY








July 23, 2023

குடைவரைக் கோயில்-(7)-மலையடிக்குறிச்சி குடைவரைக் கோயில்-23-07-2023

 

குடைவரைக் கோயில்-(7)-மலையடிக்குறிச்சி 

குடைவரைக் கோயில்,

மரகதவள்ளி சமேத மகாதேவர் 

குடைவரைக் கோயில்-23-07-2023

 

அன்பிற்கினியவர்களே!


புளியங்குடியிலிருந்து 7 கிலோ மீட்டரில்

தாருகாபுரம் என்னும் சிற்றூருக்கு அருகில்

மலையடிக்குறிச்சி என்ற ஊர் உள்ளது

இந்த ஊரின் வடக்கிலுள்ள மலைக்குன்றின்

அடிவாரத்தில் இந்தக்

குடைவரைக் கோயில் அமைந்துள்ளது

 

இந்தக் குடைவரைக் கோயில்

மலையடிக்குறிச்சி குடைவரைக் கோயில்

அல்லது

மரகதவள்ளி சமேத மகாதேவர் குடைவரைக் கோயில்

என்று அழைக்கப்படுகிறது

 

மலையடிக் குறிச்சி குடைவரைக் கோயிலின்

சிறப்புகள்

விசேஷங்கள்

வரலாற்று உண்மைகள்

ஆகியவற்றைப்

பற்றிப் பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 23-07-2023

------- ஞாயிற்றுக் கிழமை

 

///////////////////////////////////////////////////////

மலையடிக் குறிச்சி

குடைவரைக்கோயிலைப் பற்றியும்

அதன்

தன்மைகள்,

சிறப்புகள்,

விசேஷங்கள்

ஆகியவற்றை தெரிந்து கொள்ள

கீழே உள்ள

YOU TUBE

முகவரிக்கு செல்லவும்

நன்றி


https://www.youtube.com/watch?v=W34Z_btY2LU






March 05, 2023

பதிவு-6- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-6- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இளமை ராகம் இதய வீணையில் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் !

பருவ ராகம் பள்ளி யறையில் எழுதி வைக்கப்பட்ட கவிதை !

கன்னி ராகம் கண்களின் ஓரத்தில் காட்டப் பட்ட காட்சி !

அழகு ராகம் ஆசையின் பிம்பத்தில் வார்க்கப் பட்ட நிழல் !

அன்பு ராகம் ஆசையின் அரவணைப்பில் பொறித்து வைக்கப்பட்ட பொதிகைச்சாரல் !

இசை ராகம் இளமை ஊஞ்சலில் மாட்டி வைக்கப்பட்ட காவியம் !

சோக ராகம் துன்பத்தின் சுமையில் முடித்து வைக்கப்பட்ட இன்பம் !

ஆசை ராகம் அழகின் ஆராதனையில் அனுபவிக்கப்பட்ட உண்மை நிஜம் !

கல்வி ராகம் அறிவின் சிகரத்தில் நாட்டப்பட்ட ஞானக் கொடி !

சுதந்திர ராகம் புரட்சியின் முடிவில்  பெற்றுக் கொண்ட தாகம் !

அறிவு ராகம் சிந்தனையின் ஓரத்தில் எழுதப் பட்ட வரலாறு !

உழைப்பு ராகம் இரத்தத்தின் இடையில் தெறிக்கப் பட்ட சுயமரியாதை !

அடிமை ராகம் இல்லாமையின் கண்களில் சுடர்விடும் கனல் !

புரட்சி ராகம் எரியும் நெருப்புக்கு ஊற்றப்படும் அழியாத தன்மானம் !

முதுமை ராகம் முடிந்து போனவைக்கு இருப்பிடம் நாடும் குடில் !

கவிதை ராகம் கவிஞனின் கற்பனையில் நடமாடும் ஞானக் கிடங்கு !

சீர்திருத்த ராகம் சிந்தனையின் முடிவில் பொறிக்கப் படும் கல்வெட்டு !

நட்பு ராகம் துன்பத்தின் தொடக்கத்தில்   பெறப்படும் அனுபவ முத்திரை !

அரசியல் ராகம் அறிவின் உழைப்பில் எழுதப்படும் முடியாத இலக்கியம் !

என்பதை உணர்ந்து

சிற்றின்பத்திற்கும் - பேரின்பத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

நிரந்தரமான - தற்காலிகமான தன்மைக்குள்ள வேறுபாட்டையும் ,

ஜீவாத்மா - பரமாத்மாவுக்குள்ள வேறுபாட்டையும் ,

நிரந்தரத்திற்கும் தற்காலிகத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர நிம்மதி எது,  எது தற்காலிக நிம்மதி என்பதுக்குள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர இன்பம்,  எது தற்காலிக இன்பம், என்பதுக்குள்ள வேறுபாட்டையும்

பதி-பசு-பாசம் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பையும்

தத்துவத்தையும் ரகசியத்தையும் யார்ஒருவர் அறிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்காமல் பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்புறாமல் ஞானம் அடைவர் என்கிறார் திருமூலர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

பதிவு-5- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-5- ஆய பதிதான்-

-திருமூலர்

 

ஆதியும் நீ , அந்தமும் நீ,  அந்தத்தின் அருளும் நீ !

எண்ணும் நீ ,எழுத்தும் நீ , எழுத்தின் இலக்கணம் நீ !

எண்ணமும் நீ , சொல்லும் நீ, சொல்லின் செயலும் நீ !

கண்ணும் நீ , காட்சியும் நீ, காட்சியின் யதார்த்தம் நீ !

அறிவும் நீ , ஆற்றலும் நீ ,ஆற்றலின் இயல்பு நீ !

ஆள்பவனும் நீ , ஆளப்படுபவனும் நீ, ஆளுமையின் பிராணனும் நீ !

விண்ணும் நீ , மண்ணும் நீ , மண்ணின் மூலம் நீ !

அன்பும் நீ , ஆசியும் நீ , ஆசியின் கருணையும் நீ !

ஓசையும் நீ , ஓம்காரமும் நீ,  ஓம்காரத்தின் உருவமும் நீ !

ஒளியும் நீ , வளியும் நீ , வளியின் விதியும் நீ !

மதியும் நீ , மனதும் நீ,  மனதின் பிறப்பும் நீ !

அண்டமும் நீ , அகிலமும் நீ,  அகிலத்தின் சான்று நீ !

உரையும் நீ , உள்ளும் நீ , உள்ளின் உருவகமும் நீ !

பாடலும் நீ , பொருளும் நீ ,பொருளின் மெய்யும் நீ !

இறப்பும் நீ , அழிவும் நீ , அழிவின் ஆக்கமும் நீ !

சான்று நீ , சன்மார்க்கம் நீ , சன்மார்க்கத்தின் விழி நீ !

பார்ப்பவன் நீ , பார்க்கப்படுபவன் நீ,  பார்க்கப்படுபவனின் பாதை நீ !

இதயம் நீ , இல்லறம் நீ , இல்லறத்தின் நல்லறம் நீ !

சாந்தம் நீ , சித்தம் நீ , சித்தத்தின் சிந்தை நீ !

பாரும் நீ , பகலவனும் நீ, பகலவனின் தோற்றம் நீ !

இம்மையும் நீ  ,மறுமையும் நீ, மறுமையின் சாரம் நீ !

முதலும் நீ , முடிவும் நீ, முடிவின் முதலும் நீ !

என்பதில் தெளிவு பெற்று யாருக்கு அறிவு ரேகை திறந்து கொள்கிறதோ

அவருக்கு பதி பசு பாசம் இவற்றுக்கு இடையே உள்ள

ஒற்றுமை வேற்றுமை தெரியும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

பதிவு-4- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-4- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இருப்பு நிலையிலிருந்து விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரான ஜீவாத்மா இயக்க நிலை பெற்று உருவாகிறது. இந்த விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரான ஜீவாத்மா கூடியே பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக்கூடிய நிலம் நீர் நெருப்பு காற்று விண் ஆகியவை தோன்றுகிறது.  இந்த பஞ்ச பூதங்கள் ஒன்றுடன்  ஒன்று சரியான விகிதத்தில் இணைந்து உலகத்தில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிர்கள் மற்றும் உலகத்தில் உள்ள தோற்றங்கள் அனைத்தும் தோன்றுகிறது.

 

உலகத்தில் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதும் உலகத்தோற்றங்கள் அனைத்தும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு காரணமாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு மூலமாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு அடிப்படையாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு ஆதாரமாக இருப்பதுமாகிய

விண் என்ற உயிராகிய ஜீவாத்மாவை அதாவது இந்துக்கள் குறிப்பிடும் பசுவை

சித்தாந்தவாதிகள் இயக்க நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவி என்றும் குறிப்பிடுகின்றனர்

 

மனிதனுடைய உயிரானது படர்க்கை நிலை எய்தி மனமாகிறது என்பதையும்

ஒடுக்க நிலை அடையும் போது அறிவாகிறது என்பதையும்

மனம் என்றால் என்ன என்பதையும் அறிவு என்றால் என்ன என்பதையும்

மனதிற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதையும்

அறிவை எவ்வாறு அறிவது என்பதையும் மனதை எவ்வாறு அறிவது என்பதையும்

எதை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும் என்பதையும்

எதை அறிய வேண்டும் என்பதையும் அறிவதற்காக ஓடும் மனிதன்

பாசத்திற்குள் கட்டுண்டு விட்டதால் எதையும் அறிய முடியாமல் தவிக்கிறான்

பாசவிலங்குகளை அறுக்கும் போது உண்மை என்ன என்பதை உணர்ந்து கொள்கிறான்

இந்துக்கள் சொல்லக்கூடிய இந்த பாசத்தை

சிந்தாந்தவாதிகள் உணர்வு நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்

 

இந்துக்கள் குறிப்பிடும் பதி – பசு -பாசம்

கோயில்களில் சிவன் – நந்தி – பலிபீடம் என்றும்

சித்தாந்தவாதிகள் இருப்பு நிலை – இயக்க நிலை – உணர்வு நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் பிதா-பரிசுத்த ஆவி – சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

பதிவு-3- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-3- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இந்துக்கள் குறிப்பிடும் பதி-பசு-பாசம் என்பதை

கிறிஸ்தவர்கள் பிதா-பரிசுத்த ஆவி-சுதன் என்று குறிப்பிடுகின்றனர்

அதாவது பதியை பிதா என்றும், பசுவை பரிசுத்த ஆவி என்றும்,

பாசத்தை சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்

 

பதி-பசு-பாசம் என்ற மூன்றை அவரவர் உணர்ந்த நிலைக்கேற்ப குறிப்பிடுகின்றனர்

இருப்பு நிலை-இயக்க நிலை -உணர்வு நிலை -சித்தாந்தவாதிகள்

பிதா-பரிசுத்த ஆவி-சுதன்-கிறிஸ்தவர்கள்

 

முதல் நிலை மூலநிலை ஆதிநிலை என்று சொல்லப்படக்கூடிய

அனைத்தையும் தாங்கிக் கொண்டிருப்பதும்

அனைத்திற்குள்ளும் இருப்பதும்

அனைத்தையும் படைத்துக் கொண்டிருப்பதும்

அனைத்தையும் காத்துக் கொண்டிருப்பதும்

அனைத்தையும் அழித்துக் கொண்டிருப்பதும் ஆகிய சர்வவல்லமை படைத்த

இந்துக்கள் குறிப்பிடும் பதியை சிந்தாந்தவாதிகள் இருப்பு நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் பிதா என்றும் குறிப்பிடுகின்றனர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

 

 

 

பதிவு-2- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-2- ஆய பதிதான்-

-திருமூலர்

 

”””ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே”””

நம்முடைய உலக பந்தங்களை அதாவது பாசத்தை பலிபீடத்தில் வைத்து அழித்து விட்டால் அல்லது எரித்து விட்டால் ஜீவாத்மாவாகிய பசு பரமாத்வாகிய பதி எனப்படும் சிவனுடன் இணைகிறது

 

பதியாகிய சிவனை பசுவாகிய ஜீவாத்மா இணைய வேண்டும் என்றால் பாசமாகிய மும்மலங்கள் விலக வேண்டும் என்பதைக் குறிக்க அமைக்கப் பட்டதே சிவன்- நந்தி - பலிபீடம்

 

சிவன் கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு எதிராக உள்ள நந்தியின் காதுகளில் சிலர் ஏதோ முணுமுணுப்பார்கள் நமக்கு என்ன தேவையோ அதை   நந்தியின் காதுகளில் சொல்ல வேண்டும் அவ்வாறு நந்தியின் காதுகளில் நமக்கு என்ன தேவையோ அதை சொன்னால் நமக்கு தேவையானவை கிடைக்கும் என்பது ஐதிகம்

 

இதன் அர்த்தம் என்னவென்றால்

நாம் பிராணாயாமம் வாசியோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைச் செய்து மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் எனப்படும் மலக்காற்றோடு உள்ளே இழுக்கப்படும் பிராணன் எனப்படும் உயிர்க் காற்றைக் கலந்து ஆற்றல் மிக்க காற்றாக்கி மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறாதாரங்களைத் துளைத்து மேலேற்றி பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைக்க வேண்டும்

 

அவ்வாறு இணைக்கும் போது பாசங்கள் அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு விடும்

அதாவது பாசங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி விடும்

நம்மிடம் உள்ள பாசங்கள் அனைத்தும் விலகிய பின் ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைந்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது தான்

சிவன்-நந்தி-பலிபீடம் அதில் உள்ள அர்த்தம்

 

இந்துக்கள் குறிப்பிடும் பதி-பசு-பாசம் என்பதை

சித்தாந்தவாதிகள் இருப்பு நிலை -இயக்க நிலை – உணர்வு நிலை என்று குறிப்பிடுகின்றனர்

அதாவது பதியை இருப்பு நிலை என்றும், பசுவை இயக்க நிலை என்றும்

பாசத்தை உணர்வு நிலை என்று குறிப்பிடுகின்றனர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////