November 16, 2011

விளக்கு ஏற்றும் விதம்



விளக்கு ஏற்றும் விதம்

தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்

வாழைத் தண்டு நார்  திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்

புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாரு தீரும்

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்

சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்

பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்



கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்

மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்

பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்

குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்



நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்



நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்

விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்

வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்

ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்



கிழக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்

வடக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்

மேற்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்



அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;
வேலை வேண்டுவோர்;
நல்ல கணவன் வேண்டுவோர்;
குடும்ப சுகம் ;
புத்ர சுகம் வேண்டுவோர்;
சாயங்கால வேளை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட இப்பலனை அடையலாம்





4 comments:

  1. நல்லப் பயனுள்ளப் பதிவு. நன்றிகள் பல

    ReplyDelete
  2. HI SIR IM NEW HERE
    MY NAME IS RAMNATH PANDIARAJ(I found u @thillairaj sir.blogspot)
    சொந்த வீடு கிடைக்க எந்த மாதிரி செய்ய வேண்டும்??

    நன்றி

    ReplyDelete