March 03, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தனக்குவமை-பதிவு-19


             
             இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-தனக்குவமை-பதிவு-19  
  
                    “”பதிவு பத்தொண்பதை விரித்துச் சொல்ல
                                                           ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

        ““கேளுங்கள் , அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ;
           தேடுங்கள் , அப்பொழுது கண்டடைவீர்கள் ;
           தட்டுங்கள் , அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ””
                                                                           -------மத்தேயு----7 : 7

““கேளுங்கள் , அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ;””
உள்ளத்தால் கண்ட நினைவுகளை உருவத்தால் செதுக்க முடியவில்லை ;
எழுத்துக்களால் தீட்டிய வார்த்தைகளை அச்சில் வார்க்க முடியவில்லை ;
விரல்களால் மீட்டிய அபிநயங்களை மேடை ஏற்ற முடியவில்லை ;
கனவுகளில் பதித்த முத்திரைகளை இரத்தத்தால் தீட்ட முடியவில்லை ;
உவகையில் உருக்கி வைத்த உணர்ச்சிகளை
உணர்வுகளில் காட்ட முடியவில்லை ;
செதுக்கி வைத்த கலைகளை கண்கொண்டு ரசிக்க முடியவில்லை ;
உருக்கி வைத்த உவகைகளை உவமையாக்க முடியவில்லை ;
நுகர்ந்து வைத்த நுகர்வுகளை அனுபவித்து பார்க்க முடியவில்லை ;
நடித்து வைத்த நாடகங்களை ரசித்து ருசிக்க முடியவில்லை ;
மீட்டி வைத்த ராகங்களை சிந்தனையில் தேக்க முடியவில்லை ;
பற்றி வைத்த பரிவுகளை பந்தத்தில் சேர்க்க முடியவில்லை ;
சொல்ல நினைத்த சொர்க்கங்களை சுக போகத்தில் செதுக்க முடியவில்லை ;
வார்த்து வைத்த விண்மீன்களை மாலை கோர்க்க முடியவில்லை ;
பிடித்து வைத்த கதிரவனை விளக்கொளிக்காக விளக்கேற்ற முடியவில்லை ;
அடைத்து வைத்த தென்றலில் நீந்தக் கற்க முடியவில்லை ;
அழைத்து வந்த கடவுளை அன்பில் கட்ட முடியவில்லை ;
திருடி வந்த நரகத்தை விலைக்கு விற்க முடியவில்லை ;
கொண்டு வந்த சுவர்க்கத்தை சுகித்து மகிழ முடியவில்லை ;
படித்து வந்த தமிழைப் பதவியில் வைக்க முடியவில்லை ;
அழைத்து வந்த அறிவை அரியணை ஏற்ற முடியவில்லை ;
வானவில்லைப் பிடித்து வட்டிக்கு விட்டு வாழ முடியவில்லை ;
காதல் செய்த காதலியைக் கல்யாணம் செய்ய முடியவில்லை ;

மனதில் தேக்கி வைத்த ஆசைகள் ,
உள்ளத்தில் எழுப்பி வைத்த கற்பனைக் கோட்டைகள் ,
விழிகளில் தேக்கி வைத்த கனவுகள் ,
ஆகியவைகளைக் கேட்டால் அப்பொழுது கொடுக்கப்படும்



                        “””தேடுங்கள் , அப்பொழுது கண்டடைவீர்கள்”””
யாரிடம் கேட்க வேண்டும்
எத்தகைய தன்மை உடையவரிடம் கேட்க வேண்டும்
யாரிடம் கேட்டால் நமக்கு வேண்டியவை கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நம் துன்பங்கள் நீங்குமோ?
யாரிடம் கேட்டால் நம் தேவைகள் நிறைவேறுமோ?
யாரிடம் கேட்டால் நம் வாழ்க்கை சுகமாகுமோ?
யாரிடம் கேட்டால் நம் கவலைகள் மாறுமோ?
யாரிடம் கேட்டால் நமக்கு இல்லை என்று சொல்லாமல் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நமக்கு உயர்ந்தவைகள் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நமக்கு மகிழ்ச்சிகள் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நம் அகம் மகிழுமோ?
யாரிடம் கேட்டால் நம் முகத்தில் புன்னகை பூ பூக்குமோ?
யாரிடம் கேட்டால் கிடைக்க முடியாததும் கிடைக்குமோ?
யாரிடம் கேட்டால் நினைத்து பார்க்க முடியாததும் பெறமுடியுமோ?
யாரிடம் கேட்டால் அழிவில்லாத ஒன்றையும் பெற முடியுமோ?
யாரிடம் கேட்டால் நம் சிந்தை தெளியுமோ?
யாரிடம் கேட்டால் நம் வாழ்வின் தடுமாற்றம் நீங்குமோ?

அத்தகையவரிடம் ,
அத்தகைய தன்மை உடையவரிடம் ,
அத்தகைய சிறப்புகள் பெற்றவரிடம் கேட்க வேண்டும் .

அத்தகையவரை தேட வேண்டும்
அத்தகைய ஒருவர்  என்றால் - அவர்
ஆண்டவராகத் தான் இருக்க முடியம்
ஆண்டவரால் மட்டும் தான்
நாம் நினைத்ததை நடத்த முடியும் ;
தேவையை தீர்க்க முடியும் ;
மகிழ்ச்சியை தர முடியும் ;
துன்பத்தை போக்க முடியும் ;
கவலைகளை கரைக்க முடியும் ;
கண்ணீரை துடைக்க முடியும் ;

அத்தகைய ஆண்டவரை தேடினால் கண்டு அடைவீர்கள்
அதாவது அவரை காணக்கூடிய பேறு உங்களுக்கு கிடைத்தால் ;
அவரிடம் இணையக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் ;
அவரிடம் பேசக்கூடிய தகுதி உங்களுக்கு உண்டானால் ;
நீங்கள் கேட்கக் கூடியவைகளை இறைவன் கேட்கும் நிலை வந்து விட்டால் ;
அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் .
நீங்கள் இறைவனைக் கண்டு ,
அதன்மூலம் உங்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வீர்கள் .



“”தட்டுங்கள் , அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;””

எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள முடியுமா?
என்பதை கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:

உங்கள் ஆசைகள் ஒழுக்கமானவைகளாக இருந்தால் ;
நல்ல எண்ணத்துடன் கூடியவைகளாக இருந்தால் ;
மற்றவருக்குத் துன்பத்தை தரக்கூடியவையாக இல்லாமல் இருந்தால் ;
மற்றவர்  வாழ்வை கெடுப்பதாக இல்லாமல் இருந்தால் ;
உங்களுக்கு உங்களுடைய பாவ புண்ணியங்களுக்கு ;
ஏற்ற விதத்தில் கொடுக்கப்படும் .

நீங்கள் அன்புடன் ; நீங்கள் கருணையுடன் ; நீங்கள் இரக்கமுடன் ;
நற்குணங்களைப் பெற்று நல்லதே நினைத்து ; நல்லதே சொல்லி ;
நல்லதே செய்து ; வாழும் ஒருவராக -  நீங்கள் இருந்து
இறைவனின் இதயக் கதவை தட்டினால் ;
அவருடைய இதயத்தை வேண்டுதல் என்ற முறையில் ;
பிரார்த்தனை என்ற வழியில் தட்டினால் ;
உங்கள் தேவைகள் சரியானவைகளாக இருந்து ,
அவை உங்கள் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப
ஏற்ற விதத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் .

உங்கள் வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்பவர்  யார்?
என்பதை உணர்ந்து கேளுங்கள்.
அதாவது ஆணட்வர்  தான் தருவார்  என்பதை
உணர்ந்து தேடுங்கள், காணுங்கள் .
அதன்மூலம் உங்களுக்குத் தேவையானவைகளைப் பெற்று கொள்வீர்கள் .
தேவையானவைகள் பெற வேண்டும் என்றால் ,
இறைவன் இதயக் கதவைத் தட்ட வேண்டும் .
அப்பொழுது இதயக் கதவு திறக்கப்பட்டு உங்களுக்கு தேவையானவைகள்,
உங்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அளிக்கப்படும் .

இதைச் சுருக்கமாகச் சொன்னால் ,
உங்களுக்கு தேவையானவைகளை ஆண்டவனிடம் கேட்டால்
ஆண்டவன் தருவார்  என்று பொருள் .

உங்களுக்கு தேவையானவைகளை ஆண்டவரிடம் கேட்டால்
உங்களுடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப
தேவையானவைகளைத் தருவார் ;
தேவையில்லாதவைகளைத் தர மாட்டார் ;
 என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் இயேசு .



திருவள்ளுவர்:
        “””தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
             மனக்கவலை மாற்ற லரிது”””
                                                     ------திருவள்ளுவர்----திருக்குறள்--

பாசத்தின் கருவறையில் கூட எனக்காக
அன்புகள் கருவுறவில்லை ;
மலரத் துடிக்கும் மொட்டுகளில் கூட
எனக்காக சுவைத் தேன்கள் சுரக்கவில்லை ;
வீசவரும் தென்றலில் கூட
எனக்காக இனிமைகள் பூப்பூக்கவில்லை ;
உதிக்கத் துடிக்கும் உதயசூரியனில் கூட
எனக்காக உயர்வுகள் உதயமாகவில்லை ;
ஆனால் கல்லறையின் இடுக்குகளில் கூட எனக்காக
இடம் ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது .

கஷ்டத்தை கட்டிலாகப் போட்டு படுக்கிறவன் – நான் ;
தோல்வியை துண்டாக மாற்றி தோளில் போட்டு நடக்கிறவன் – நான் ;
பிரச்சினையை தலையணையாக்கி தலைக்கு
வைத்துக் கொள்பவன்- நான் ;
கண்ணீரை தாகம் தீர்க்கும் தண்ணீராக பருகுபவன் – நான் ;
வெற்றி என்ற காற்று வரவில்லை என்பதற்காக
இன்பம் என்ற சுவாசத்தை வாங்க முடியாவிட்டாலும்
வாழ்க்கை வெயிலில் நடக்க தயங்காதவன் -  நான் ;

வாழ முடியவில்லை ;
வாத் தெரியவில்லை ;
வாழ வழியில்லை ;
வாழவே பிடிக்கவில்லை ;
ஏன் பிறந்தேன் என்று புரியவில்லை ?
எதற்காக வாழ்கிறேன் என்று தெரியவில்லை ?

மனதில் அமைதி இல்லை ;
உள்ளத்தில் இன்பம் இல்லை ;
வாயில் புன்னகை இல்லை ;
வேலை தேடினால் வேலை கிடைக்க வில்லை ;
செல்வம் சேர்க்க முடியவில்லை ;
வாழ வீடு இல்லை ;
சாப்பிட உணவு இல்லை ;
உடுத்த உடை இல்லை ;
இல்லறத்தில் நுழைய துணைவி கிடைக்கவில்லை ;
துணைவி கிடைத்தாலும் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை ;
குழந்தைச் செல்வமும் இல்லை ;
நிம்மதியாக வாழ முடியவில்லை ;
அமைதியாக இருக்க முடியவில்லை ;

என்று உள்ளம் நொந்து ,வாழ்க்கை வெறுத்துப் போய்
உதவிக்கரம் கொடுத்து துவண்டு போன வாழ்க்கையை
துhக்கி நிறுத்தி யாரேனும் இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன் .

            தோல்வியுற்ற என்னை
            தோள் கொடுத்து துhக்க
            துணை இல்லை இங்கே !

                                                வருந்திக் கிடக்கும் என்னை
                                                வாழ வைக்க
                                                வழி இல்லை இங்கே !

             அழிந்து விட்ட
              அன்புகளை அரவணைக்க
              ஆதரவு இல்லை இங்கே !

                                               முடிந்து விட்ட
                                               முடிவுகளுக்கு முதலுதவி செய்ய
                                                முகம் இல்லை இங்கே !

             கரைந்து விட்ட
             காட்சிகளைக் கரை சேர்க்க
              கவலை இல்லை இங்கே !

                                                 மடிந்து விட்ட
                                                 மனச் சாட்சிகளை மன்றத்தில் ஏற்ற
                                                 மனது இல்லை இங்கே

               பிரிந்து விட்ட
              பிரிவுகளை உறவாக்க
               பிணைப்பு இல்லை இங்கே !

                                               சரிந்து விட்ட
                                               சதிராட்டங்களைச் சரித்திரத்தில் ஏற்ற
                                               சந்தர்ப்பம் இல்லை இங்கே !

என்பதை உணர்ந்து கொண்டேன்
அழுது புலம்புவதால் ஒரு பயனும் இல்லை .

நம் கவலைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியவர்  யார்
என்பதை அறிய வேண்டும் .
அவரிடம் சரண் அடைய வேண்டும் என்கிறார்  திருவள்ளுவர்.

தனக்குவமை இல்லாதான் என்று பெயரிட்டு அழைக்கப்படுபவனால்
மட்டுமே நம் கவலைகள் அனைத்தையும் தீர்க்க முடியும்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

தனக்குவமை இல்லாதான் :
பிரபஞ்ச பரிணாமத்தில் ; பரிணாம தோற்றத்தில் ;
ஒரு உருவத்தைப் போல ஒரு உருவம் ,
ஒரு குணத்தைப் போல ஒரு குணம் ,
ஒரு நிறத்தைப் போல ஒரு நிறம் ,
ஒரு வடிவத்தைப் போல ஒரு வடிவம் ,
ஒரு மணத்தைப் போல ஒரு மணம் - உண்டு
ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதி - அந்தம் ஒன்றே .

ஆனால் , அதிநிலை , முதல்நிலை , மூலநிலை
இருப்புநிலை என்று சொல்லப்படக்கூடிய
பரம்பொருளுக்கு ஒத்த பொருள் ஒன்று இல்லை .
அதனை மற்றொன்றுடன் ஒப்பிட்டு விளக்க முடியாது .
உவமையால் விளக்க முடியாது .
அதனால் அந்த நிலையை , அந்த மூலநிலையை ,
தனக்கு உவமை இல்லாதான் என்று கூறுகிறோம் .

தனக்குவமையில்லாதவன் தன்னை உவமைகள் கொண்டு
விளக்க முடியாதவன் என்று அந்த நிலையை கூறுகிறோம் .
மற்றொரு நிலையை உவமை காட்டி இது போலான
என்று கூறி விளக்கலாம் .
ஆனால் அவ்வாறு உவமை காட்டி கூறவொண்ணாத பெருமை வாய்ந்த
பரம்பொருள் உணர்ந்து பற்றி நின்றாலொழிய விளக்க முடியாது .

அத்தகையவனிடம் சேர்ந்தால் ஒழிய மனக்கவலையை மாற்ற முடியாது
மனிதனுக்குள்ள அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்து
அவனுடைய கவலைகளை நீக்க வேண்டுமானால்
பரம்பொருள் , ஆண்டவன் , இறைவனால்

மட்டும் தான் முடியும் - எனவே
உனக்கு எவை தேவையோ அதை இறைவனிடம் கேள் - அதை

எல்லாம் வல்ல இறைவன் அளிப்பார்  என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து – திருவள்ளுவர்:
இயேசு , மனிதனுக்கு எது தேவையோ அதை கேட்டால் அதை ஆண்டவனால் மட்டும் தான் தர முடியும் என்கிறார் .

அவ்வாறே ,
திருவள்ளுவரும் , மனிதனுக்கு எது தேவையோ அதை இறைவனிடம் கேட்டால் அதை இறைவனால் மட்டும் தான் தர முடியும் என்கிறார்.


                            “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                  போற்றினேன் பதிவுபத்தொண்பது  ந்தான்முற்றே “”

No comments:

Post a Comment