May 22, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-8


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-8

மகாபாரதத்தில்
அரிய,
அபூர்வமான,
ஆழமான,
கருத்துக்கள்
நிறைந்து இருக்கிறது.

திரௌபதியின் சேலையை
துச்சாதனன் துகில்
உரியும் போது
கடவுள்
எப்போது வந்தார்
தெரியுமா?

திரௌபதியின் சேலையை
துச்சாதனன் துகில்
உரியும் போது
திரௌபதி தன்னுடைய
இரண்டு கைகளாலும்
தன்னுடைய மார்பை
மூடிக் கொண்டு
கடவுளே காப்பாற்று
என்றாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
ஒரு கையால்
தன்னுடைய மார்பை
மூடிக் கொண்டு
கடவுளே காப்பாற்று
என்றாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
இரண்டு கைகளையும்
தலைக்கு
மேலே தூக்கி
கடவுளே
என்னை காப்பாற்று
என்றாள்

அப்போது தான்
கடவுள் வந்து
புடவை கொடுத்து
திரௌபதியைக்
காப்பாற்றினார்,

ஒரு செயல்
மனிதனால்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் என்பவர்
வர மாட்டார்
ஒரு செயல்
மனிதனால் முடியாது
என்ற நிலை
வரும்போது தான்
கடவுள் வருவார்

திரௌபதி தன்னுடைய
இரண்டு கைகளாலும்
தன்னுடைய மார்பை
மூடிக் கொண்டு
தன்னுடைய
மானத்தை
காப்பாற்றிக்
கொள்ள முடியும்
என்று நினைத்து
கடவுளை வேண்டினாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
ஒரு கையால்
தன்னுடைய
மார்பை மூடிக் கொண்டு
தன்னுடைய
மானத்தை காப்பாற்றிக்
கொள்ள முடியும்
என்று நினைத்து
கடவுளை வேண்டினாள்
கடவுள் வரவில்லை

திரௌபதி தன்னுடைய
மானத்தை
தன்னால் காப்பாற்றிக்
கொள்ள முடியாது
அதாவது தன்னுடைய
மனித சக்தியால்
முடியாது
மனித சக்தியை
தாண்டிய ஒரு சக்தி
அதாவது
கடவுள் சக்தியால்
தான் முடியும்
என்று நினைத்து
தன்னுடைய
இரண்டு கைகளையும்
தலைக்கு
மேலே தூக்கி
கடவுளே காப்பாற்று
என்று வேண்டினாள்
அப்போது தான்
கடவுள் வந்து
திரௌபதியை காப்பாற்றினார்

மனித சக்தியால்
முடியாது
என்ற நிலை
வரும்போது தான்
கடவுள் சக்தி
நம்மை காப்பாற்றும்

இதைத் தான்
பரிபூரண சரணாகதி
என்று கூறுவோம்
கடவுளிடம்
நூறு சதவீதம்
நம்மை ஒப்படைத்து
விட்டோமானால்
அதற்குப் பெயர் தான்
பரிபூரண சரணாகதி

திரௌபதி தன்
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
தன்னை காப்பாற்று
என்று
கடவுளிடம்
தன்னை முழுமையாக
ஒப்படைத்து விட்ட
இந்த செயல் தான்
பரிபூரண சரணாகதி
என்பதை
அபூர்வமான
கதையின் மூலம்
நமக்கு எளிமையாக
உணர்த்திச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

----------இன்னும் வரும்
/////////////////////////////////////////////


No comments:

Post a Comment