June 28, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-33



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-33

திருவாரூரை தலைநகராகக்
கொண்டு மனுநீதிச் சோழன்
என்னும் மன்னர் அறநெறி
வழுவாது ஆண்டு வந்தார்.

மனுநீதிச் சோழருக்கு
மகப்பேறு இல்லாததால்
தனக்கு பிறகு
நீதி நெறியை
நிலை நிறுத்தி
ஆளும்
மன்னனைப் பெறாது
இந்த உலகில்
உள்ள அனைத்து
உயிர்களும் துன்புறுமே
என்று துன்புற்று
தியாகேசப் பெருமானை
காலையும், மாலையும்
தொழுத காரணத்தினால்
மனுநீதி சோழனுக்கு
ஒரு ஆண் குழந்தை
பிறந்தது

அந்தக் குழந்தைக்கு
தியாகராஜப் பெருமானுடைய
திருநாமமாகிய
வீதிவிடங்கன்
என்ற பெயரை சூட்டினார்.

வீதிவிடங்கர்
நீதி நூல்களைப் பற்றியும்
அரசியலைப் பற்றியும்
போர்க்கலைகளைப்
பற்றியும்
தெளிவுறக் கற்றார்
அன்பு, அறிவு,
அமைதி, அடக்கம்,
கொண்டவராகத்
திகழ்ந்தார்.

ஒரு நாள்
வீதிவிடங்கர்
சிவாலயம் சென்று
சிவபெருமானை
வழிபடுவதற்காகத்
தேரேறி சென்றபோது
ஒரு பசுவின் கன்று
யார் கண்ணிலும்
படாமல் துள்ளிக்குதித்து
வந்து தேர்ச்சக்கரத்தில்
அகப்பட்டு,
குடல் சரிந்து
உடல் நசிந்து
உயிர் துறந்தது.

கன்றின் தாயாகிய
பசு அங்கு வந்து
இறந்து கிடந்த
தன் கன்றை கண்டு
துன்பமுற்று
கதறியழுது
மூர்ச்சித்து
விழுந்தது.

இந்த நிகழ்வைக்
கண்ட வீதிவிடங்கர்
தேரை விட்டு
கீழே இறங்கி
ஐயோ என்ன பாவம்
செய்தேன்
என் தந்தைக்கு
அழியாத பெரும்
பழியை
தேடி வைத்தேனே
நான் கண்ணில்லாத
பாவியாகி இந்த
பாவத்தை செய்தேனே
இனி இந்த
உலகத்தில் நான்
வாழ்வது முறையாகது
நான் வாழ்வதை
விட உயிரைக்
கொன்ற நான்
உயிர் துறப்பதே
மேல் என்று
வீதிவிடங்கர்
அழுது புலம்பினார்.

அமைச்சர்கள்
அவரைத் தொழுது
இளவரசே தாங்கள்
இதற்காக வருத்தப்பட
வேண்டாம்
தாங்கள் வேண்டுமென்றே
இந்த பாவத்தை
செய்யவில்லையே
தாங்கள் அறியாமல்
செய்த தவறு
தானே இது
தாங்கள் இதற்காக
உயிரை விட வேண்டிய
அவசியமில்லை

அறநூல் வல்ல
ஆன்றோரை அணுகி
சான்றோர் பால்
சென்று
பிராயச்சித்தம்
செய்து கொள்ளலாம்
வாருங்கள்
இளவரசே என்று
வீதிவிடங்கரை
அழைத்துக் கொண்டு
சென்றனர்.

பசு மூர்ச்சை தெளிந்து
எழுந்து கண்ணீர்
வடித்தது
இறந்து கிடந்த
தன் கன்றைக் கண்டு
துன்பத்தால் துடி
துடித்தது.
பசு சிறிது நேரம்
கதறி அழும்
மூர்ச்சித்து விழும்
மீண்டும் எழும்
இறந்து கிடக்கும்
தன் கன்றை
நினைத்து வருந்தும்

பொய், சூது,
கொலை, கொள்ளை
கற்பு நெறி பிறழ்தல்
ஆகிய பஞ்சமா
பாதகங்களை
செய்யாத மக்கள்
வாழும் இந்த ஊரில்
நீதி வழுவாமல்
ஆட்சி செய்யும்
இந்நகரை ஆளுகின்ற
மன்னரை அணுகி
நீதி கேட்பேன்
என்று புலம்பியது
கன்றை இழந்த பசு

குடிமக்களுக்கு குறை
ஏற்பட்டால்
அரசனுக்கு தெரிவிக்க
அரண்மனை வாயிலில்
ஓர் ஆராய்ச்சி மணி
கட்டி தொங்க விடப்
பட்டிருந்தது.
அது ஒரு நாளும்
அடிக்கப்படாமல்
இருந்தது.

பசு பரிதாபத்துடன்
ஓடிவந்து
தனது கோட்டால்
அம்மணியைக் கணீர்
கணீர் என்று
அடித்தது.
  
---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////



No comments:

Post a Comment