September 14, 2018

திருக்குறள்-பதிவு-20


                      திருக்குறள்-பதிவு-20

டார்வினின்
கண்டுபிடிப்பு
யாருமே கண்டுபிடிக்க
முடியாத அபூர்வமான
கண்டுபிடிப்பு;
உலகையே
புரட்டிபோட்ட
கண்டுபிடிப்பு;
யாரும் நம்பவே
முடியாத கண்டுபிடிப்பு;
சிந்தித்துக் கூட
பார்க்க முடியாத
கண்டுபிடிப்பு:

இத்தகைய உயர்ந்த
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
உயிரிகளின் மிக
அடிப்படையான
ஆதாரத்தை
ஆதாரங்களோடு
உண்மையை
வெளிப்படுத்துவதற்கு,
ஒரு மனிதன்
தன் வாழ்க்கையில்
ஏராளமான
போராட்டங்களையும்
எவ்வளவு கஷ்டங்களையும்
சந்திக்க வேண்டியிருந்தது
என்பதை டார்வின்
வாழ்க்கையைப்
பார்த்தாலே
தெரியும்

சார்லஸ் டார்வின்
உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டைக்
கண்டு பிடித்து
இந்த உலகத்திற்கு
சொன்ன போது
இந்த உலகம்
சார்லஸ் டார்வினுக்கு
எதிராக
பல்வேறு
பிரச்சினைகளை
கொண்டு வந்தது.

ஐந்து நாட்கள்
அண்ட சராசரங்களையும்
படைத்த பரமபிதா
ஆறாவது நாள்
களிமண்ணை
உருட்டி ஆதாமையும்
அவன் விலா
எலும்பிலிருந்து
ஏவாளையும் படைத்து
விட்டு ஏழாவது நாள்
ஓய்வு எடுத்துக்
கொண்டார்
என்று பைபிளில்
சொல்லப்பட்டதற்கு
எதிராக ஒரு
மதத்திற்கு எதிராக
ஒட்டு மொத்த
கிறிஸ்தவர்களுக்கு
எதிராக இருந்த
டார்வினின் கண்டுபிடிப்பு
எவ்வளவு
எதிர்ப்புகளை சந்தித்து
இருக்கும்

பைபிளில் சொல்லப்
பட்டதற்கு எதிராக
சார்லஸ் டார்வினின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
சார்லஸ் டார்வின்
தன் வாழ்நாளில்
பல்வேறு எதிர்ப்புகளைச்
சந்தித்தார்.

மதத்திற்கும் தான்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பிற்கும்
எந்தவித சம்பந்தமும்
இல்லை என்று
சார்லஸ் டார்வின்
எவ்வளவு எடுத்துச்
சொல்லியும்
இந்த உலகம்
ஏற்றுக் கொள்ளவேயில்லை.

உலகைக் கூர்ந்து
கவனிப்பதையும்
ஆராய்ச்சிகள்
செய்வதையும்
நிறுத்துமாறு
நான் எப்போது
நிர்பந்திக்கப்படுகிறேனோ
அன்றைய
தினமே நான்
இறந்து போவேன்
என்றார் சார்லஸ்
டார்வின்

சார்லஸ் டார்வின்
1882-ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம்
19-ம் நாள்
இவ்வுலக வாழ்வை
நீத்தார்.
இங்கிலாந்தின்
வெஸ்ட்
மினிஸ்டர் அப்பேயில்
(Westminster Abbey)
அவரது உடல்
அடக்கம் செய்யப்பட்டது
இரண்டு பெரிய
விஞ்ஞானிகளுடன்
ஜான் ஹெர்ஸ்ஷல்
மற்றும்
சர் ஐசக் நியூட்டன்
இவர்களுடன்
சார்லஸ் டார்வின்
ஏப்ரல் 26-ஆம் தேதி
மிகுந்த அரசு
மரியாதையுடன்
சார்ல்ஸ் டார்வின்
உடல் அடக்கம்
செய்யப்பட்டது

சார்ல்ஸ் டார்வின்
இறந்து ஒன்றரை
நூற்றாண்டுகளுக்குப்
பின்னர்
அவரின் கோட்பாட்டை
லண்டனின்
தேவாலய சர்ச்
தவறென்று
சொன்னதற்கு மன்னிப்பு
கேட்டுக் கொண்டது

1859-ஆம் ஆண்டு
சார்லஸ் டார்வின்
தான் கண்டுபிடித்த
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
இந்த உலகத்திற்கு
வழங்கிய போது
எவ்வளவு எதிர்ப்புகளை
சார்லஸ் டார்வின்
சந்திக்க வேண்டி
இருந்தது என்பதை
வரலாறு
தெள்ளத் தெளிவாக
நமக்கு உணர்த்துகிறது

ஆனால்,
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
அதாவது
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
அனைவரும்
புரிந்து கொள்ளும்
வகையில்
எளிமையாக
நம் முன்னோர்கள்
சொல்லி இருக்கிறார்கள்
என்பது எத்தனை
பேருக்குத் தெரியும்

--------- இன்னும் வரும்
---------- 14-09-2018
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment