September 20, 2018

திருக்குறள்-பதிவு-22


                   திருக்குறள்-பதிவு-22

சார்லஸ் டார்வின்
கூற்றுப்படி
குரங்கிலிருந்து
வந்தவன் மனிதன்
அதாவது,
விலங்கிலிருந்து
வந்தவன் மனிதன்

தசாவதாரத்தில்
உள்ள கூற்றுப்படி,
வராக அவதாரம்;
சிம்ம அவதாரம்;
வாமன அவதாரம்;
என்ற வரிசையில்
வராக அவதாரம்
என்பது
விலங்காக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;
சிம்ம அவதாரம்
என்பது
விலங்கும், மனிதனும்
சேர்ந்து ஒரு
உருவமாக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;
வாமன அவதாரம்
என்பது
மனிதனாக இருக்கும்
நிலையைக் குறிக்கும்;

இந்த தசாவதார
வரிசையில்
விலங்கிலிருந்து
மனிதன் தோன்றினான்
என்று சொல்லப்
பட்டிருக்காது
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்று
சொல்லப்பட்டிருக்கும்

விலங்கிலிருந்து
மனிதன் தோன்றுவதற்கு
முன்பாக இடையில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை
ஒன்று உண்டு அந்த
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்று
நம் முன்னோர்கள்
சொல்லி இருப்பார்கள்

சார்லஸ் டார்வின்
விலங்கிலிருந்து
மனிதன் நேரடியாக
தோன்றினான் என்று
சொல்லி இருப்பார்.

சார்லஸ் டார்வின்
சொன்னது போல்
விலங்கிலிருந்து மனிதன்
நேரடியாக தோன்றி
இருக்க முடியாது.

தசாவதாரத்தில் சொல்லப்
பட்டிருப்பது போல
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றி இருக்க முடியும்

நீரில் வாழ்ந்த
உயிரினம்
நேரடியாக நிலத்தில்
வாழ்வதற்குரிய
உடலமைப்பைப்
பெற்றிருக்கவில்லை.
நீரிலும், நிலத்திலும்
வாழ்வதற்குரிய
உடலமைப்பைப்
பெற்ற பிறகு,
நீரை விட்டு விட்டு
நிலத்தில் வாழக்கூடிய
தகவமைப்பைப் பெற்றது
பிறகு தான்
நிலத்தில் வாழ்ந்தது.

இரண்டு ஒன்றாக
இருக்கும் போது
இரண்டில் ஒன்று கழிந்து
ஒன்று உருவானது
ஒன்று நேரடியாக
மாற்றமடையவில்லை.

அதைப்போலத்தான்
விலங்கு நிலை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை
பிறகு இதில் உள்ள
விலங்கு நிலை கழிந்து
மனிதன் என்ற
நிலை தோன்றியது.

விலங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்பது
சார்லஸ் டார்வின் கருத்து
விலங்குக்கும்
மனிதனுக்கும் இடையில்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலை என்ற
ஒன்று உண்டு என்பது
தசாவதாரத்தின் மூலம்
நம் முன்னோர்கள்
சொல்ல வரும் கருத்து

சார்லஸ் டார்வின்
விலங்குக்கும்
மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
கண்டு பிடிக்காமல்
போய் இருக்கலாம்
அல்லது
இன்னும் வாழ்ந்திருந்தால்
அவர் அதனை
கண்டுபிடித்திருக்கலாம்
ஆனால்,
விலங்குக்கும்
மனிதனுக்கும்
இடைப்பட்ட நிலையான
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையை
இன்றளவும்
யாரும் கண்டுபிடிக்கவில்லை
இந்த விஷயத்தை
கண்டுபிடிக்க
இன்னும் விஞ்ஞானிகள்
எத்தனை நூற்றாண்டுகள்
எடுத்துக் கொள்ளப்
போகிறார்கள் என்பதும்
அல்லது
கடைசிவரை
கண்டுபிடிக்காமல் இருந்து
விடப்போகிறார்கள்
என்பதும் தெரியாது.

ஆனால் பல
நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
நம் முன்னோர்கள்
விலங்கு நிலையிலிருந்து
மனிதன் நேரடியாக
தோன்றவில்லை
விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
அதில் உள்ள
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் தோன்றினான்
என்கிறார்கள்.

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையிலிருந்து
தான் மனிதன்
தோன்றினான் என்பதை
உணர்ந்த நம்
முன்னோர்கள்
விலங்கும், மனிதனும்
சேர்ந்த ஒரு நிலைக்கு
ஒரு பெயரை
வைத்திருக்கிறார்கள்
அதனை சிற்பமாக
வடித்து வைத்திருக்கிறார்கள்
அது என்ன
என்பதைப் பற்றி
தெரிந்து கொள்வோம்

--------- இன்னும் வரும்
---------- 20-09-2018
////////////////////////////////////////////////





No comments:

Post a Comment