October 04, 2018

திருக்குறள்-பதிவு-30


                      திருக்குறள்-பதிவு-30

உலகில் பிறக்கும்
எந்த ஒன்றும்
அது பிறக்கும் போது
அந்த பிறப்பு
அதற்கு சிறப்பைப்
பெற்றுத் தருவதில்லை
ஆனால்,
அதன் வளர்ச்சியில்
ஏற்படக்கூடிய
மாற்றமே
அதற்கு சிறப்பைப்
பெற்றுத் தருகிறது

குழந்தை பிறக்கும்போது
அக்குழந்தை
எந்தவிதமான
சிறப்பையும்
பெறுவதில்லை
ஆனால்,
குழந்தை வளர்ந்து
இச்சமுதாயம்
பாராட்டும் வகையில்
மாற்றம் அடையும் போது
அக்குழந்தை சிறப்பைப்
பெறுகிறது

விதையிலிருந்து செடி
பிறக்கும் போது
அது சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்,
செடி மரமாகி,
மரத்தில்
பூ காயாக
மாற்றம் அடையும்போதும்,
காய் கனியாக
மாற்றம் அடையும்போதும்,
சிறப்பைப் பெறுகிறது

பசுவிலிருந்து கன்று
பிறக்கும் போது
அந்த பசுக்கன்று
எந்தவிதமான
சிறப்பையும்
பெறுவதில்லை
ஆனால்
பசுக்கன்று வளர்ந்து
பசுவாக மாற்றம்
அடையும் போதும்,
பாலைக் கொடுக்கக்கூடிய
அளவில் மாற்றம்
அடையும் போதும்,
சிறப்பைப் பெறுகிறது

மண்ணினால் பானை
செய்யும்போது
அந்த பானை
பிறக்கிறது
இவ்வாறு
அந்த பானை
பிறக்கும் போது
அப்பானை சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்.
அப்பானையை
நெருப்பில் இட்டு
சுட்டப்பின் பானை
பயன்படுத்தக்கூடிய
அளவிற்கு மாற்றம்
அடையும்போது
சிறப்பைப் பெறுகிறது

செங்கலைச்
செய்யும் போது
அச்செங்கல்
பிறக்கிறது
இவ்வாறு செங்கல்
பிறக்கும்போது
அச்செங்கல்
சிறப்பைப்
பெறுவதில்லை
ஆனால்
அந்த செங்கல்
தீயினால் சுடப்பட்டு
சுட்ட செங்கலாக
மாற்றம் அடைந்து
பயன்படுத்தக்கூடிய
அளவிற்கு
மாற்றம் அடையும்போது
சிறப்பைப் பெறுகிறது

உலகில் உள்ள
அனைத்தையும்
நாம் உற்று
நோக்கினால்
பிறப்பை விட
மாற்றம் சிறப்பானது
என்பதை நாம்
உணர்ந்து கொள்ள
முடியும்

எனவே,
பிறப்பை விட
மாற்றம் சிறந்தது
என்பதை
பிறப்பின் மூலம்
பிறந்து கொண்டிருக்கும்
ஆண் இனமும்,
பெண் இனமும,
உணர்ந்து கொள்ள
வேண்டும்
அப்படி
ஆண் இனமும்,
பெண் இனமும்
உணர்ந்து கொண்டால்
மட்டுமே
ஆண் இனமும்,
பெண் இனமும்,
மாற்றத்தின் மூலம்
தோன்றிக்
கொண்டிருக்கும்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
மதித்து நடக்கும்
இல்லையேல்
மதிக்காது என்பதை
நாம் உணர்ந்து
கொள்ள வேண்டும்

சார்லஸ் டார்வின்
குரங்கிலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
சொல்லி இருந்தாலும்;

நம் முன்னோர்கள்
தசாவதாரத்தில்
சிங்க தலையும்,
மனித உடலையும்
கொண்ட
உயிரினத்திலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
சொல்லி இருந்தாலும்;

விலங்கும், மனிதனும்
சேர்ந்த உயிரினமான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன்
தோன்றினான் என்று
உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
நாம் தெரிந்து
வைத்திருந்தாலும்;

இவைகள் எல்லாம்
தேவையில்லாமலேயே
நாமே உயிரினங்களின்
பரிணாமக் கோட்பாட்டை
எளிதாகத் தெரிந்து
கொள்ள முடியும்
அது எப்படி
என்பதைப் பற்றி
இனி  பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 04-10-2018
/////////////////////////////////////////


No comments:

Post a Comment