October 20, 2018

திருக்குறள்-பதிவு-37


                     திருக்குறள்-பதிவு-37

“””தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க்
கல்லால் மனக்கவலை
மாற்றல் அரிது”””


தெரியாத ஒன்றைப்
பற்றி விளக்குவதற்கு
தெரிந்த ஒன்றைக்
கொண்டு ஒப்பிட்டு
விளக்குவது
உவமை அணி
எனப்படும்

ஆப்பிள் என்றால் என்ன
என்றே தெரியாதவருக்கு
ஆப்பிள் பற்றி தெரிய
வைக்க வேண்டுமானால்
அதனோடு தொடர்புடைய
வேறு ஒரு பொருளை
ஒப்பிட்டு ஆப்பிளை
விளக்க வேண்டும்.

ஆப்பிளை பார்க்காதவருக்கு
ஒரு தக்காளியை
எடுத்துக் கொண்டு
இதே மாதிரி தான்
ஆப்பிள் இருக்கும்
சிவப்பு வர்ணத்தில்
இருக்கும் இதை விட
சற்று பெரியதாக
இருக்கும் என்று
சொல்லி ஆப்பிளைப்
பற்றி அறியாதவருக்கு
ஆப்பிள் எப்படி
இருக்கும் என்று
விளக்க முடியும்

இந்த உலகத்தில்
உள்ள பொருள்களில்
ஏதேனும் ஒரு தெரியாத
பொருளைப் பற்றி
ஒருவர் தெரிந்து
கொள்ள விரும்பினால்
அவருக்கு
அந்த பொருளுடன்
தொடர்புடைய
வேறு ஒரு பொருளை
சுட்டிக் காட்டி
விளக்கம் கொடுத்து
அந்த தெரியாத
பொருள் இப்படித்தான்
இருக்கும் என்பதை
அவருக்கு விளக்க
முடியும்

உலகத்தில் உள்ள
எந்த ஒரு
தெரியாத பொருளையும்
வேறு ஒரு பொருளை
சுட்டிக் காட்டி
விளக்க முடியும்

ஆனால், இறைவன்
இப்படித் தான் இருப்பான்
இந்த குணங்களைக்
கொண்டு தான் இருப்பான்
என்பதை விளக்க
இந்த உலகத்தில்
எந்த ஒரு
பொருளும் இல்லை
எந்த ஒரு பொருளைக்
கொண்டும் ஒப்பிட்டு
விளக்க முடியாதவன்
இறைவன்
அதனால் தான்
இறைவனை தனக்குவமை
இல்லாதான்
என்கிறோம்.

தனக்குவமை
இல்லாதவன் என்று
சொல்லப்படுகின்ற
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
கர்மவினைகளைக்
கழித்தவருக்கு
பிறவி என்பது
கிடையாது
பிறவி என்பது
இல்லாதவருக்கு
மனக்கவலை என்பது
ஏற்படாது

ஆனால்
தனக்குவமை இல்லாதவன்
என்று சொல்லப்படுகிற
இறைவனுடன்
இரண்டறக் கலக்காதவருக்கு
கர்ம வினைகள்
கழியாமல்,
கர்ம வினையினால்
தொடர்ந்து பிறவி
பல உண்டாகி
கஷ்டங்கள் ஏற்பட்டு
மனக்கவலை
என்பது ஏற்படும்
தொடர்ந்து பிறவி
எடுத்து வரும்போது
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
கஷ்டங்களை அனுபவிக்க
வேண்டி வரும்
மனக்கவலை என்பது வரும்
அவர்களுடைய
மனக்கவலையை
மாற்ற முடியாது.

தனக்குவமை இல்லாதவன்
தாள் சேர்ந்தாற்கல்லால்
என்றால்,
எந்த பொருளோடும்
ஒப்பிட்டுக் காட்டி
விளக்க முடியாத
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இருப்பவர்கள்
என்று பொருள்

மனக்கவலை மாற்றல்
அரிது என்றால்,
கர்ம வினையைக்
கழிக்காமல்
பிறவி பல எடுத்து
துன்பப்படுபவர்களுடைய
மனக்கவலையை மாற்ற
முடியாது என்று
பொருள்.

தனக்குவமை இல்லாதவன்
என்று சொல்லப்படுகிற
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இருப்பவர்களுக்கு
கர்ம வினைகள்
கழியாமல்,
கர்ம வினையினால்
தொடர்ந்து பிறவி
பல உண்டாகி
வாழ்க்கையில் ஏற்படும்
கஷ்டங்களினால்
உண்டாகக்கூடிய
மனக்கவலையை
மாற்ற முடியாது

ஆனால்,
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
கர்மவினையைக்
கழித்தவருக்கு
பிறவி என்பது
ஏற்படாத காரணத்தினால்
மனக் கவலை
என்பது உருவாகாது
என்பதைத் தான்

தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை
மாற்றல் அரிது

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  20-10-2018
///////////////////////////////////////////////


No comments:

Post a Comment