October 30, 2018

திருக்குறள்-பதிவு-42

                      திருக்குறள்-பதிவு-42

உலகில் எந்த
ஒரு இடத்திலும்,
எந்த செயல்
நடைபெற்றாலும்,
அந்த இடத்தில்
இரண்டு பேர்கள்
இருப்பார்கள்

ஒன்று  : ஆதரிப்பவர்கள்
இரண்டு : எதிர்ப்பவர்கள்

அதைபோலத்தான்
பைசா நகரத்தின்
சாய்ந்த கோபுரத்தின்
உச்சியின் மேல் நின்று
மேலிருந்து
வெவ்வேறு
எடையுள்ள இரண்டு
குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழ விட்டு
அவை இரண்டும்
ஒரே சமயத்தில்
பூமியில் வந்து
விழுவதை
தனது சோதனை
மூலம் நிரூபித்துக்
காட்டி
அரிஸ்டாட்டில்
சொன்ன விதியை
தவறு என்று
நிரூபித்த
அந்த விஞ்ஞானியின்
சோதனையைக் கண்ட
மக்களில்
ஒரு பிரிவினர்
அந்த விஞ்ஞானியை
ஆதரித்தனர்
மற்றொரு பிரிவினர்
அந்த விஞ்ஞானியை
எதிர்த்தனர்.

பல்லாண்டு காலமாக
மக்களால் சரி
என்று நம்பப்பட்டு
வந்த ஒரு விதியை
எளிமையான
சோதனை மூலம்
தவறு என்று
நிரூபித்த அந்த
விஞ்ஞானியை
எதிர்ப்பவர்கள்
சொன்னார்கள்
இவர் செய்த
சோதனையில்
ஏதோ மாயமந்திரம்
இருக்கிறது;
இயற்கைக்கு
மாறானதாக இருக்கிறது;
இது நடைபெறுவதற்கு
சாத்தியமே இல்லை;
இவர் ஏதோ
பித்தலாட்ட வேலை
செய்து இருக்கிறார்;
ஏமாற்று வேலை
செய்து இருக்கிறார்;
சூழ்ச்சி வேலை
செய்து இருக்கிறார்;
மாபெரும்
விஞ்ஞானியான
அரிஸ்டாட்டில்
எவ்வாறு தவறு
செய்திருக்க முடியும்;
அரிஸ்டாட்டில் தவறு
செய்திருக்க
வாய்ப்பேயில்லை;
இவர் செய்த
சோதனை தான்
தவறானது;
ஏமாற்று வேலையைக்
கொண்டது;
பித்தலாட்டங்களைக்
கொண்டது;
என்று பலவாறாக
அந்த விஞ்ஞானியை
இழிவு படுத்தி பேசினர்
அந்த விஞ்ஞானியை
எதிர்ப்பவர்கள்

அந்த விஞ்ஞானி
செய்து காட்டிய
சோதனையை
ஆச்சரியத்துடன்
பார்த்துக் கொண்டிருந்த
மக்களில்
ஒரு பிரிவினர்
அந்த விஞ்ஞானியின்
சோதனையைக்
கண்டு வியந்தனர்;
அரிஸ்டாட்டில்
என்னும் மாபெரும்
அறிஞர் சொன்ன
விதியையே தவறு
என்று சொல்லி
அதை எளிமையான
சோதனை மூலம்
நிரூபித்த
இந்த விஞ்ஞானி
சாதாரணமானவராக
இருக்கவே முடியாது;
பெரிய அறிவாளியாகத்
தான் இருக்கமுடியும்;
சிறந்த விஞ்ஞானியாகத்
தான் இருக்க முடியும்;
இந்த விஞ்ஞானி
செய்த சோதனை
வியப்பிற்குரியது;
என்று அந்த
விஞ்ஞானியை
ஆதரிப்பவர்கள்
அந்த விஞ்ஞானியைப்
புகழ்ந்தார்கள்.

அந்த விஞ்ஞானி
இயற்பியலார்,
கணிதவியலார்,
வானியல் அறிஞர்,
தத்துவஞானி,
என்று பல்வேறு
பெயர்களில்
அழைக்கப்படுபவர்.

அது மட்டுமல்ல
நவீன வானியல்
ஆய்வுகளின் தந்தை,
நவீன
இயற்பியலின் தந்தை,
அறிவியலின் தந்தை,
நவீன
அறிவியலின் தந்தை
என்று பல்வேறு
நிலைகளில் சிறப்பித்துக்
கூறப்படுபவர் தான்
அந்த விஞ்ஞானி

கடந்த நூற்றாண்டுகளில்
தெரியாமல்
மறைந்திருந்த
பல மகத்தான
காட்சிகளை, நான்
மட்டும் முதலில்
காணும்படி
வாய்ப்பளித்த கடவுளின்
பேரருளுக்கு
அளவற்ற எனது
நன்றியைக் கூறுகிறேன்
என்று சொன்னவர்
தான் அந்த விஞ்ஞானி

அரிஸ்டாட்டிலின்
விளக்கத்தைத் தவிர
வேறு எதையும்
நாங்கள் ஏற்க
மாட்டோம் என்று
சொன்ன மக்களிடம்
உண்மைகள் பிறப்பது
அதிகாரத்தின்
அதட்டலிலிருந்து அல்ல
நடைமுறை
அனுபவங்களிலிருந்து
தான் அவை
உதிக்கின்றன என்று
சொன்னவர் தான்
அந்த விஞ்ஞானி

---------  இன்னும் வரும்
---------  30-10-2018
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment