November 25, 2018

திருக்குறள்-பதிவு-58


                       திருக்குறள்-பதிவு-58

கலிலியோ
தன்னுடைய கண்களை
இழந்த பின்பும்
தன்னுடைய
ஆராய்ச்சிகளை
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்தது
விஞ்ஞான உலகத்திற்கு
மட்டுமல்ல இந்த
உலகத்திற்குக் கூட
மிகப் பெரிய
இழப்பு தான்

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்தது
விஞ்ஞான உலகம்
தன்னுடைய
கண்களை இழந்தது
போல் ஆகி விட்டது

கலிலியோ தன்னுடைய
கண்களை இழந்ததின்
காரணத்தினால்
இந்த உலகத்திற்கு
கிடைக்க வேண்டிய
மிக உயர்ந்த
அரிய கண்டுபிடிப்புகள்
அனைத்தும்
இந்த உலகத்திற்கு
கிடைக்காமல் போய்
விட்டது என்று
உறுதியாக சொல்லலாம்
ஆமாம் கலிலியோ
தன்னுடைய கண்களை
இழந்த காரணத்தினால்
இந்த உலகத்திற்கு
கிடைக்காமல் போன
கண்டுபிடிப்புகள்
எவ்வளவு என்பதை
யாராலும் கணித்து
சொல்ல முடியாது

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்தது
இந்த உலகத்திற்கு
மிகப்பெரிய இழப்பு
என்பதை நாம்
ஒப்புக் கொள்ளத்
தான் வேண்டும்

கலிலியோ
தன்னுடைய
கண்களை இழந்து
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த போது
தன்னுடைய நண்பருக்கு
உதவியுடன் ஒரு
கடிதத்தை எழுதினார்
அந்த கடிதம்
கலிலியோவின்
மன உறுதிக்கு மிகப்
பெரிய சான்று

நான் முற்றிலும்
குருடாய் விட்டேன்
ஆன்றோர் அறியாத
ஆயிரக்கணக்கான
அரிய விஷயங்களை
நான் என்னுடைய
கண்களால்
கண்டு கூறினேன்
என்னுடைய வாழ்க்கை
இந்த உலகம் முழுவதும்
விரிந்து இருந்தது
ஆனால் இப்பொழுது
என்னுடைய வாழ்க்கை
என்னுடைய உடல்
அளவில் சுருங்கி
விட்டது
என்னிடமிருந்து
அனைத்தையும்
பறித்துக் கொண்டாலும்
என்னால் உயிர்
வாழ முடியும்
என்னை ஆராய்ச்சி
செய்யக் கூடாது
என்று சொல்லி
நான் எப்போது
தடுக்கப் படுகிறேனோ
அப்போது தான்
நான் இறப்பேனே
தவிர எனக்கு
என்ன நேர்ந்தாலும்
எனக்கு எந்த
பிரச்சினையை
அளித்தாலும் நான்
இறக்க மாட்டேன்
என்று கலிலியோ
தன்னுடைய கடிதத்தில்
கூறி இருந்தார்

கலிலியோ
சிறுவனாக இருந்த
போது மாதா
கோவிலில் ஆடிக்
கொண்டிருந்த
விளக்கைக் கண்டு
அதைக் கொண்டு
நேரத்தை அளக்க
முயன்றார்
அந்த விஷயத்தை
இப்பொழுது
கண்களை
இழந்த பின்
அதிகமாக ஆராய்ந்து
வந்தார் அவர்
அவ்விதமாக
தொடர்ந்து
ஆராய்ந்து கடிகார
இயந்திரம்
செய்வதற்கு
வகுத்த முறையைப்
பின்பற்றியே
அதற்கு 15 வருடங்கள்
கழித்து ஹிஜின்ஸ்
என்னும் டச்சு
வான நிபுணர்
கடிகார இயந்திரம்
செய்தது வான
சாஸ்திர ஆராய்ச்சிக்கு
உபயோகமாக
இருந்தார்

கலிலியோ
கண்ணில்லாமல்
கண்டுபிடித்துச் சொன்ன
விதியை வைத்து
ஒருவர் ஒரு
கண்டுபிடிப்பை
கண்டுபிடிக்க
இந்த உலகத்திற்கு
15 வருடங்கள்
ஆனது என்றால்
கலிலியோவின்
விஞ்ஞான அறிவு
எவ்வளவு
அதிசயத்தக்கது
என்பதை நாம்
உணர்ந்து கொள்ள
வேண்டும்
---------  இன்னும் வரும்
---------  25-11-2018
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment