December 12, 2018

திருக்குறள்-பதிவு-67


                      திருக்குறள்-பதிவு-67

ஜியார்டானோ
புருனோவின்
தந்தையின் பெயர்
ஜியோவான்னி புருனோ
(Giovanni Bruno)
இவரது தந்தை
ஒரு இராணுவ
அதிகாரி இவரது
தாயாரின் பெயர்
பிரௌலிஸா
ஸாவோலினோ
(Fraulissa Savolino)

ஜியார்டானோ
புருனோ
கல்வி பயில்வதற்காக
1562-ஆம் ஆண்டு
நேபில் நகருக்கு
சென்றார்
1565-ஆம் ஆண்டு
தனக்கு வைக்கப்பட்ட
பெயரான
பிலிப்போ புருனோ
(Filippo Bruno)
என்ற பெயரை
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
என மாற்றிக்
கொண்டார்
1572-ஆம் ஆண்டு
இவர் கிறிஸ்தவ
மத போதகராக
ஆவதற்குரிய
மதக்கல்வி பயின்றார்
1575-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
(Giordano Bruno)
கிறிஸ்தவ
பாதிரியார் ஆனார்

ஜியார்டானோ
புருனோ எதையும்
வெளிப்படையாகப்
பேசக் கூடியவர்
எந்த ஒரு
விஷயத்தையும்
ஆராந்து பார்த்து
எது நல்லது
எது கெட்டது
என்று முடிவு
செய்து அதன்படி
செயல்படுபவர்

ஒருவர் சொன்ன
கருத்து தவறு என்று
தனக்கு தெரிந்தால்
அதை தைரியமாக
சுட்டிக் காட்டத்
தயங்காதவர்
ஒரு தவறான
கருத்தை காலம்
காலமாக மக்கள்
பின்பற்றி வந்தால்
அந்த கருத்து தவறு
என்று எடுத்துக் காட்ட
தயங்காதவர்

ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மத
போதகராக இருந்தும்
கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்காக
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் உள்ள
பழக்க வழக்கங்களை
ஆராய்ந்து அதில்
உள்ள குறைகளைச்
சுட்டிக் காட்டினார்

கிறிஸ்தவ மத
போதகராக ஆவதற்கு
கற்பிக்கப்படும்
கற்பித்தலில் எப்படி
நடந்து கொண்டே
பேச வேண்டும்
என்பதும்
எப்படி நின்று கொண்டே
பேச  வேண்டும்
என்பதும்
எப்படி மனிதர்களுடன்
பழக வேண்டும்
என்பதும்
கற்றுக் கொடுப்பது
என்பது ஒரு
மதபோதகர்
இச்சமுதாயத்தில்
எப்படி செயற்கையாக
நடந்து கொள்வது
என்பதை சொல்லித்
தருவது போல்
அமைகின்ற
காரணத்தினால்
இந்த கற்பித்தல்
முறையின் மூலம்
ஒரே மாதிரியான
ம்த போதனை
செய்பவர்களைத் தான்
உருவாக்க முடியுமே
ஒழிய உண்மையான
மத போதகர்களை
உருவாக்க இயலாது
என்று கத்தோலிக்க
கிறிஸ்தவ கற்பித்தலில்
உள்ள குறையைச்
சுட்டிக் காட்டினார்

அதற்கு கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையினர்
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்கிறார்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
அச்சபை பின்பற்றி
வரும் நடை
முறைகளையும்
எதிர்க்கிறார் என
ஜியார்டானோ புருனோ
அவர்களின் மீது
குற்றம் சுமத்தினர்
எனவே,
ஜியார்டானோ புருனோ
1576-ஆம் ஆண்டு
பாதிரியார் வாழ்க்கையை
துறக்க வேண்டிய
கட்டாயத்திற்கு
தள்ளப் பட்டார்

இதன் தொடர்ச்சியாக
ஜியார்டானோ புருனோ
அறிவு ஒருவனை
உயர்த்தும்
அறியாமை ஒருவனை
வீழ்த்தும் என்பதை
புரிந்து கொண்டார்
இதனால் அவருக்கு
அறிவின்
மேல் காதலும்,
அறியாமையின் மேல்
வெறுப்பும் அவருக்கு
ஏற்பட்டது

இதன் விளைவாக
ஜியார்டானோ புருனோ
ஒரு புரட்சியாளனாக
மாறினார்
பாராம்பரியமாக இருந்து
வரும் அதிகாரத்தையும்
அந்த அதிகாரத்தைப்
பயன்படுத்தி அதிகாரம்
செய்பவர்களையும்
அவர் ஏற்றுக்
கொள்ள மறுத்தார்
இதனால் அவர்
தனிமைப் படுத்தப்
பட்டார் இதன்
விளைவாக இவர்
பல நாடுகளில்
நாடோடியாக அலைய
வேண்டி இருந்தது
ஆனாலும் உண்மைகளைச்
சொல்வதில் எந்தவிதமான
தயக்கமும் அவருக்கு
ஏற்படவில்லை

உண்மையை சொல்வதன்
மூலம் என் உயிர்
போகும் என்றால் நான்
அந்த உண்மையை
கண்டிப்பாக சொல்வேன்
என்றார் ஜியார்டானோ
புருனோ

--------- இன்னும் வரும்
---------  11-12-2018
///////////////////////////////////////////////////////////



No comments:

Post a Comment