December 19, 2018

திருக்குறள்-பதிவு-71


                          திருக்குறள்-பதிவு-71

ஜியார்டானோ புருனோ
சிறையில் இருந்த
7 ஆண்டுகள்
கொடுமையான
சித்திரவதைக்கு
உள்ளாக்கப்பட்டார்

தேசத் துரோக குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கும் ;
அரசாங்கத்தை எதிர்த்து
சதி வேலைகள்
செய்பவர்களுக்கும் ;
ஆட்சியை கவிழ்க்க
குள்ளநரித்தனம்  
புரிபவர்களுக்கும் ;
தீவிரவாதிகள் என்று
அடையாளம்
காட்டப்பட்டவர்களுக்கும் ;
வழங்கப்படும்
கொடுமையான
சித்திரவதைகள்
ஜியார்டானோ
புருனோவிற்கு
வழங்கப்பட்டது

ஒவ்வொரு முறையும்
ஜியார்டானோ
புருனோவை
சித்திரவதை செய்து
முடித்த பின்
ஜியார்டானோ
புருனோவிடம்
மன்னிப்பு கேட்டுக்கொள்
உன்னை விட்டு
விடுகிறோம் என்பார்கள்
நான் எந்த ஒரு
தப்பையும் செய்யவில்லை
நான் எதற்காக
மன்னிப்பு
கேட்க வேண்டும்
நான் மன்னிப்பு கேட்க
மாட்டேன் என்பார்
ஜியார்டானோ புருனோ

7 வருட சிறை
வாழ்க்கையில்
நரக வேதனையை
அனுபவித்த
ஜியார்டானோ புருனோ
தொடர்ந்து 7 வருடங்களாக
அவருக்கு வழங்கப்பட்ட
கொடுமையான
சித்திரவதை
காரணமாக
நடைபிணமாக
ஆக்கப் பட்டார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன சூரிய
மையக் கோட்பாடு
சரியானது என்று
இந்தப் பிரபஞ்சத்தையே
தன்னுடைய
கண்களால் பார்த்து
சொன்ன ஜியார்டானோ
புருனோ இந்தப்
பிரபஞ்சத்தின் சிறிய
ஒளியைக் கண்டாலே
அலறும் நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

பிரபஞ்சத்தின்
ஒலியில் தான்
இந்தப் பிரபஞ்சத்தின்
உயிர்த் தன்மையே
இருக்கிறது ;
பிரபஞ்சத்தின்
ஒலியைக் கேட்பவர்கள்
இந்தப் பிரபஞ்சத்தின்
உயிர்த்தன்மையை
புரிந்து கொள்வார்கள் ;
பிரபஞ்சத்தின்
உயிர்த்தன்மையை
புரிந்து கொள்ள
வேண்டும் என்றால்
பிரபஞ்ச ஒலியைக்
கேட்க வேண்டும் ;
என்று சொன்ன 
ஜியார்டோனோ
புருனோ இந்தப்
பிரபஞ்சத்தின் சிறு
ஒலியைக் கேட்டாலே
அலறும் நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

ஜியார்டோனோ
புருனோவின் நாவானது
அசைந்தால்
புல் கூட
வாள் எடுத்து
போர்முனைக்கு
செல்லும் ;
பிறந்த குழந்தையும்
புதிய வரலாறு படைக்க
புரட்சி கீதம் இசைக்கும் ;
என்று சொல்லத்தக்க
நாவன்மை படைத்த
ஜியார்டோனோ புருனோ
தன்னுடைய நாவை
அசைத்து ஒரு
வார்த்தை கூட பேச
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

உண்மையான
கருத்துக்களை
சாகாத சரித்திரமாக்கி ,
உயிருள்ள எழுத்துக்களில்
எழுதி நூலாக
வெளியிட்ட ,
ஜியார்டானோ புருனோ
ஒரு சிறு எழுத்தைக்
கூட கைகளால் எழுத
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

உண்மைக் கருத்துக்களை
உலகம் முழுவதும்
எடுத்துரைக்க .
ஊர் ஊராக திரிந்து
மக்களிடையே
விழிப்புணர்வை
ஏற்படுத்திய
ஜியார்டானோ புருனோ
ஒரு அடி கூட எடுத்து
வைத்து நடக்க
முடியாத நிலைக்கு
ஆளாக்கப்பட்டார் ;

பல்வேறு கொடுமையான
சித்திரவதைகளை
7 வருட சிறை
வாழ்க்கையில்
அனுபவித்தும்
விசாரணை
செய்கிறோம்
என்ற பெயரில்
பல்வேறு நிலைகளில்
நடத்தப்பட்ட
விசாரணையில்
ஜியார்டனோ புருனோ
நடை பிணமாக
ஆக்கப்பட்டார்

7 வருட
ஜியார்டானோ
புருனோவின்
சிறை வாழ்க்கையில்
அவருக்கு தண்டனை
வழங்கியவர்களும் ;
அத்தண்டனையை
நிறைவேற்றியவர்களும் ;
நம்பவே முடியாத
அசாத்திய மன உறுதியை
ஜியார்டானோ
புருனோவிடம்
கண்டு பயந்து
தான் போயினர் ;
தங்கள் வாழ்நாளில்
இப்படியொரு
நெஞ்சுரம் படைத்த
மனிதரை சந்தித்தது
இல்லை என்று
சொல்லும் வகையில்
ஜியார்டானோ புருனோ
எதற்கும் கலங்காத
மன  உறுதியுடன்
இருந்தார்

---------  இன்னும் வரும்
---------  19-12-2018
///////////////////////////////////////////////////////////




No comments:

Post a Comment