January 03, 2019

திருக்குறள்-பதிவு-79


                        திருக்குறள்-பதிவு-79

ஜியார்டானோ புருனோவால்
அற்புதம் என்றால் என்ன
என்று உணர்த்தப்பட்டு
அற்புதத்தை உணர்ந்து
அற்புதத்தில் அற்புதமாகவே
மாறிய பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவால்
ஆன்ம ஒளி
ஏற்றி வைக்கப்பட்ட
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு தொடர்
விசாரணைக்காக
அழைத்துச் செல்லக்கூடாது
என்பதற்காக போராடிய
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
குற்றமற்றவர்
அவரை விடுதலை
செய்ய வேண்டும்
என்பதற்காக பல்வேறு
முயற்சிகள் எடுத்த
பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோ
என்பவர் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவர் என்பதை
ஜியார்டானோ புருனோ
உயிருடன் வாழும்
காலத்திலேயே அவரை
முழுவதுமாக அறிந்து
வைத்து இருந்த
ஒரே பெண்ணான
போஸ்கா(FOSCA) ;

ஜியார்டானோ புருனோவை
ரோம் நகருக்கு
கைதியாக தொடர்
விசாராணைக்காக
அழைத்துச் செல்ல
காத்துக் கொண்டிருந்த
கப்பலுக்கு சற்று
தொலைவில்
நின்று கொண்டிருந்தார் ;

இந்த போஸ்காவைத்
(FOSCA) தான்
ஜியார்டானோ புருனோ
கப்பலில் ஏறுவதற்கு
முன்பு திரும்பி
புன்முறுவல் செய்தார் ;

ஜியார்டானோ புருனோ
போஸ்காவைப் (FOSCA)
பார்த்து சிந்திய
இந்த புன்முறுவலுக்கு
பின்னால் மறைந்திருந்த
ஆயிரக்கணக்கான
மறைபொருள் ரகசியங்கள் ;
வார்த்தைகளால்
வார்க்க முடியாத
உண்மைகள் ;
இவர்கள் இரண்டு
பேருக்கும் மட்டுமே தெரிந்த
ஒரு மாபெரும் ரகசியமாக
இருக்கும் படி
இந்த பிரபஞ்சம் செய்து
விட்டது ; என்பது
மறக்க முடியாத
உண்மை ; என்பதை
அனைவரும் நினைவில்
கொள்ள வேண்டும் ;

ஜியார்டானோ புருனோவை
கைதியாக ரோம்
நகருக்கு அழைத்து
செல்வதற்காக காத்துக்
கொண்டிருந்த கப்பலில்
ஜியார்டானோ புருனோ
ஏறும் போது ஜியார்டானோ
புருனோ தன்னுடைய
முதல் அடியை எடுத்து
அந்த கப்பலில் வைத்தார்

ஜியார்டானோ புருனோ
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான முதல்
அடியாக இருக்குமோ
என்று வெனிஸ் நகரத்தின்
மக்கள் எண்ணினர்.

ஏனென்றால்
ஜியார்டானோ புருனோ
வாழ்ந்த கால கட்டத்தில்
கைதியாக குற்றம்
சுமத்தப்பட்டு ரோம்
நகருக்கு அழைத்துச்
செல்லப் பட்டவர்களில்
பெரும்பாலானவர்கள்
நிரபராதி என்று தீர்ப்பு
வழங்கப்பட்டு விடுதலை
செய்யப்பட்டதாக
சரித்திரம் இல்லை.

குற்றம் சுமத்தப்பட்டு
கைதியாக வந்தவர்களை
ரோம் நகரம் முக்கியமாக
மூன்று நிலைகளில்
கொன்றிருக்கிறது

ஒன்று :
சிறையில் வைத்து
கொடுமையான
சித்தரவதை செய்து
கொன்றிருக்கிறது ;

இரண்டு :
வீட்டிக் காவலில் வைத்து
சித்திரவதைகளை அளித்து
கொன்றிருக்கிறது ;

மூன்று :
மனிதத் தன்மை
இல்லாமல் உயிரோடு
எரித்து கொன்றிருக்கிறது ;

இத்தகைய
காரணங்களினால் தான்
ஜியார்டானோ புருனோ
கைதியாக தொடர்
விசாரணைக்காக ரோம்
நகருக்கு செல்வதற்காக
கப்பலில் எடுத்து
வைத்த முதல் அடி
அவருடைய இறுதி
யாத்திரைக்கான
முதல் அடியாக
இருக்குமோ என்று
அங்கு கூடியிருந்த
மக்களை சந்தேகம்
கொள்ள வைத்தது

இருப்பினும்,
ஜியார்டானோ புருனோ
மீண்டும் திரும்பி வருவார்
என்ற நம்பிக்கையுடன்
வெனிஸ் நகரத்தில்
வாழும் மக்கள்
மட்டுமல்ல
வெனிஸ் நகரமே
ஜியார்டானோ புருனோ
வந்து விடுவார் என்ற
நம்பிக்கையுடன்
காத்துக் கொண்டிருந்தது

மிகப்பெரிய தத்துவ
மேதை சிறந்த
எழுத்தாளர்
மாபெரும் விஞ்ஞானி
என்று பல்வேறு
சிறப்புகளைக் கொண்ட
ஜியார்டானோ புருனோவை
சுமந்து கொண்டு கப்பல்
ரோம் நகரை நோக்கி
சென்று கொண்டிருந்தது

ஆமாம் ஜியார்டானோ
புருனோ கைதியாக
தொடர் விசாரணைக்காக
ரோம் நகரை நோக்கி
கப்பலில் பிரயாணம்
செய்து கொண்டிருந்தார்

---------  இன்னும் வரும்
---------  03-01-2019
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment