March 18, 2019

திருக்குறள்-பதிவு-128


                       திருக்குறள்-பதிவு-128

"மனிதனை
மனிதத்தன்மை கொண்ட
மனிதனாக மாற்றாமல் ;
மதவெறி கொண்ட
மனிதனாக மாற்றி ;
மக்களை அடிமைப்படுத்தும்
வேலையை மதங்கள்
செய்து கொண்டிருக்கின்றன
என்பதை 1548-1600-ல்
ஜியார்டானோ புருனோ
கண்டுபிடித்து சொன்னார்"

"ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட
17-02-1600-;ம் ஆண்டிலிருந்து
250 ஆண்டுகள் கழித்து
அதாவது தற்போது
1889-ம் ஆண்டு மதங்கள்
செய்யும் செயல்களை - நாம்
நன்றாக உற்று பார்த்தால் ;
மதத்தின் நடவடிக்கைகளை
நாம் ஆராய்ந்து பார்த்தால் ;
மதங்கள் மனிதனை
அடிமையாக வைப்பதற்குரிய
செயல்களை செய்து
கொண்டிருக்கிறது என்பதை
நம்மால் உணர்ந்து கொள்ள
முடியும்; இதன் மூலம்
ஜியார்டானோ புருனோ
எவ்வளவு தொலைநோக்கு
பார்வையுடன் சொல்லி
இருக்கிறார் என்பது
நமக்கு தெரியவரும் "

" இதனை நாம் உணர்ந்து
கொண்டு இப்போதாவது
விழித்துக் கொள்ளவில்லை
எனில் - நாமும் நம்முடைய
வருங்கால சந்ததியினரும்
மதத்திற்கு அடிமையாக
இருக்க வேண்டிய நிலைவரும்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும் "

" மக்கள் எப்படி இருக்கக்
கூடாது என்பதற்கு
17-02--1600-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட போது எந்தவித
எதிர்ப்பும் தெரிவிக்காமல்
தங்கள் வாழ்க்கையை மட்டும்
நினைத்துக் கொண்டு
சுயநலமாக இருந்து கொண்டு
உயிருக்கு பயந்து கொண்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டு
அமைதியாக இருந்த
மக்களே சாட்சி "

" ஜியாடானோ புருனோவின்
சிலை திறப்பு விழாவிற்கு
ஆதரவு தந்து - சிலை
திறப்பு விழாவில்
கலந்து கொள்வதன் மூலம்
       
"தங்களுக்கு கிறிஸ்தவ
மதத்தின் மூலம் கிடைத்து
வரும் அனைத்து சலுகைகளும்
ரத்து செய்யப்பட்டாலும்
பரவாயில்லை - என்று
இங்கு கூடியிருக்கும்
மக்களாகிய நீங்கள் ;

"உலகின் எந்த மூலையில்
உள்ள சர்ச்சுகளிலும்
உறுப்பினராக இருக்க
முடியாது என்றாலும்
பரவாயில்லை - என்று
இங்கு கூடியிருக்கும்
மக்களாகிய நீங்கள் ;
       
"கிறிஸ்தவ மதத்தை விட்டு
விலக்கி வைத்தாலும்
பரவாயில்லை - என்று
எதைக் கண்டும் அஞ்சாமல்
இங்கு கூடியிருக்கும்
மக்களாகிய நீங்கள் ;

"1889 ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
ஜியார்டானோ புருனோவின்
சிலை திறப்பு விழாவில்
கலந்து கொண்ட
மக்களாகிய நீங்கள் ;

" நீங்களே மக்கள் எப்படி
இருக்க வேண்டும்
என்பதற்கு சாட்சி ; "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு இருந்தால்
தங்களுக்கு ஆபத்து-என்று
பயந்த காரணத்தினால்
அவரை அழிக்க நினைத்தனர் ;
அதனால் அவரை உயிரோடு
எரித்து கொன்று விட்டனர் ; "

" ஜியார்டானோ புருனோ
சிலை இருந்தால்
தங்களுக்கு ஆபத்து
என்று இந்த சிலையை
நிறுவ விடாமல் தடுக்க
முயற்சி செய்தனர்;-ஆனால்
அவர்களால் முடியவில்லை ; "

" ஜியார்டனோ புருனோ
உயிரோடு இருந்தபோது
அவரை வீழ்த்தி வெற்றி
பெற்றவர்கள் - அவர்
இறந்த பிறகு அவரை
வீழ்த்த முடியாமல்
தோல்வி அடைந்துள்ளனர் ; "

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு இருந்தபோது
அவரை பார்த்து பயந்த
கிறிஸ்தவ சமுதாயம் ;
அவர் இறந்த பிறகும்
அவரைப் பார்த்து
பயப்படுகிறது என்றால்
ஜியார்டானோ புருனோ செய்த
சேவை எவ்வளவு அளப்பறிய
சேவை என்பதை -நாம்
தெரிந்து கொள்ளலாம் "
       
" ஜியார்டானோ புருனோவின்
சிலை ஒரு சிலை இல்லை
இது ஒரு வரலாற்று
சின்னம் இந்த வரலாற்று
சின்னம் - பல  
நூற்றாண்டுகளைக் கடந்து
இந்த உலகம் இருக்கும்
அளவும் ஜியார்டானோ
புருனோவின் ஒப்பற்ற
சேவையை இந்த உலகத்திற்கு
உணர்த்திய வண்ணம் இருந்து
கொண்டு தான் இருக்கும்"

"ஜியார்டானோ புருனோவின்
சிலை ஜியார்டானோ
புருனோவின் நினைவைப்
போற்றுவதற்கு மட்டும்
நிறுவப்பட்ட சிலை இல்லை "

" ஜியார்டானோ புருனோவின்
சிலை தற்கால சமுதாயத்திற்கும் ;
எதிர்கால சந்ததியினருக்கும் ;
ஒரு படிப்பினையாக இருக்க
வேண்டும் என்ற காரணத்திற்காக
அமைக்கப்பட்டுள்ளது என்பதை
அனைவரும் உணர்ந்து
கொள்ள வேண்டும்"

என்று ஜியார்டானோ
புருனோவின் சிலை திறப்பு
விழாவில் கலந்து கொண்ட
அறிஞர்களும் ; தத்துவ
மேதைகளும் ;
ஜியார்டோனோ புருனோவை
பின்பற்றுபவர்களும் ;
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்களும் ;
தங்களுடைய புரட்சிக்
கருத்துக்களை அனல் தெறிக்க
பேசினர் என்பதை வரலாறு
பதிவு செய்திருக்கிறது..

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  18-03-2019
/////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment