March 29, 2019

4-ஜியார்டானோ புருனோ உருவான கதை

              4-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே,

இந்து மதத்தில் சாதி
என்ற ஒன்றை
பயன்படுத்தி
மனிதர்களுக்குள் ஏற்றத்
தாழ்வுகளை உருவாக்கி
மனிதனை மனிதன்
அடிமைப்படுத்தும் மிகவும்
இழிவான செயல் நடை
பெற்றுக் கொண்டிருந்ததை
கடுமையாக எதிர்த்தார்
(1879-1973) இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்த
தந்தை பெரியார்

இந்த மதத்தில் நடை
பெற்று வரும் இத்தகைய
செயல்கள் திருத்தப்பட்டு
இந்து மதம் சீர்திருத்தப்பட
வேண்டும் என்றார்

“இந்து மதக் கோயில்களில்
காலம் காலமாக கடை
பிடிக்கப்பட்டு வரும்
மத பழக்க வழக்கங்களில்
உள்ள மூட நம்பிக்கைகள்
தகர்த்தெறியப்பட வேண்டும்
என்றார் ;”

“ இந்துக்களின் புனித
நூல்களில் உள்ள தவறுகள்
களைந்தெறியப்பட
வேண்டும் என்றார் ;”

“இந்துக்கள் கடை பிடித்து
வரும் வழிபாட்டு
முறைகளில் மாற்றங்கள்
கொண்டு வரப்பட
வேண்டும் என்றார்”

“இந்துக்களில் இந்து
மதத்தன்மை
கொண்டவர்கள்
தவிர்த்து - இந்து
மதப்பற்று
கொண்டவர்கள் அனைவரும்
தந்தை பெரியாரை
எதிர்த்தனர்;’

இந்து மதத்தை
எதிர்த்த காரணத்திற்காக
(1879-1973) இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்த
தந்தை பெரியாரையே
இந்து மதப்பற்று
கொண்டவர்கள்
அவரை எதிர்த்து அவரை
இழிவு படுத்தினார்கள்
என்றால் (1548-1600)-ல்
உலகையே தன்
ஆளுகையின் கீழ்
வைத்திருந்த கிறிஸ்தவ
மதத்தை எதிர்த்த
ஜியார்டானோ
புருனோவை
எவ்வளவு எதிர்த்து
இருப்பார்கள் - இழிவு
படுத்தி இருப்பார்கள்

அதுவும் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்படுகிறவர்களை
சிறையில் அடைத்து
சித்திரவதை செய்வதும் ;
உயிரோடு எரித்துக்
கொல்லப்படுவதும் ;
போன்ற தண்டனைகள்
நிறைவேற்றப்பட்டுக்
கெண்டிருந்த காலத்திலேயே
ஜியார்டானோ புருனோ

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
பழக்க வழக்கங்களில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
சொன்னார் என்றால் ; ‘

“ சர்ச்சுகளில் கடை
பிடிக்கப்பட்டு
வரும் மத பழக்க
வழக்கங்களில்
மாற்றம் கொண்டு வர
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;”

“பைபிளில் உள்ள
கருத்துக்கள் தவறாக
உள்ள காரணத்தினால்
அவைகள் திருத்தப்பட
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;’

“ கிறிஸ்தவர்கள் பின்பற்றி
வரும் இறை வழிபாட்டில்
உ.ள்ள குறைகள்
நிவர்த்தி செய்யப்பட
வேண்டும் என்று
சொன்னார் என்றால் ;”

“ ஜியார்டானோ புருனோ
எத்தகைய நெஞ்சுரம்
படைத்தவராக இருந்திருக்க
வேண்டும் ;

மரணத்தைக் கண்டு
பயப்படாத மாமனிதராக
இருந்திருக்க வேண்டும் ;

தன்னுடைய கொள்கைக்காக
எல்லாவற்றையும்
இழக்கத் துணிந்த
பேராற்றல் படைத்தவராக
இருந்திருக்க வேண்டும் ;

கிறிஸ்தவ மதத்தால்
மக்களை
அடிமைப்படுத்துவதற்காக
செய்யப்படும் செயல்கள்
அனைத்தும் தடுக்கப்பட
வேண்டும் என்ற
காரணத்திற்காக - கிறிஸ்தவ
மதத்தையே எதிர்க்கத்
துணிந்த மனதைரியம்
படைத்த ஒருவராக
இருந்திருக்க வேண்டும் ;

பிற உயிர்கள் வாழ்வதற்காக
தன்னுடைய உயிரை
தரத் தயாராக இருந்த
கருணை உள்ளம்
கொண்டவராக
இருந்திருக்க வேண்டும் ;

என்பதை நாம் சற்று
சிந்தித்துப் பார்த்தோமேயானால்
ஜியார்டானோ புருனோவைப்
பற்றி நாம் தெள்ளத்
தெளிவாக புரிந்து
கொள்ள முடியும் !

ஜியார்டானோ புருனோவின்
புரட்சிகரமான வாழ்க்கை
வரலாறு நிறைவு
பெற்றாலும்-அவர்
விட்டுச் சென்ற நினைவுகள்
நம் மனதை விட்டு
என்றும் அகலாது

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்

No comments:

Post a Comment