April 14, 2019

பரம்பொருள்-பதிவு-1


                      பரம்பொருள்-பதிவு-1

உலகில் உள்ள எந்த
ஒரு மதத்தை
எடுத்துக் கொண்டாலும்
அவர்கள் கடவுளிடமிருந்து
தங்களுக்கு தேவையானதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து
கொள்வதற்கு இறைவனை
இரண்டு நிலைகளில்
வணங்குகிறார்கள்

ஒன்று
ஜபத்தின் மூலம்
இறைவனை
வணங்குகிறார்கள்

இரண்டு
பிரார்த்தனையின் மூலம்
இறைவனை
வணங்குகிறார்கள்

ஜபம் என்பது ஒருவர்
மட்டும் தனித்து
இருந்து இறைவனை
வணங்குவது

பிரார்த்தனை என்பது
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
இறைவனை வணங்குவது

ஒருவர் மட்டும்
தனியாக இருந்து
மனதை அடக்கிக்
கொண்டே உள்ளே சென்று
மனதின் அடித்தளமாக
இருப்பு நிலையாக உள்ள
இறைவனை வணங்குவது
ஜபம் எனப்படும்

ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
மனதை இந்த பிரபஞ்சம்
முழுவதும் விரித்து
மனதிற்கு அடித்தளமாகவும்
இருப்பு நிலையாகவும்
அனைத்திலும் நீக்கமறவும்
நிறைந்திருக்கும்
இறைவனை வணங்குவது
பிரார்த்தனை எனப்படும்

இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தனித்த நிலையில்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
தனித்த நிலையில்
பெற்றுக் கொள்ள
முடிந்தவர்களால்
தனிப்பட்ட முறையில்
செய்யப் படுவது
தான் ஜபம்

இந்த பிரபஞ்சம்
முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தனித்த நிலையில்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
தனித்த நிலையில்
பெற்றுக் கொள்ள
முடியாத நிலையில்
இருப்பவர்கள்
ஒன்று சேர்ந்து
ஒன்றாகக் கூடி
இறைவனை வணங்கி
தங்களுக்குத் தேவையானதை
பெற்றுக் கொள்வது
தான்  பிரார்த்தனை

ஒருவர் மட்டும்
தனித்த நிலையில்
வீட்டிலோ
(அல்லது)
கோயிலிலோ
(அல்லது)
ஏதேனும் ஒரு இடத்திலோ
யாருடனும் சேராமல்
செய்வது தான் ஜபம்

ஒன்றுக்கு மேற்பட்டோர்
ஒன்றாகக் கூடி
வீட்டிலோ
(அல்லது)
கோயிலிலோ
(அல்லது)
ஏதேனும் ஒரு இடத்திலோ
பலருடன் சேர்ந்து
ஒன்றாகக் கூடி
செய்வது தான்
பிரார்த்தனை

பிராணனை கட்டுப்படுத்தும்
சுவாசப் பயிற்சி
பிராணனை அறிய
முற்படும்
பிராணாயாமம்
பிராணனை
முறைப்படுத்தும் வாசி
ஆகியவற்றை
செய்பவர்கள்
ஜபிக்கிறார்கள்
ஜபத்தில் வரும்
அவற்றை தனியாக
மட்டுமே செய்ய முடியும்

மந்திரத்தை வெளிப்படையாக
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாகக் கூடி
உச்சாடணம் செய்தல்
கடவுளைப் பற்றிய
பாடல்களைப் பலர்
ஒன்றாகக் கூடி
பாடுதல் ஆகியவை
பிரார்த்தனையில்
வரும்

சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால்
ஜபம் என்பது
மனதை ஒடுக்கி
இறைவனை
உட்புறமாக உணர்வது
பிரார்த்தனை என்பது
மனதை விரித்து
இறைவனை வெளிப்புறமாக
உணர்வது ஆகும்

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  14-04-2019
/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment