May 04, 2019

பரம்பொருள்-பதிவு-10


                       பரம்பொருள்-பதிவு-10

“மந்திரத்தைப்
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை செய்து
கடவுள் சிலைக்கு
உயிரூட்டுவதற்கு
இரண்டு விதமான
முறைகள் பின்பற்றப்
படுகின்றன”

ஒன்று :
"ஒருவர் தனியாக
இருந்து மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

இரண்டு :
"ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
ஒன்றாக சேர்ந்து
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்து கடவுள்
சிலைக்கு உயிரூட்டுவது!"

ஒன்று :
“தனி ஒரு நபராக
மந்திரத்தைப்
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்வதற்கு
ஆன்மீகத்தின்
உச்ச நிலையை
தொட்டவர்களால்
மட்டுமே சாத்தியம் “


“ஆன்மீகத்தின் உச்ச
நிலையைத் தொட்ட
ஒருவர் மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்,  
பிராண பிரதிஷ்டை
செய்வதற்கு முன்னால்
கடவுள் சிலையை
மனக்கண்ணில்
கொண்டு வந்து
தனது வசதிக்கேற்றபடி
கடவுள் சிலையை
முதலில் நான்கு கூறுகளாக
பிரித்துக் கொள்வார் “


“ஒவ்வொரு கூறிலும்
சக்தியைச் செலுத்திக்
கொண்டே செல்வார் ;
ஒவ்வொரு கூறும்
சக்தியால் முழுமையாக
நிரம்பிக் கொண்டே
வரும்; - கடவுள் சிலை
முழுவதும் சக்தியால்
நிரப்பப்பட்ட நேரத்தில்
கல்லாய் இருந்த
கடவுள் சிலை
கடவுளாகவே மாறி விடும் ;”.

“ஆமாம் கல் கடவுளாக
மாறி விடுகிறது”.

இரண்டு ;
“கடவுள் சிலைக்கு
பிராண பிரதிஷ்டையின்
மூலம் உயிரூட்டுவதற்காக
கடவுள் சிலையைச்
சுற்றிலும் நான்கு நபர்கள்
குறிப்பிட்ட இடைவெளியில்,
ஒரு குறிப்பிட்ட திசையில்,
ஒன்றாக அமர்ந்து
கொள்வார்கள் - நான்கு
நபர்களையும் ஒன்றாக
இணைக்கும் வகையில்
நான்கு நபர்களும் சேர்ந்து
முதலில் சக்தி வாய்ந்த
சக்தி களத்தை
உருவாக்கிக் கொள்வார்கள்;”

“கடவுள் சிலையானது
நான்கு கூறுகளாகப்
பிரிக்கப்படும் ;
ஒவ்வொருவரும்
அவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு
கூறிலும் சக்தியை
நிறுவ வேண்டும் ;
ஒவ்வொரு கூறையும்
குறிப்பிட்ட முறையின்
மூலம் - குறிப்பிட்ட
சக்தியின் மூலம்
சக்தியை நிரப்ப வேண்டும். ;”

“ஒருவர் தலைவராக
இருந்து அந்த குழுவில்
இருக்கும் மற்ற மூன்று
நபர்களையும் வழிநடத்திச்
செல்வதோடு மட்டுமில்லாமல்
மூன்று நபர்களுடன்
இணைந்து சக்தியை
கடவுள் சிலையில்
நிரப்புவதற்கான செயலில்
ஈடுபடுவார்.”

“பிராண பிரதிஷ்டை
செய்யும் நால்வரும்
தவத்தை தொடர்ந்து
செய்து கொண்டே
தவத்தின் உச்ச
நிலைக்குச் செல்வார்கள்;
அத்தகைய உச்ச நிலைக்கு
சென்று விட்ட பிறகு
ஒவ்வொருவரும்
தங்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட கூறில்
சக்தியை செலுத்துவார்கள்;
அவ்வாறு சக்தியை
செலுத்திக் கொணடிருக்கும்
போது ஒருவர்
உயர்ந்த நிலைக்கு
சென்று சமாதி (அல்லது)
மகா சமாதி அடைந்து
விட்டால் தலைவராக
இருப்பவர் சமாதி
அடைந்தவருடைய
பணியையும் சேர்த்து
செய்ய வேண்டிய
மிகப்பெரிய பொறுப்பையும்
ஏற்க வேண்டி வரும்;”

“பிராண பிரதிஷ்டையை
நிறுத்தாமல் நான்கு பேர்
செய்ய வேண்டிய பணியை
மூன்று நபர்கள் மட்டுமே
தனியாக இருந்து
செய்து முடிப்பார்கள்;”

“கடவுள் சிலையின்
நான்கு கூறிலும்
சக்தியானது முழுவதுமாக
நிரம்பியவுடன்
கல்லாய் இருந்த
கடவுள் சிலை
கடவுளாகவே மாறி விடும் ;”.

“ஆமாம் கல்
கடவுளாக மாறி விட்டது”

“மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்படும் கடவுள்
சிலைகளைக் காட்டிலும்  ;
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்படும் கடவுள்
சிலைகள் மிகவும்
சக்தி வாய்ந்தவை ;
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்; “

“மந்திரத்தைப்
பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
எவ்வாறு
செய்யப்படுகிறது
என்பது தெரியுமா……………?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-05-2019
/////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment