July 11, 2019

பரம்பொருள்-பதிவு-39


                   பரம்பொருள்-பதிவு-39

" கடவுளை கடவுள் என்ற
இடத்தில் வைத்துப்
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
கடவுளின் தெய்வீகத்
தன்மையை உணர்ந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
கடவுளுடைய புனிதத்
தன்மையை அறிந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
கடவுளுடைய உண்மை
ஆற்றலைத் தெரிந்து
பார்க்கக்கூடிய
நிலையில் இல்லாதவர்கள் ;
இவர்கள் அனைவரும்
கடவுள் என்றால் என்ன
என்பதை உணராத
நிலையில் இருப்பவர்கள் "

" இவர்கள் தான் தாங்கள்
வணங்கும் புதிய கடவுளை
உண்மையான கடவுள்
என்று நினைத்துக் கொண்டு
தங்களுடைய புதிய கடவுளை
புதிய மதத்தின் மூலம்
வியாபாரம் செய்பவர்கள் "

" புதிய கடவுளை
புதிய மதத்தின் மூலம்
வியாபாரம் செய்து பிழைக்க
வந்தவர்களான இவர்கள்
கடவுளை வணங்குகிறோம்
என்று கூறிக்கொண்டு
ஆடிக் கொண்டும் ;
பாடிக் கொண்டும் ;
பேசிக் கொண்டும் ;
கூத்தடித்துக் கொண்டும் ;
கும்மாளமிட்டுக் கொண்டும் ;
செய்யும் செயல்களை
தங்களுடைய செயல்களோடு
நிறுத்திக் கொள்ளாமல் ;
இந்த நாட்டில் பிறந்த
மதமான இந்து மதத்தையும் !
இந்து மதத்தின்
வழிபாட்டுத் தலங்களையும் !
இந்து மதத்தின்
கடவுள் சிலைகளையும் !
இந்து மதத்தின்
புனித நூல்களையும் !
இந்து மதத்தின்
புனித குறியீடுகளையும் !
இழிவு செய்து இந்து
மதத்தை அழிக்கும் தவறான
செயல்களைச் செய்து 
தங்களுடைய புதிய
மதத்தை குறுக்கு வழியில்
நிறுவுவதற்கான தப்பான
செயலைச் செய்து
கொண்டு இருக்கிறார்கள் "

" இவ்வாறு தப்பான
செயல்களைச் செய்து
கொண்டிருக்கும்
இவர்களுடைய செயல்களைத்
தடுத்து தப்பானவர்களை
அழிப்பதற்கு- சிவநாமம்
ஒன்றே போதும் என்பதையும் ;
அந்த சிவநாமமே தீமையை
அழித்து நன்மையைக்
கொடுக்கும் என்பதையும் ;
அந்த சிவநாமமே இவ்வுலகில்
உள்ள தேவையற்றவைகள்
அனைத்தையும் அழிக்கும்
வல்லமை படைத்தது
என்பதையும் ;
உணர்ந்திருந்த சிவநேசர்
சிவநாமத்தை நாள் தவறாமல்
நேரம் தவறாமல் உச்சரித்துக்
கொண்டே இருந்தார் "

" இந்து மதம்; சைவநெறி ;
சிவநாமம்; ஆகியவற்றின்
மேல் அன்பும் ; மதிப்பும் ;
மரியாதையும் வைத்திருந்த
சிவநேசர் சிவனடியார்கள்
மீதும் அதே அன்பும்;
மதிப்பும் ; மரியாதையும்;
வைத்திருந்தார் "

" ஞானக்குழந்தையான
திருஞான சம்பந்தருக்கு
தெய்வத் தாயாகிய
உமாதேவியார் ஞானப்பாலை
அருளியதையும் - அதை
திருஞானசம்பந்தர்
உண்டதையும்
கேள்வியுற்ற சிவநேசருக்கு
திருஞானசம்பந்தர் மேல்
வார்த்தைகளால் வார்க்க
முடியாத பக்தி உண்டாகியது ;"

"புத்த மதம் ; சமண மதம் ;
ஆகிய மதங்களை
இந்தியாவிலிருந்து களைந்து
வெளியேற்றுவதற்காக
திருஞானசம்பந்தர் எடுத்த
முயற்சிகள் - அதற்காக
திருஞானசம்பந்தர் நிகழ்த்திய
அற்புதங்கள் ஆகியவற்றை
கேள்வியுற்ற சிவநேசருக்கு
திருஞானசம்பந்தர் மேல்
அளவுகளால்
அளவிட முடியாத
அன்பு உண்டாகியது ;"

" இந்து மதம்; சைவநெறி ;
சிவநாமம் ; ஆகியவற்றை
மக்கள் மத்தியில் கொண்டு
செல்வதற்காகவும் - மக்கள்
அதனை ஏற்றுக் கொண்டு
பின்பற்றி உயர்வடைய
வேண்டும் என்பதற்காகவும்
திருஞான சம்பந்தர்
செய்த சேவையைக்
கேள்வியுற்ற சிவநேசருக்கு
திருஞான சம்பந்தர் மேல்
மதிப்புகளால்
மதிப்பிட முடியாத
மரியாதை உண்டாகியது ;"

" இதனால் சிவநேசர்
இந்து மதம் ; சைவநெறி ;
சிவநாமம்; மட்டுமல்லாமல்
திருஞானசம்பந்தருடைய
பக்தியையும் - அவருடைய
பெருமையையும்
இரவும், பகலும்
நினைத்துக் கொண்டிருப்பது ;
திருஞான சம்பந்தரை
தியானிப்பது; வணங்குவது ;
அவர் புகழ் பாடுவது ;
என்று தன்னுடைய
வாழ்க்கையை ஓட்டினார் "

" சிவநேசர் கடவுள் மேல்
கொண்ட உண்மையான
பக்தியினாலும் - அவர்
செய்த தவப் பயனாலும்
அவருக்கு ஒரு
பெண்குழந்தை பிறந்தது ;
பெண் குழந்தை பிறந்த
சந்தோஷத்தை கொண்டாடும்
விதமாக ஏழைகளுக்கு
ஏராளமான உடைகளையும்,
பெரும் நிதிகளையும்
வாரி வாரி வழங்கினார் ;"

" மேலும், முறைப்படி செய்ய
வேண்டிய பத்துநாள்
மறைவிதிச் சடங்குகள்
அனைத்தையும் செய்து
முடித்து அந்த பெண்
குழந்தைக்கு பெயர் சூட்டினார் "

" அந்தப் பெண்ணின்
பெயர் தான்………………………………………….?
அந்தப் பாவையின்
பெயர் தான்…………………………………………? "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 11-07-2019
//////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment