August 05, 2019

பரம்பொருள்-பதிவு-51


               பரம்பொருள்-பதிவு-51

பதிகம் – 6
"மடலார்ந்த தெங்கின்
மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆனேறு
ஊரும் அடிகளடிபரவி
நடமாடல் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“அழகிய மடல்களைக்
கொண்ட தென்னை
மரங்கள் நிறைந்த
மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
மாசி மாதத்தில்
பவுர்ணமியோடு கூடிய
மகம் நட்சத்திரம் வரும்
மாசி மகமான புண்ணிய
நாளில் பக்தர்கள் கடலில்
நீராடி சிவபெருமானை
வழிபட்டு கொண்டாடும்
மாசி கடலாட்டு விழாவில்
வலிமை பொருந்திய
காளையின் மேல்
சிவபெருமான் பவனி வந்து
பக்தர்களுக்கு அருள் வழங்கும்
அற்புதக் காட்சியைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 7
" மலிவிழா வீதி
மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழா பாடல்செய்
பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“திருவருள் எழுச்சியை
விளைவிக்கும் திருக்கோயில்
விழாக்கள் இடைவிடாமல்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
வீதிகளைக் கொண்ட
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுக்கு
பங்குனி மாதத்தில்
உத்திர நட்சத்திரத்தில்
பவுர்ணமி வரும்
பங்குனி உத்திரம்
புண்ணிய நன்னாளில் பக்தர்கள்
பக்தி பரவசம் மேலிட்டு
ஆரவார ஒலியை  எழுப்பி
பக்தர்களால் கொண்டாடப்படும்
பல்வேறு விழாக்களை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 8
"தண்ணா அரக்கன்தோள்
சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண்
கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“வீரமும் கோபமும் ஒருங்கே
கொண்ட இராவணனுடைய
தோள்களை நெரித்தவனும்
அழகிய திருவடிகளைக்
கொண்டு மாமயிலையில்
கபாலீச்சரம் என்னும்
கோயிலில் அமர்ந்து அருள்
செய்து கொண்டிருப்பவனுமாகிய
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
பண்ணோடு பாடக்கூடிய
சப்தரிஷிகள்,தேவர்கள்,
அரம்பையர்கள், அசுரர்கள்,
தானவர்கள், தைத்தியர்கள்,
நாகர்கள், கருடர்கள்,
கிண்ணரர்கள், கிம்புருசர்கள்,,
யட்சகர்கள், வித்தியாதரர்கள்,
அரக்கர்கள், கந்தர்வர்கள்,
சித்தர்கள், சாரணர்கள்,
பூதகணங்கள், பிசாசர்கள்
ஆகிய பதினெட்டு கணத்தினரும்
வணங்கும் சித்திரை அட்டமியில்
கொண்டாடப்படும் விழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை  என்கிறார் “

பதிகம் – 9
" நற்றா மரைமலர்மேல்
நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா
மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங்
கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
அழகிய தாமரை மலர் மேல்
உறையும் நான்முகனும்,
நாராயணணும் தரிசிக்க
முடியாத சிவபெருமானுடைய
அடி முடிகளை அனைவரும்
தரிசிக்கும் வகையில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
வைகாசி மாதத்தில்
கொண்டாடப்படும்
ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக்
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

பதிகம் – 10
" உரிஞ்சாய வாழ்க்கை
அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க
ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த
கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே
போதியோ பூம்பாவாய் "

பொருள் விளக்கம் :
“உடை அணியாமல் வாழும்
சமணர்கள், உடையைப்
போர்த்திக் கொண்டு
வாழும் கரிய சாக்கியர்கள்
தம் வாய்க்கு வந்ததை
எல்லாம் பேசிக் கொண்டு
திரியும் இந்த மண்ணுலகில்
மாமயிலையில் கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்து
அருள் செய்து கொண்டிருக்கும்
சிவபெருமானுடைய
அருளைப் பெறுவதற்காக
ஆனி, ஆடி, ஆவணி
ஆகிய மாதங்களில்
சிவபெருமானுக்கு
ஆயிரமாயிரம் ஆதிசைவப்
பெருமக்கள் வந்து ஞானாக்கினி
வளர்த்துச் செய்யப்போகின்ற
கும்பாபிஷேகத்தை
காணாமல் போனாயோ
பூம்பாவை என்கிறார் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  04-08-2019
//////////////////////////////////////////////////////////




No comments:

Post a Comment