September 01, 2019

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்-02-09-2019


 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் - 02-09-2019 !

அன்பிற்கினியவர்களே !

“சிவபெருமான் கயிலாயம்
வந்து கொண்டிருப்பதை
அறிந்து மகிழ்ந்த
பார்வதி தேவி அவரை
வரவேற்கும் முன்பு
தயாராக நினைத்தார் ;  
ஆனால். அப்போது
நந்தி இல்லாததால்
அங்கு வாயிற்காவலர்
யாரும் இருக்கவில்லை ;
எனவே. பார்வதி தேவி
தாம் குளிக்கும் முன்பு
மஞ்சள் விழுதால்
ஒரு சிறுவனைச் செய்து
அதற்கு உயிர் கொடுத்தார்;
அவனுக்கு
“விக்னங்களைத் தீர்ப்பவன் “
என்ற பொருளில்
விநாயகர் என்ற பெயர்
சூட்டினார் ;
தான் வரும்வரை
யாரையும் உள்ளே
அனுமதிக்க வேண்டாம் ;
என்று அறிவுறுத்துகிறார்.
விநாயகரும் அவ்வாறே
செய்வதாக வாக்களிக்கிறார் ;
விநாயகர் இப்படித்
தான் பிறந்தார் ;”

“சிவபெருமான் தனது
நெற்றிக் கண்ணில்
இருந்து நெருப்பினை
தோற்றுவித்தார் ;
அப்பொறியை வாயுவும்
அக்னியும் கங்கையில்
சேர்த்தனர். ஆறு
தாமரை மலர்களில்
ஆறு குழந்தைகள்
உருவாயின. அந்த
குழந்தைகளை வளர்க்கும்
பொறுப்பை கார்த்திகைப்
பெண்கள் ஆறுபேரிடம்
சிவன் ஒப்படைத்தார் ;
பிள்ளைகள் ஆறு
பேரையும் காண வந்த
பார்வதி தேவி
ஆறுமுகத்தையும்
ஒரு முகமாக்கினாள் ;
இதனால், அப்பிள்ளைக்கு
கந்தன் என்ற திருநாமம்
உண்டானது - கந்தன்
என்றால் ஒன்று
சேர்க்கப்பட்டவன்
என்று பொருள்
முருகன் இப்படித்
தான் பிறந்தார் ; “

“இரண்டு கதைகளையும்
நன்றாக ஆழ்ந்து படியுங்கள்  
விநாயகர் பிறப்புக்கும் ;
முருகன் பிறப்புக்கும் ;
உள்ள மிக முக்கியமான
ஒற்றுமை ஒன்று
அனைவருக்கும் புலப்படும் ;”

“பார்வதிதேவி
சிவனின் கலப்பு இல்லாமல்
விநாயகரைத் தோற்றுவித்தார் ;
சிவன்,
பார்வதி தேவியின்
கலப்பு இல்லாமல்
முருகனைத் தோற்றுவித்தார் ;
ஆமாம்
பார்வதி தேவி மற்றும்
சிவன் ஆகிய
இரண்டு பேருடைய
கலப்பும் இல்லாமல்
பிறந்தவர்கள் தான்
விநாயகரும்,முருகரும்
ஆமாம்
ஆண் மற்றும் பெண்
இருவருடைய
கலப்பும் இல்லாமல்
விநாயகரும், முருகரும்
பிறந்ததால் பார்வதிதேவி
கன்னித்தாய் ஆகிறாள்;”

“ இவர்களில் விநாயகருக்கு
ஒரு தனிச் சிறப்பு
உண்டு-அதாவது
பார்வதி தேவி
சிவபெருமானுடன்
கலக்காமல் விநாயகரை
தோற்றுவித்ததால்
பார்வதி தேவி
கன்னித்தாய் ஆகிறாள் ;
கன்னித் தாய்
பார்வதி தேவிக்குப்
பிறந்து திருமணமே
செய்யாத காரணத்தினால்
விநாயகர்
கன்னித் தெய்வம் ஆகிறார்;”

“கன்னித் தாய்
பார்வதி தேவிக்குப் பிறந்த
கன்னி தெய்வம் விநாயகர்”

“இன்று உலகம் முழுவதும்
பல்வேறு மதங்கள்
பல்வேறு கதைகளைப்
புனைந்து
பல்வேறு பெயர்களில்
பல்வேறு வடிவங்களில்
பெரும்பாலான மக்களால்
வணங்கப்பட்டு வரும்
கன்னித்தாய் வழிபாட்டிற்கும் ;
கன்னித் தெய்வ வழிபாட்டிற்கும் ;
அடிப்படை கன்னித்தாயான
பார்வதி தேவிக்கும்
கன்னி தெய்வமான
விநாயகருக்கும் இந்தியாவில்
நடத்தப்பட்டுக் கொண்டு
இருக்கும் வழிபாடாகும் ;”

“கன்னித் தாயான
பார்வதி தேவிக்குப் பிறந்த
கன்னி தெய்வமான
விநாயகரை
விநாயகரின்
சிறப்பினை உணர்ந்து
விநாயகர் சதுர்த்தியான
02-09-2019-ம் தேதி அன்று
வணங்குவோம்! “

விநாயகர் சதுர்த்தி
வாழ்த்துக்கள்-02-09-2019”

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்
-----02-09-2019
///////////////////////////////////////////////////

No comments:

Post a Comment