October 16, 2019

பரம்பொருள்-பதிவு-72


            பரம்பொருள்-பதிவு-72

நாரதர் :
"திருமணமான பெண்
எவ்வாறு நடந்து
கொள்ள வேண்டும்
என்பதற்கான விதிகள்
வரையறுக்கப்பட்டுள்ளன"

"திருமணம் முடித்து
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு
வரும் பெண் ;
புகுந்த வீட்டின்
பழக்க வழக்கங்களுடன்
தன்னை ஒன்றிணைத்து ;
புகுந்த வீட்டின்
பழக்க வழக்கங்களுடன்
தன்னை ஐக்கியப்படுத்திக்
கொள்ள வேண்டும் ;
பிறந்த வீட்டின் பெருமைகளை
பிறருடைய முகம்
சுளிக்கும்படி
பேசித் திரியக்கூடாது ;"

"திருமணம் முடித்து
வரும் பெண்
கணவனுடைய மனதை
அறிந்து அவன் எண்ணும்
எண்ணத்தின்படி
நடக்க வேண்டும் ;
கணவனுடைய மனதில்
உள்ள எண்ணத்திற்கு
மாறாக நடக்கக்கூடாது;"

"அதிகாலை கணவன் விழித்து
எழுவதற்கு முன் எழுந்து  ;
கணவன் அடிதொழுது ;
பின்பு இறைவன்
மலரடி தொழுது ;
அன்றாடக் கடமைகளை
முடித்து கணவன் வேலைக்கு
செல்லும் முன்னர்
அவன் விருப்பப்படும் உணவை
அவனுக்கு பரிமாறி ;
அவன் சாப்பிடும் வரை
அருகில் இருந்து கவனித்துக்
கொள்ள வேண்டும் ;"

"கணவன் வேலைக்கு
சென்றவுடன் வீட்டில் செய்ய
வேண்டிய வேலையையும்;
குடும்பத்தை வழி நடத்துவதற்கு
செய்ய வேண்டிய வேலையையும்
செய்ய வேண்டும்;"

"மாலை கணவன் வரும்
நேரம் அறிந்து ;
வாசலில் அமர்ந்து
வழிமேல் விழி வைத்து
கணவன் வருகைக்காக
காத்திருக்க வேண்டும் ;

"வேலை முடித்து வரும்
கணவன் மனம் வருத்தப்படாமல்
நடந்து கொள்ள வேண்டும் ;
கணவனை உறங்க வைத்த
பிறகே உறங்க வேண்டும் ;"

"புகுந்த வீட்டில் கணவனுக்கோ?
கணவனுடைய
உறவினர்களுக்கோ ?
கணவனைச்
சார்ந்தவர்களுக்கோ ?
பிறந்த வீட்டினிலோ
பிறந்த வீட்டின்
உறவினர்களாலோ ?
பிறந்த வீட்டைச்
சார்ந்தவர்களாலோ ?
ஏதேனும் அவமானமோ?
அல்லது
பிரச்சினையோ ஏற்பட்டால்
திருமணம் செய்து
முடித்து வந்த பெண் ;
பிறந்த வீட்டை எதிர்க்க
தயங்கக்கூடாது;
அவர்கள் உறவை
அறுக்கக்கூடிய சூழ்நிலை
வந்தாலும் புகுந்த
வீட்டின் மானம் காக்க
உறவை அறுக்க
தயங்கக்கூடாது ;"

"கணவனுடைய
அனுமதி இல்லாமல் ;
கணவனுக்கு தெரியாமல் ;
பிறந்த வீட்டிற்கு
சென்று வருவதோ?
பிறந்த வீட்டில்
உள்ளவர்களுடன் உறவுமுறை
கொண்டாடுவதோ?
பேச்சு வார்த்தையோ?
கொடுக்கல் வாங்கலோ?
வைத்துக் கொளளக் கூடாது"

"எந்த விஷயத்தை
பின்பற்ற வேண்டும் என்று
கணவன் சொல்கிறானோ?
அந்த விஷயத்தைத் தான்
பின்பற்ற வேண்டும்;
அவ்வாறு பின்பற்றாமல்
கணவனுக்கு தெரியாமல்
கணவன் வணங்கும்
தெய்வத்தை வணங்காமல்
மறைமுகமாக வேறு
கடவுளை வணங்குவது ;
மறைமுகமாக
வேண்டாத நண்பர்களுடன்
தொடர்பு கொள்வது ;
மறைமுகமாக பணத்தை
சேமித்து வைத்து
தேவைப்படுபவர்களுக்கு
கொடுப்பது; போன்ற
மறைமுகமான செயல்களைச்
செய்யக் கூடாது;"

"எளிமையாக சொல்ல
வேண்டுமானால்
திருமணம் முடித்து
பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு
வரும் பெண்
கணவனுடைய மனதை
அறிந்து அவன் எண்ணும்
எண்ணத்தின்படி
நடக்க வேண்டும் ;
கணவனுடைய மனதில்
உள்ள எண்ணத்திற்கு
மாறாக நடக்கக்கூடாது;"

"ஒரு கணவனை மட்டுமே
திருமணம் செய்து
கொண்டு வரும் பெண்களே
தன்னுடைய
கணவனின் தேவையை
பூர்த்தி செய்ய முடியாமல்
அவதிப் படும்போது……………?
ஐவரை மணந்த திரௌபதியே
எப்படி பஞ்ச பாண்டவர்களின்
தேவையை அறிந்து
அவர்கள் மனம் அறிந்து
அவர்களுடைய மனம்
வருத்தப்படாமல் உன்னால்
எப்படி நடந்து
கொள்ள முடியும் "

"ஐவருக்கும் மனவருத்தமோ
கோபமோ இல்லாமல்
எந்தவிதமான பிரச்சினையும்
இல்லாமல் ஐவருடைய
தேவையையும்
பூர்த்தி செய்வது என்பது
ஒரு மனைவியால்
இயலாத காரியம் ;
ஐவருக்கும் உனக்கும்
சண்டையும் குழப்பமும்
அமைதியின்மையும் ஏற்படத்
தான் வாய்ப்பு இருக்கிறது"

"பிரச்சினைக்குரிய இந்த
விஷயத்தைப் பற்றி
பஞ்ச பாண்டவர்களாகிய
நீங்களும் திரௌபதியும்
சிந்தித்து பார்த்தீர்களா
என்று பேச்சை
நிறுத்தினார் நாரதர்"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------16-10-2019
//////////////////////////////////////////

No comments:

Post a Comment