November 11, 2019

பரம்பொருள்-பதிவு-82


             பரம்பொருள்-பதிவு-82

“மாவீரனாகிய
அர்ஜுனன்
போகும் போது
உயர் எண்ணம்
கொண்ட
மகாத்மாக்களும் ;
வேதங்களில்
கரை கண்ட
உத்தமர்களும் ;
வேதங்களையும்,
வேதாங்கங்களையும்
அறிந்த அறிவில்
சிறந்தோர்களும் ;
ஆத்ம ஞானம்
உள்ளவர்களும் ;
பிசைஷ
எடுப்பவர்களாகிய
பிரம்மச்சாரிகளும் ;
கடவுள் மேல்
உண்மையான பக்தி
செலுத்துபவர்களும் ;
புராணங்கள்
சொல்லும்
ஸூதர்களும் ;
பிரபஞ்ச
ரகசியங்களை
எளிமையான
கதைகளின்
மூலமாக
சொல்லுகிறவர்களும் ;
காட்டில்
வசிக்கின்ற
சந்நியாசிகளும் ;
சிறந்த
இதிகாசங்களை
அனைவரும்
உணரும் வண்ணம்
இனிமையாகப்
படித்து
காட்டுகிறவர்களும் ;
பிறர் மனம்
மகிழும்படி இனிய
கதைகளைச்
சொல்லுகிறவர்களும் ;
பல்வேறு
வகையான
தனித்திறமை
கொண்டவர்களும் ;
என அநேகம் பேர்
சூழப்பட்டவனாக
அர்ஜுனன்
தேவர்களால்
சூழப்பட்ட
இந்திரனைப் போல
நடந்து சென்றான்”.

“அழகியவைகளையும்;  
புதியவைகளையும் ;
வனங்களையும் ;
தடாகங்களையும் ;
நதிகளையும் ;
கடலையும் ;
தேசங்களையும் ;
புண்ணிய
தீர்த்தங்களையும் ;
கண்டான்
அர்ஜுனன் ;
கங்கை
உற்பத்தியாகும்
இடமான
கங்கோத்பத்தியை
அடைந்து
அங்கே தங்கினான்;”

“அர்ஜுனனும்
பிராமணர்களும்
அங்கே தங்கியிருந்த
போது - அந்தப்
பிராம்மணர்களில்
பலர்
அக்கினிஹோத்திரங்களைச்
செய்ய
ஆரம்பித்தனர் ;”

“வித்வான்களாலும் ;
நியமம்
தவறாதவர்களாலும்;
சன்மார்க்கத்தில்
இருக்கக்கூடிய
மகாத்மாக்களாலும் ;
கங்கைக்
கரையில்
அக்கினிகளை
உண்டாக்கியபோது
எழுந்த
பிரகாசமும் ;
ஹோமமும் ,
புஷ்பார்ச்சனையும் ,
செய்யப்பட்டபோது
உண்டான
தெய்வீகமும்;
அந்த கங்கை
உற்பத்தியாகும்
இடத்தை அழகாக
மாற்றியது ;”   
       
“அர்ஜுனன்
குளிப்பதற்காக
கங்கையில்
இறங்கினான்,
அங்கே குளித்து
பிதிர்தர்ப்
பணமுஞ்செய்து
அக்கினி
ஹோத்திரம்
செய்வதற்காக
நீரிலிருந்து
கரையேற
நினைக்கும்போது
ஒரு பெண்
அர்ஜுனனைத்
தன் மாய
சக்தியால்
நதியின்
அடித்தளத்திற்கு
இழுத்துச்
சென்றாள்”

“அந்தப்
பெண் தான்”

“அந்தப்
பெண்ணின்
பெயர் தான்……………..?”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------11-11-2019
//////////////////////////////////////////

No comments:

Post a Comment