December 20, 2019

பரம்பொருள்-பதிவு-102

                  பரம்பொருள்-பதிவு-102

சகுனி :
"சகாதேவன் "

துரியோதனன் :
"பாண்டவர்களில்
ஒருவனா? "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"நம்முடைய எதிரிகளில்
ஒருவனான சகாதேவனா "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"பாவம்
அமைதியானவன்  ;
ஒன்றும் அறியாதவன் ;
பரிதாபத்திற்குரியவன் ; "

சகுனி :
"எதிரியின் திறமையை
குறைவாக மதிப்பீடு செய்யக்
கூடாது மருமகனே ! "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு
செய்யத் தெரியாதவன்
எதிரியிடம் தோற்கத்
தான் வேண்டும் "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு செய்யத்
தெரிந்தவனால் மட்டுமே
எதிரியை வெல்ல முடியும்
என்பதை நினைவில்
வைத்துக் கொள் மருமகனே ! "

"சகாதேவன்
சாதாரணமான
ஆள் இல்லை  ;
சோதிட சாஸ்திரத்தில்
ஆதி முதல் அந்தம் வரை
அறிந்து வைத்திருப்பவன் ;
சோதிட சாஸ்திரத்தின்
அனைத்து சூட்சும
விஷயங்களையும்
ஐயமின்றி கற்றுத்
தேர்ந்தவன் ;
திரிகால ஞானத்தை
முறைப்படி பயன்படுத்தும்
முறை அறிந்தவன் ;

"உலகிலுள்ள அனைத்து
உயிர்களுக்கும்
இறந்த காலம் எதிர்காலம்
ஆகியவற்றை சோதிடத்தின்
மூலம் துல்லியமாகக்
கணித்து சொல்லக் கூடிய
திறமை இந்த உலகத்தில்
சகாதேவனைத் தவிர
வேறு யாருக்கும் இல்லை"

"களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாள் எந்த
நாள் என்றும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதியான
ஆள் யார் என்றும் ;
சகாதேவன் குறித்து
கொடுத்து அதை நாம்
செயல்படுத்தி விட்டோம்
என்றால் மூவுலகமும்
சேர்ந்து வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
மூம்மூர்த்திகளே
ஒன்றாக வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
நம்மை யாராலும்
தோற்கடிக்க முடியாது
மருமகனே !"

"வெற்றி நமக்குத் தான் !"

துரியோதனன் :
"ஆனால் சகாதேவன்
எதிரியாயிற்றே  !"

"அவன் எப்படி நாம்
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
குறித்துக் கொடுப்பான் "

"அப்படியே குறித்து
கொடுத்தாலும்
உண்மையைத் தான்
சொல்வான் என்பதை
நாம் எப்படி நம்புவது : "

சகுனி :
"சோதிட சாஸ்திரத்தில்
முக்கியமான இரண்டு
விதிகள் இருக்கிறது
மருமகனே ! "

" சோதிடம் பார்க்க
வருபவர் எதிரியாக
இருந்தாலும் அவர்
கேட்கும் கேள்விகளுக்கு
உண்மையை மறைக்காமல்
சொல்ல வேண்டும்
என்பது முதல்விதி "

"அதைப்போல சோதிடம்
பார்ப்பவர் சோதிடத்தை
யாருக்கு பார்க்கிறாரோ
அவரைப் பற்றிய
தகவல்களை யார்
கேட்டாலும் சொல்லக்
கூடாது என்பது
இரண்டாவது விதி "

"இந்த இரண்டு
விதிகளையும் உண்மையாக
யார் பின்பற்றுகிறாரோ
அவர் தான் சோதிட
சாஸ்திரம் அறிந்த
உண்மையான சோதிடர்  "

"இந்த இரண்டு
விதிகளையும் உயிரென
கடைபிடிப்பவன் சகாதேவன் "

"சகாதேவன்
எதிரியாயிற்றே என்று
நினைக்காமல் சகாதேவனை
நேரில் போய் சந்தித்து
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
கேட்டு அறிந்து கொண்டு
வா மருமகனே ! "

துரியோதனன் :
"அப்படியே ஆகட்டும்
மாமா "

(துரியோதனன்
சகாதேவனை
சந்திப்பதற்காக
செல்கிறான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 20-12-2019
//////////////////////////////////////////

No comments:

Post a Comment