January 15, 2020

பொங்கல் வாழ்த்துக்கள்-15-01-2020


பொங்கல் வாழ்த்துக்கள்-15-01-2020 !

அன்பிற்கினியவர்களே !

“அன்பின் வழியது
உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த
உடம்பு

“அன்பை
எழுத்துக்களின் மூலம்
வெளிப்படுத்த முடியாது ;
அன்பை
வார்த்தைகளின் மூலமும்
செயல்களின் மூலமும் தான்
வெளிப்படுத்த முடியும் ;
அதாவது
அன்பை உணர்வுகளின்
மூலமே வெளிப்படுத்த
முடியும் “

“ஒவ்வொருவரும்
தங்களுடைய அன்பை
வெளிப்படுத்துவதற்கான
ஒரு சந்தர்ப்பமே
பண்டிகைகள் !
அதாவது பண்டிகைகள்
என்பவை அன்பை
வெளிப்படுத்துவதற்கான
ஒரு சந்தர்ப்பமாக
அமைகிறது ; “

“அன்பை நாம் வீட்டில்
இருந்து கொண்டே வாழ்த்து
அட்டைகளின் மூலமாகவோ
WHATS APP
மூலமாகவோ
FACE BOOK
மூலமாகவோ மற்றும்
எந்த ஒன்றை வைத்தும்
நாம் நம்முடைய அன்பை
வெளிப்படுத்த முடியாது ; “

“ஒருவரை நேரில் சந்தித்து
நம்முடைய அன்பை
உணர்வுகளின்
மூலமாகத் தான்
வெளிப்படுத்த முடியும் “

“ஐயிரண்டு திங்கள்
அங்கமெல்லாம்
நொந்து பெற்று நம்மை
பாராட்டி சீராட்டி
வளர்த்த தாய்க்கும் ;
சுற்றுப் புறச்
சூழ்நிலையிலிருந்து
நம்மைக் காத்து அறிவூட்டி
வளர்த்த தந்தைக்கும் ;
நம்முடைய அன்பை
நேரில் சென்று
நம்முடைய
உணர்வுகளின் மூலமே
நம்முடைய அன்பை
வெளிப்படுத்த வேண்டும் ;
வேறு எந்த ஒன்றினாலும்
வெளிப்படுத்தக் கூடாது ; “

“படிப்பதற்காக வெளியூர்
சென்று படித்தாலும் ;
வேலை நிமித்தம்
காரணமாக வெளியூர்
சென்று வெளியூரில் தங்கி
வேலை செய்தாலும்  ;
திருமணம் செய்து
கொண்டு குடும்பத்துடன்
வெளியூரில் இருந்தாலும் ;
பண்டிகைகள் என்று வந்து
விட்டால் பெற்றோர்களை
அவர்கள் இருக்கும்
இடத்தைத் தேடிச் சென்று
அவர்களுடன் அன்பை
பரிமாறிக் கொள்ள வேண்டும் “

“இந்த உலகத்தையே
பெற்றோர்களுக்கு
விலைக்கு வாங்கி
கொடுத்தாலும் மகிழாத
அவர்களுடைய மனம் ;
பெற்றோர்களை
பண்டிகை சமயத்தில்
அவர்கள் இருக்கும்
இல்லம் தேடிச் சென்று
அவர்களுடன் அன்பை
பரிமாறிக் கொள்ளும்போது
அவர்களுடைய
மனம் மகிழ்கிறது ;”

“நீங்கள் செலுத்தும்
அத்தகைய அன்பால்
அவர்கள் மனம் குளிர்ந்து
ஆனந்தத்தில் ஆனந்தக்
கண்ணீரே பெற்றோர்களுக்கு
வந்து விடும் ; “

“இது தான் நாம்
நம்முடைய அன்பை
பிறருக்கு
வெளிப்படுத்தும் முறை “

“அவ்வாறு செய்யாமல்
வாழ்த்து அட்டைகளை
அனுப்புவது
இணையதளங்கள் மூலமாக
அன்பை பரிமாறிக்
கொள்வதாக சொல்லிக்
கொண்டு அன்பை
பரிமாறுவது ; ஆகியவை
எல்லாம் அன்பைப்
பரிமாற்றம் செய்வது ஆகாது ; “

“யார் ஒருவர் நேரில்
சென்று தன்னுடைய
அன்பை இன்னொருவருக்கு
உணர்வுகளின் மூலமாக
வெளிப்பத்துகிறாரோ
அவரே உண்மையான
அன்பைக் கொண்டவர் ;
அவரே உடலில்
உயிர் உள்ள மனிதர் ;
யார் ஒருவர்
தன்னுடைய அன்பை நேரில்
சென்று இன்னொருவருக்கு
உணர்வுகளின் மூலமாக
வெளிப்படுத்தாமல்
இருக்கிறாரோ - அவர்
பிறர் மேல் அன்பு
வைத்திருப்பதாக நடிப்பவர் ;”
அவர் உடலில்
வெறும் எலும்பையும்
தோலையும் கொண்ட
மனிதர் என்பதைத் தான்
திருவள்ளுவர்

அன்பின் வழியது
உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த
உடம்பு “

என்ற திருக்குறளின்
மூலம் தெளிவுபடுத்துகிறார் “

“நம்முடைய அன்பை
பிறருக்கு
வெளிப்படுத்துவதற்கான
ஒரு சந்தர்ப்பமாக
பண்டிகைகளை
பயன்படுத்துவோம் ;
நேரில் சென்று
ஒருவொருக்கொருவர்
அன்பை பகிர்ந்து
கொண்டு மகிழ்வோம் ;

“பொங்கல் வாழ்த்துக்கள்
15-01-2020 “

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
---------15-01-2020
/////////////////////////////////////







No comments:

Post a Comment