February 05, 2020

பரம்பொருள்-பதிவு-125


           பரம்பொருள்-பதிவு-125

(கிருஷ்ணன் உலூபியை
சந்திக்கச் செல்கிறார்.
கிருஷ்ணனைக் கண்ட
உலூபி கிருஷ்ணனின்
கால்களில் விழுகிறாள்)

உலூபி :
"என்னை ஆசிர்வதியுங்கள்
அண்ணா ! "

கிருஷ்ணன் :
"அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரைக்கும்
உன்னுடைய புகழும்
இந்த உலகத்தில்
இருக்கும் ;
நீடுழி வாழ்க !
என் அன்புத் தங்கை
உலூபி ! "

(கிருஷ்ணன் உலூபியை
ஆசிர்வதிக்கிறார்)

"எழுந்திரு உலூபி "

(உலூபி எழுந்திருக்கிறாள்)

உலூபி :
"நீங்கள் வாழ்த்தியதின்
அர்த்தம் எனக்குப்
புரியவில்லை அண்ணா ! "

கிருஷ்ணன் :
“அரவானுக்குக்
கிடைக்கக்கூடிய புகழ்
இந்த உலகம் என்று
வரை இருக்குமோ
அன்று வரை இருக்கும் ;
அதைப்போல ,
அரவானின் புகழ்
இந்த உலகத்தில்
இருக்கும் வரை
உன்னுடைய
புகழும் இருக்கும் ;”

உலூபி :
“இந்த உலகம்
இருக்கும் வரை
அரவானின் புகழ் இருக்க
வேண்டுமென்றால்  
யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலை
அல்லவா அரவான்
செய்ய வேண்டும் ? “

கிருஷ்ணன் :
“ஆமாம் “

“யாரும் செய்ய முடியாத
மிகப்பெரிய செயலைத்
தான் அரவான்
செய்யப் போகிறான் “

“அதனால் தான் நானே
அரவானைப் பார்த்து
விட்டு வந்தேன் “

உலூபி :
“அரவானைப் பார்த்தீர்களா ?”

கிருஷ்ணன்  :
“அரவானை மட்டுமல்ல
அர்ஜுனனையும்
பார்த்து விட்டுத்
தான் வந்திருக்கிறேன் “

உலூபி :
“அனைவரும் நலமாக
இருக்கிறார்களா அண்ணா !”

கிருஷ்ணன் :
“அனைவரும் நலம் “

உலூபி :
“தாங்கள் என்னைக்
காண வந்ததின்
காரணத்தை நான் தெரிந்து
கொள்ளலாமா அண்ணா ! “

கிருஷ்ணன் :
“நான் ஏற்கனவே எடுத்த
முடிவு ஒன்றிற்கு ஒப்புதல்
பெறுவதற்காக உன்னைக்
காண வந்தேன் “

உலூபி :
“அண்ணா நீங்கள்
எந்த முடிவு எடுத்தாலும்
அந்த முடிவு சரியான
முடிவாகத் தானே இருக்கும் “

“உங்கள் முடிவு
எப்போதும் தவறான
முடிவாக இருந்ததில்லையே !”

“நீங்கள் எப்போதும்
தவறான முடிவை
எடுத்ததே இல்லையே “

“உங்கள் முடிவை தவறு
என்று சொல்வதற்கு
தகுதி படைத்தவர்கள்
இந்த உலகத்தில்
யார் இருக்கிறார்கள் “

“நீங்கள் எடுத்த முடிவிற்கு
ஒப்புதல் அளிக்கும்
அளவிற்கு நான்
ஒன்றும் பெரிய ஆள்
இல்லையே அண்ணா ! “

கிருஷ்ணன் :
“முடிவு என்னுடையது
என்றாலும் அதை
ஏற்றுக் கொண்டு
ஒப்புதல் அளித்தது
உன் மகன் அரவான் “

“உன்னுடைய ஒப்புதலும்
தேவைப்படுகிறது என்ற
காரணத்தினால் தான்
உன்னுடைய ஒப்புதலைப்
பெறுவதற்காக
உன்னைக் காண வந்தேன் “

உலூபி :
“என்ன ?
என் மகனா ?
என் மகன் அரவானா ? “

“ஒப்புதல் அளித்தானா ?”

“உங்களுடைய முடிவுக்கு
ஒப்புதல் அளித்தானா ?”

“எந்த முடிவுக்கு
ஒப்புதல் அளித்தான் “

“எந்த முடிவைச் சொல்லி
அரவானிடம் ஒப்புதல்
பெற்றீர்கள்“

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 05-02-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment