February 10, 2020

பரம்பொருள்-பதிவு-127


             பரம்பொருள்-பதிவு-127

உலூபி :
“உண்மையாகவே
நீங்கள் நல்லது
செய்வதற்கான
முயற்சியை எடுத்து
இருப்பீர்களேயானால்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்காமல்
இருப்பதற்குரிய
அனைத்து
முயற்சிகளையும்
செய்து இருப்பீர்கள் ;
ஆனால்
நீங்கள் அவ்வாறு
செய்யாமல்
துரியோதனன் அரவானைக்
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்குரிய
அனைத்து
முயற்சிகளையும் செய்து
கொண்டிருக்கிறீர்கள் “

“நீங்கள் செய்யும்
செயல்களைப்
பார்த்தால் நல்லது
செய்வதற்கான
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கிறீர்கள்
என்று எப்படி
சொல்ல முடியும் “

கிருஷ்ணன்  :
“துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
அரவான் வாக்கு
கொடுத்து விட்டான் “

“அரவான்
துரியோதனனுக்கு
கொடுத்த வாக்கை
மீற முடியாது “

“அரவான் கண்டிப்பாக
களப்பலியாகத்
தான் வேண்டும் “

“அரவான் களப்பலியாவதை
யாராலும் தடுக்க முடியாது “

“அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியானால்
இந்த உலகத்தில்
நல்ல செயல்கள்
நடைபெறாது  
வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
நல்லவர்கள் வாழ
முடியாத சூழ்நிலை
தான் ஏற்படும்;
தர்மம் அழிந்து அதர்மம்
தலைவிரித்தாடும்
அரவானின் தியாகம்
வீணாகிப் போய் விடும்;
அரவானுக்கு கெட்ட
பெயர் ஏற்படும் “

“ஆனால் அரவான்
பாண்டவர்களுக்காக
களப்பலியானால்
இந்த உலகத்தில்
நல்ல செயல்களே
நடைபெறும்  ;
அரவானின் தியாகம்
வீணாகப் போய் விடாது ;
அரவானுக்கு கெட்ட
பெயர் ஏற்படாது ; “
என்ற காரணத்தினால்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று துரியோதனன்
அரவானை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலி
கொடுப்பதற்கு தேவையான
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கிறேன் “

 “களப்பலி கொடுப்பதை
ஆரம்பித்து வைத்ததே
துரியோதனன் தான் “

“அதை நல்லபடியாக
முடித்து வைக்க
வேண்டும் என்று
முயற்சி செய்து
கொண்டிருப்பவன் நான் “

“நான் செய்யும்
செயல்கள் சரியானவை
என்பது - உனக்கு
புரியாததற்குக் காரணம்
உன்னுடைய தாய்ப்பாசம் “

“தாய்ப்பாசம் என்ற
திரை உன் இதயத்தை
மூடி மறைத்து
இருக்கிறது ; - அந்தத்
திரையை விலக்கி
விட்டு பார் உலூபி
நான் செய்யும்
செயல்கள் அனைத்தும்
சரியானவை என்று
உனக்குப் புரியும் “

உலூபி :
“வாழ்வு அல்லது
சாவு இரண்டில்
ஒன்று கிடைக்கும்  ;
போர் புரிவதற்கு
உன் மகனை
அனுப்புகிறாயா என்று
கேட்டால் ஒப்புதல்
அளிக்க முடியும் ;
ஏனென்றால்
போர்க்களத்திற்கு சென்று
போர் புரிவதற்கு
வீரம் தேவை - அங்கே
வீரத்தை வெளிப்படுத்த
வாய்ப்பிருக்கிறது "

"ஆனால் ,
களப்பலியாகக் கொடுப்பதற்கு
உன் மகனை
அனுப்புகிறாயா என்று
கேட்டால் எப்படி ஒப்புதல்
அளிக்க முடியும் ;”
களப்பலியாவதற்கு வீரம்
தேவை இல்லையே
அங்கே வீரத்தை
வெளிப்படுத்த எங்கே
வாய்ப்பிருக்கிறது "

"என் மகன்
களப்பலியானான்
என்று கேட்பதை விட ;
போர்க்களத்தில்
வீரத்துடன் போரிட்டு
மடிந்தான் என்பதைக்
கேட்பதையே - நான்
பெருமையாகக் கருதுகிறேன் "

"நான் மட்டுமல்ல
இந்த உலகத்தில் உள்ள
எந்தத் தாயும் - தன்
மகன் போர்க்களத்தில்
வீரத்துடன் போரிட்டு
மடிந்தான் என்பதைக்
கேட்கவே விரும்புவார்கள்" "

கிருஷ்ணன்  :
“களப்பலியாவதற்கு
வீரம் தேவையில்லை
என்கிறாயே உலூபி !

விரம் இல்லாமல்
களப்பலியாக முடியாது
என்பது உனக்குத்
தெரியுமா உலூபி ! ””

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 10-02-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment