March 03, 2020

பரம்பொருள்-பதிவு-145


           பரம்பொருள்-பதிவு-145

உலூபி :
"நீங்கள் எப்படி
அக்கா - என்
மகன் அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல்
அளித்தீர்கள் ?"

திரௌபதி :
"உலூபி  முதலில்
என் மகன் அரவான்
என் மகன் அரவான்
என்று தொடர்ந்து
சொல்லிக் கொண்டு
இருப்பதை நிறுத்து "

"என் மகன்
அரவான்
என் மகன்
அரவான் - என்று
ஒவ்வொரு முறை
நீ சொல்லும் போதும்
உன்னுடைய
வார்த்தையில்- நீ
அரவான் மேல்
வைத்திருக்கும்
பாசம் தான்
தெரிகிறது ;
ஆனால்
உறவுகளின் மேல்
நீ பாசம்
வைத்ததாகத்
தெரியவில்லை "

"நீ உறவுகளின் மேல்
உண்மையாகவே
பாசம் வைத்து
இருந்தால்
என்னுடைய மகன் 
அரவான்
என்னுடைய மகன்
அரவான் என்று
சொல்லிக் கொண்டு
இருக்க மாட்டாய் :
நம்முடைய மகன்
அரவான் என்று
தான் சொல்லிக்
கொண்டு இருப்பாய்"

"நீ உறவுகளின்
மேல் பாசம்
வைக்காத
காரணத்தினால் தான்
என்னுடைய மகன்
அரவான்
என்னுடைய மகன்
அரவான் - என்று
தொடர்ந்து சொல்லிக்
கொண்டிருக்கிறாய்"

"அரவானை நாங்கள்
உன்னுடைய மகனாக
நினைக்கவில்லை ;
எங்களுடைய
மகனாகத் தான்
நினைத்தோம் ;
அதனால் தான்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்க
ஒப்புதல் அளித்தோம் ;"

"அரவானை நாங்கள்
உன்னுடைய
மகனாக மட்டுமே
நினைத்து இருந்தால்
அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளித்து
இருக்க மாட்டோம் :

"அரவானை நீ
உன்னுடைய மகன்
என்று நினைத்துக்
கொண்டிருக்கிற
காரணத்தினால்
தான் நாங்கள்
அனைவரும் உனக்கு
எதிரிகளாகத்
தெரிகிறோம் "

"அரவான்
சம்பந்தமாக
நாங்கள் செய்யும்
செயல்கள்
அனைத்தும்
உனக்கு தவறாகத்
தெரிகிறது "

"அரவானைப் பற்றி
நாங்கள் பேசும்
சொற்களில் உள்ள
நன்மைகள்
உனக்கு
தீமையாகவே
தெரிகிறது "

"அரவானை
எப்போது நீ நம்
அனைவருடைய
மகன் என்று
நினைக்கிறாயோ
அப்போது தான்
நாங்கள் அனைவரும்
உனக்கு
எதிரிகளாகத்
தெரியமாட்டோம் "

"அரவான்
சம்பந்தமாக நாங்கள்
செய்யும் செயல்கள்
உனக்கு தவறாகத்
தெரியாது "

"அரவானைப் பற்றி
நாங்கள் பேசும்
சொற்களில் உள்ள
நன்மைகள் உனக்கு
தீமையாகத்
தெரியாது  "

"அரவானை நீ
உன்னுடைய மகன்
என்று நினைக்கும்
வரை உனக்கு
எதுவுமே புரியாது "

"எதையும் விளக்கமாக
சொன்னாலும்
உனக்கு புரியாது "

"இருந்தாலும்
சொல்கிறேன் "

"இங்குள்ள
அனைவரும்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க ஒப்புதல்
அளித்ததற்கு
பல்வேறு
காரணங்களைச்
சொன்னாலும்
நான் ஒப்புதல்
அளித்தது
ஒரே ஒரு
காரணத்திற்காகத்
தான் "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-03-2020
//////////////////////////////////////////

1 comment:

  1. நல்ல பதிவு. சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம். வலைப்பூக்களை மணக்கச் செய்வோம்...

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்கள் வலைத்தயம் உள்ளிட்ட ஐந்து வலைத்தளங்களின் பதிவுகளை ஐந்தும் ஐந்தும் – 03.03.2020 (2) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete