March 13, 2020

பரம்பொருள்-பதிவு-155


              ஜபம்-பதிவு-403
            (பரம்பொருள்-155)

உலூபி  :
“உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களிடம் என்னுடைய
அம்மா சம்மதித்தால்
மட்டுமே - நான்
களப்பலியாவேன்
என்று நீ சொல்லி
இருக்க வேண்டும் “

“அவ்வாறு சொல்லி
விட்டு என்னுடைய
கருத்தைக் கேட்டிருந்தால்
அரவானைக்
களப்பலியாகக் கொடுப்பதற்கு
எனக்கு சம்மதமில்லை
என்று அன்றே
என்னுடைய கருத்தைச்
சொல்லி இருப்பேன் “

“உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களால் ஆரம்பித்து
வைக்கப்பட்ட களப்பலியை
முளையிலேயே கிள்ளி
எறிந்து இருப்பேன் “

“களப்பலியாக உன்னை
கொடுப்பதிலிருந்து
தடுத்திருப்பேன் “

“களப்பலியையே
தடுத்திருப்பேன்”

அரவான்  :
“நான் களப்பலியாவதை
யாராலும் தடுக்க
முடியாது அம்மா ? “

“இந்த உலகத்தில்
மனிதர்கள் அனைவரும்
பிறக்கிறார்கள் ;
வாழ்கிறார்கள் ;
இறக்கிறார்கள் ;
மனிதனாக பிறந்த
ஒவ்வொருவரும் தாங்கள்
இந்த உலகத்தில்
ஏன் பிறந்தோம்  ?
எதற்காக வாழ்கிறோம் ?
என்ன காரணத்திற்காக
இந்த உலகத்திற்கு
வந்தோம்? - என்று
தெரியாமல் தன்னுடைய
பிறவியின் நோக்கத்தை
அறிய முடியாமல்
இறந்து விடுகின்றனர் “

“தாங்கள் எதற்காக
இந்த உலகத்தில்
பிறந்து வந்தோம்
என்பதற்கான காரணத்தை
அறிந்து கொள்ளாமல்
இறந்தவர்கள் தான்
இந்த உலகத்தில் அதிகம் “

“ஆனால் நான் பிறந்ததே
களப்பலியாகத் தான்
என்பதை நான்
அறிந்து வைத்திருக்கிறேன் “

“என்னுடைய பிறவியின்
நோக்கமே களப்பலியாவது
தான் என்பதை நான்
உணர்ந்து வைத்திருக்கிறேன் ‘

“களப்பலியாவதற்குத்
தான் நான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
என்பதையும்
களப்பலியாகத் தான்
போகிறேன் என்பதையும்
நான் தெரிந்து
வைத்திருக்கிறேன் “

“நான் எதற்காக பிறந்தேன்
என்னுடைய பிறவியின்
நோக்கம் என்ன
என்பதைத் தெரிந்து கொண்ட
காரணத்தினால் தான்
பரந்தாமன் கிருஷ்ணன்
தர்மம் இந்த உலகத்தில்
நிலைபெற்று இருக்க
வேண்டும் என்பதற்காக
பாண்டவர்கள் சார்பாக
என்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு என்னிடம்
ஒப்புதல் பெற்று
நாளைய தினத்தை
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளாக
தேர்ந்தெடுத்து
வைத்திருக்கிறார் ‘

“பாண்டவர்கள் சார்பாக
நாளைய தினத்தில் நான்
களப்பலியாவதால்
களப்பலியாவதற்கு முன்
தங்களிடம் ஆசிகள்
பெற்று விட்டு செல்லலாம்
என்று வந்தேன் அம்மா ‘

உலூபி  :
“நான் எப்படியடா
உன்னை
ஆசிர்வதிக்க முடியும் ?”

அரவான்  :
“நீங்கள் தான் அம்மா
என்னை ஆசிர்வதிக்க
வேண்டும் “

“என்னை ஆசிர்வதிக்கும்
முழு உரிமையும்
உங்களுக்கு மட்டும்
தான் இருக்கிறது ;”

“என்னுடைய பிறப்பிற்கு
காரணமாக இருந்தவர்
நீங்கள் தான் ! “

“நான் இந்த
உலகத்தை பார்ப்பதற்கு
காரணமாக இருந்தவர்
நீங்கள் தான் ! “

“என்னுடைய வாழ்க்கைக்கு
ஆதாரமாக இருந்து
கொண்டிருப்பவர்
நீங்கள் தான் ! “

“என்னுடைய ஆரம்பத்திற்கு
காரணமாக இருந்த
நீங்கள் தான் என்னுடைய
முடிவுக்கும் காரணமாக
இருக்க வேண்டும் “

“என்னுடைய பிறப்பிற்கு
காரணமாக இருந்த
நீங்கள் தான் என்னுடைய
இறப்பிற்கும் காரணமாக
இருக்க வேண்டும் “

“என்னை பிறக்க வைத்து
என்னுடைய வாழ்க்கையை
ஆரம்பித்து வைத்த
நீங்கள் தான் களப்பலியாகப்
போகும் என்னை
ஆசிர்வதித்து வழியனுப்பி
வைத்து என்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்க வேண்டும் “

“என்னை ஆசிர்வதித்து
என்னை களப்பலிக்கு
என்னை அனுப்பி
வையுங்கள் அம்மா “

“ஆமாம், என்னுடைய
வாழ்க்கையை ஆரம்பித்து
வைத்த நீங்களே
என்னுடைய வாழ்க்கையை
முடித்து வையுங்கள் அம்மா!“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment