March 18, 2020

பரம்பொருள்-பதிவு-157


              ஜபம்-பதிவு-405
            (பரம்பொருள்-157)

அரவான் :
“அம்மா உங்களை
நான் புரிந்து கொண்டவன்
என்பதால் கேட்டேன்”

“நீங்கள் அனைத்து
உண்மைகளையும்
புரிந்து கொள்பவர்
என்பதால் கேட்டேன் “

“நான் சொல்லும்
உண்மைகள் அனைத்தையும்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள்
என்பதால் கேட்டேன்”

“என்னைப் போலவே
நீங்களும் உண்மையை
உணர்ந்திருப்பீர்கள்  ;
களப்பலிக்கு என்னை
ஆசிர்வதித்து
வழியனுப்பி வைப்பீர்கள்
என்பதால் கேட்டேன் ; ”

“நான் நல்லது
செய்வதற்காக என்னை
ஆசிர்வதிக்க வேண்டும்
என்பதால் கேட்டேன்”

“இந்த உலகத்தையே
தனக்குள் வைத்து கட்டி
காப்பாற்றிக் கொண்டிருக்கும்
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என்னைத் தேடி
வந்து நின்று - என்
முன்னால் தலை
குனிந்து நின்று
தன்னுடைய இரண்டு
கைகளையும் ஏந்தி நின்று
பாண்டவர்கள் சார்பாக
என்னுடைய உயிரை
களப்பலியாகத் தர
வேண்டும் என்று
யாசகம் கேட்டு
நின்றார் என்றால்
அவர் செய்த செயலின்
பின்னால் உள்ள
உண்மைகளைப் புரிந்து
கொள்ளுங்கள் அம்மா “

“வருங்கால உலகத்தில்
வாழக்கூடிய மக்கள்
அனைவரும் நிம்மதியாக
வாழ வேண்டும்
என்பதற்காகத் தான் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“வருங்கால உலகத்தில்
வாழக்கூடிய ஒவ்வொரு
பெண்ணும் மானத்தோடு
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
பெண்கள் அனைவரும்
அச்சம் நீங்கி நிம்மதியாக
வாழ வேண்டும்
என்பதற்காகவும் ;
தன்னுடைய கற்புக்கு
எந்தவிதமான களங்கமும்
ஏற்படாமல் வாழ வேண்டும்
என்பதற்காகவும் தான்
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக வேண்டும்
என்று என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“இந்த உலகத்தில்
அதர்மம் அழிய வேண்டும்
என்பதற்காகவும் ;
தர்மம் நிலைபெற்று
இருக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார்  

“வருங்கால உலகத்தில்
கெட்டவர்கள் அனைவரும்
அழிந்து நல்லவர்கள்
வாழக்கூடிய இடமாக - இந்த
உலகம் இருக்க வேண்டும்
என்பதற்காகவும்  ;
வருங்கால உலகம்
தீமைகள் அழிந்து
நல்லவைகள் பிறக்கும்
இடமாக இருக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாக
வேண்டும் என்று
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கேட்டு
பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணன்
என் முன்னால்
கையேந்தி நின்றார் “

“பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என் முன்னால் கையேந்தி
நின்றார் என்றால் என்
பிறவியின் நோக்கமான
களப்பலி எவ்வளவு
முக்கியமானது என்பதை
நீங்கள் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா “

“பரந்தாமன் ஶ்ரீ கிருஷ்ணனே
என் முன்னால்
கையேந்தி நின்றார்
என்றால் என்னுடைய
களப்பலி இந்த உலகத்திற்கு
எவ்வளவு தேவையானது
என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா”

“இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
தங்களுடைய நன்மைக்காக
பரந்தாமன் கிருஷ்ணனிடம்
கையேந்தி யாசித்து
நிற்கும் போது இந்த
உலகத்தில் உள்ள மக்கள்
அனைவருடைய
நன்மைக்காக அந்த
பரந்தாமனே என்னிடம்
வந்து கையேந்தி
யாசித்து நின்றார் என்றால்
பாண்டவர்கள் சார்பாக
நான் களப்பலியாவது
எவ்வளவு அவசியம்
என்பதைத் தெரிந்து
கொள்ளுங்கள் அம்மா ”

“பரந்தாமன் கிருஷ்ணன்
மேற்கொண்டிருக்கும்
செயலுக்கும் என்னுடைய
பிறவியின் நோக்கத்திற்கும்
எந்தவிதத் தடையையும்
ஏற்படுத்தாமல்
ஆசிர்வதித்து வழியனுப்பி
வையுங்கள் அம்மா”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 18-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment