April 07, 2020

பரம்பொருள்-பதிவு-181


              ஜபம்-பதிவு-429
             (பரம்பொருள்-181)

“அரவான்
உறவு முறைக்குள்
இருக்கிறான்  ;
உறவினனாக
இருக்கிறான் ;
என்பதற்காக
அரவானுடைய
தலையை
வெட்ட
முடியவில்லை
என்று
சொல்லும் - நீ
நாளை
நடக்கப் போகும்
குருஷேத்திரப்
போரில்
உன்னை
எதிர்த்து
உனக்கு
எதிராக
நிற்கப் போகும்
உன்னுடைய
உறவினர்களை
எப்படி
கொல்லப்
போகிறாய் ? “

“அவர்கள்
உன்னுடைய
உறவினர்கள்
தானே ? “

“எனக்கு
எதிராக நின்று
கொண்டிருப்பவர்கள்
என்னுடைய
உறவினர்கள்
ஆகவே
அவர்களை
நான் கொல்ல
மாட்டேன்
என்று
சொல்வாயா “

“இங்கேயே
அரவான்
எனக்கு உறவாக
இருக்கிறான் ;
ஆகவே
அரவானுடைய
தலையை
வெட்ட
முடியாது - என்று
சொல்லும் நீ
எப்படி
நாளை
நடக்கப் போகும்
போரில்
உனக்கு
எதிராக
நிற்கப் போகும்
உன்னுடைய
உறவினர்களை
கொல்லப்
போகிறாய் ? “

தர்மர் :
“உறவினர்களாக
இருப்பவர்கள்
நாளை
நடக்கப்போகும்
குருஷேத்திரப்
போரில்
எனக்கு
எதிராக
நிற்கும் போது
உறவினர்களாக
நின்றால் தான்
நான் தயக்கம்
காட்ட
வேண்டும்  

“ஆனால்
அவர்கள்
அனைவரும் என்
முன்னால்
உறவினர்களாக
நிற்கப்போவதில்லையே
எதிரிகளாகத்
தானே நிற்கப்
போகிறார்கள் “

“எதிரிகளாக
நிற்கப்
போகிறவர்களை
கொல்வதில்
எனக்கு
எந்தவிதமான
தயக்கமும்
இல்லை  

“ஆனால்
இங்கேயோ
அரவான் என்
முன்னால்
எதிரியாக
நிற்கவில்லையே
உறவாகத் தானே
நிற்கிறான் “

“உறவாக 
நிற்பவனுடைய
தலையை
என்னால்
எப்படி
வெட்ட
முடியும் “

“அதனால் தான்
அரவானுடைய
தலையை
என்னால்
வெட்ட
முடியவில்லை
என்றேன் “

“அதனால்
தான் நான்
சொல்கிறேன்
அரவான்
தலையை
என்னால்
வெட்ட
முடியாது என்று  

(என்று
சொல்லி
விட்டு
அமைதியாக
நின்று
கொண்டிருந்தார்
தர்மர்)

கிருஷ்ணன் :
“பீமா…………………………………?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment