March 18, 2021

ARAVAN KALABALI BOOK LAUNCHING-4

 

பதிவு-4

அரவான் களப்பலி

 

என்னுடைய புத்தகம்

விற்பனையாகிறது

அனைவரும்

வாங்கிச்

செல்கின்றனர் என்ற

காரணத்தினால்

அந்த புத்தக

காட்சியில் இருக்கும்

கடைகளில்

இருக்கும் பல

பதிப்பகங்கள்

என்னுடைய

புத்தகத்தை வாங்கி

சென்று விற்றனர்

 

பிரசித்தி பெற்ற

பதிப்பகங்கள்

என்னை சந்தித்து

உங்களுடைய

எழுத்துக்கள்

வித்தியாசமாக

இருக்கிறது

யாரும் தொடாத

கதைகளை

எழுதுகிறீர்கள்

வித்தியாசமான

கதையை தேர்வு

செய்து எழுதி

இருக்கிறீர்கள்

உங்களுடைய

அடுத்த கதைகளை

நாங்களே பதிப்பித்து

விற்பனை செய்கிறோம்

என்று பல்வேறு

பதிப்பகங்கள்

என்னை அணுகினர்

 

எழுத்தாளர் என்று இந்த

சமுதாயம் என்னை

ஏற்றுக் கொண்டது

புதிய எழுத்தாளர்

என்று இல்லாமல்

அனைவரும் என்னுடன்

புகைப்படம் எடுக்க

விரும்பியது

புத்தகத்தில் என்னிடம்

கையெழுத்து வாங்கியது

அடுத்து என்னுடைய

புத்தகங்களை

பதிப்பகங்கள் மூலம்

வெளியீடு செய்ய

என்னிடம் அனுமதி

கேட்டது ஆகிய

அனைத்தும் - அந்த

புத்தக காட்சியில்

நடைபெற்றது

 

நான் முயற்சி

எடுக்கவில்லைஎன்றால்

என் எழுத்துக்கள்

மக்களிடம் எந்த

அளவுக்கு சென்று

சேர்ந்திருக்கிறது

என்பதை என்னால்

அறிந்து கொள்ள

முடியாமலேயே

போய் இருக்கும்

என்னுடைய

எழுத்துக்கள்

மக்களை எந்த

அளவுக்கு சென்று

சேர்ந்திருக்கிறது

என்பதைத் தெரிந்து

கொள்வதற்காகத் தான்

நான்

புத்தகக் காட்சியில்

கடை எடுத்தேன்

 

எனக்கு எதிராக

செயல்படுத்தப்பட்ட

எதிர்ப்புகளைக்

கண்டு நான்

பயந்து இருந்தால்

வெற்றி கிடைக்குமா

அல்லது

தோல்வி கிடைக்குமா

என்று நான்

யோசித்துக் கொண்டு

இருந்திருந்தால்

பணத்தை போடுவதால்

எனக்கு நஷ்டம்

ஏற்பட்டு விடுமா

என்று நான்

தயங்கிக் கொண்டு

இருந்திருந்தால்

என்னால்

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

வெளியிட்டிருக்கவே

முடியாது

 

ஒரு துறையில்

இருந்து

மற்றொரு துறைக்குள்

நுழைவது

அவ்வளவு எளிதல்ல

அதுவும் மிகப்பெரிய

ஜாம்பவான்கள்

நிரம்பிய

எழுத்துத் துறையில்

நுழைவது என்பது

அவ்வளவு எளிதல்ல

எந்தவித

பின்புலமும் இல்லாமல்

யாருடைய

உதவியும் இல்லாமல்

தனி ஒருவனாக

என்னுடைய

முயற்சியிலேயே

என்னுடைய

பணத்தைக் கொண்டே

நான் புத்தகம்

வெளியிட்டு

எழுத்துத் துறையில்

நுழைந்து இருக்கிறேன்

எழுத்தாளர்

என்ற நிலையில்

நுழைந்து இருக்கிறேன்

எழுத்துத் துறையும்

என்னை எழுத்தாளராக

அங்கீகாரம் அளித்து

இருக்கிறது

 

எதிர்ப்புகளைப் பற்றிக்

கவலைப்படாமல்

இழப்புகளைப் பற்றி

நினைக்காமல்

நான் துணிந்து

இறங்கியதால் தான்

இந்த உலகம்

என்னை எழுத்தாளராக

அங்கீகாரம்

செய்து இருக்கிறது

என்னுடைய

எழுத்துக்கள்

மக்களை சென்று

சேர்ந்து இருக்கிறது

அரவான் களப்பலி

என்ற புத்தக்ம்

அனைவருடைய

பாராட்டையும்

பெற்று இருக்கிறது

 

வாழ்வா சாவா

என்பதைப் பற்றிக்

கவலைப்படாமல்

யார் ஒருவர்

துணிந்து களத்தில்

இறங்குகிறாரோ

அவரால் மட்டுமே

எந்த ஒரு செயலிலும்

வெற்றி பெற முடியும்

என்பதைத்  தெரிந்து

கொண்டேன்

 

என் வாழ்க்கை எனக்கு

பாடம் மட்டுமல்ல

படிப்பினையும் கூட

 

நன்றி

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்.K.பாலகங்காதரன்

 

-----18-03-2021

////////////////////////////////////

No comments:

Post a Comment