April 11, 2022

ஜபம்-பதிவு-736 (சாவேயில்லாத சிகண்டி-70)

 ஜபம்-பதிவு-736

(சாவேயில்லாத

சிகண்டி-70)

 

பரசுராமர்:

என்னை குருவாக

ஏற்றுக்

கொண்டிருப்பதாகக்

கூறும் நீ ஏன்

என்னுடைய

சொல்லை ஏற்றுக்

கொள்ள மறுக்கிறாய்

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்கிறாய்

 

அம்பை உன்னால்

பாதிக்கப் பட்டிருக்கிறாள்

அவளுடைய

வாழ்க்கை

பாதிக்கப்பட்டதற்கு

நீ தான் காரணம்

அம்பையின்

வாழ்க்கையில்

பாதிப்பை

ஏற்படுத்திய நீ தான்

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

 

வாழ்விழந்து நிற்கும்

அம்பைக்கு நீ தான்

வாழ்க்கை

கொடுக்க வேண்டும்

அம்பைக்கு நேர்ந்த

துயரத்தை நீ

தான் போக்க

வேண்டும்

 

என்னுடைய மனம்

அமைதி அடைய

வேண்டும் என்றால்

அம்பையை நீ

திருமணம் செய்தே

ஆக வேண்டும்

 

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று மறுத்தால்

என்னை உன்னுடைய

எதிரியாக பார்க்க

வேண்டி வரும்

என்னுடன் போரிட

வேண்டி வரும்

 

பீஷ்மர்:

அம்பையை

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று நான் எடுத்த

முடிவு தான்

என்னுடைய

இறுதி முடிவு

இதில்

எந்தவிதமான

மாற்றத்திற்கும்

இடமில்லை

 

என் பக்கம் உள்ள

நியாயத்தை ஏற்றுக்

கொள்வீர்கள் என்ற

காரணத்தினால்

இவ்வளவு நேரம்

பேசினேன்

ஆனால் நீங்கள்

ஏற்றுக்

கொள்வதாகத்

தெரியவில்லை

 

சரியானது எது

தவறானது எது

என்று ஆராய்ந்து

அறியும்

அறிவில்லாதவராக

இருக்கும் குருவை

எதிர்த்து

போரிடலாம் என்று

புராணங்களில்

சொல்லப்

பட்டிருப்பதால்

சரியானது எது

தவறானது எது

என்று ஆராய்ந்து

பார்க்கத் தெரியாத

உங்களை எதிர்த்துப்

போரிடுவேன்

 

யார் பக்கம்

நியாயம் இருக்கிறது

என்று ஆராய்ந்து

பார்க்காமல்

நீதியில்லாமல்

நடந்து கொள்ளும்

உங்களை எதிர்த்துப்

போரிடுவேன்

 

அம்பையின்

கண்ணில் வழியும்

கண்ணீருக்கு

தரும் மதிப்பை

என்னுடைய

சபதத்திற்கு தராத

உங்களை

எதிர்த்துப்

போரிடுவேன்

 

எனக்குக் கல்வி

கற்றுக் கொடுத்த

குருவான

உங்களை எதிர்த்துப்

போரிடுவேன்

ஆனால் போரில்

உங்களைக்

கொல்ல மாட்டேன்

 

ஓடுவதற்கு

முயலாமல்

ஷத்திரியனைப்

போல ஆயுதம்

ஏந்தி கோபத்துடன்

போரிடும் ஒரு

பிராமணனைக்

கொல்வது

குற்றமாகாது என்பது

சாத்திரங்களில்

சொல்லப்

பட்டிருந்தாலும்

உங்களுடன்

போரிட்டாலும்

பிராமணான

உங்களைக்

கொல்ல மாட்டேன்

 

தவச்சக்தி

பெற்றிருக்கும்

உங்களிடம்

போரிடுவேன்

ஆனால் உங்களைக்

கொல்ல மாட்டேன்

 

குருஷேத்திரத்தில்

என்னுடன்

தனிப்போரில்

ஒருவருக்கொருவர்

நேரடியாக

நின்று கொண்டு

போரிடுவதற்குத்

தயாராகுங்கள்

 

குருஷேத்திரத்தில்

நான் போரிடும் போது

இந்த சீடனின்

ஆற்றலைப்

பார்க்கப் போகிறீர்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------11--04-2022

-------திங்கள் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment