May 27, 2022

ஜபம்-பதிவு-767 (சாவேயில்லாத சிகண்டி-101)

 ஜபம்-பதிவு-767

(சாவேயில்லாத

சிகண்டி-101)

 

உதவி வேண்டும்

என்று யாரிடம்

சென்று நின்றாலும்

அசிங்கப்பட

வேண்டும்

என்பதைத்

தெரிந்து

கொண்டேன்

 

இனி யாரிடமும்

இந்த அம்பை

கை ஏந்தப்

போவதில்லை

உதவி கேட்டு

நிற்கப்

போவதில்லை

 

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்று யாரிடமும்

சென்று பிச்சை

எடுக்கப் போவதில்லை

 

பீஷ்மரை

நானே கொல்கிறேன்

 

என்னுடைய

கைகளாலேயே

பீஷ்மரைக்

கொல்கிறேன்

 

ஒரு பெண்ணின்

கண்ணீரை

அலட்சியமாக

நினைத்த துருபதா

 

ஒரு பெண்ணின்

கண்ணீருக்காக

படை எடுக்க

மாட்டேன் என்று

சொன்ன துருபதா

 

உன் குடும்பத்தில்

ஒரு பெண்

வடிக்கப்போகும்

கண்ணீருக்காக

நீ படை

எடுக்கும் போது

உன்

குடும்பத்திற்காகப்

படை எடுத்தாய்

என்று

இந்த உலகமே

உன்னை

கேவலமாகப்

பேசப் போகிறது

இந்த உலகம்

உன்னை

சுயநலக்காரன்

என்று எள்ளி

நகையாடப் போகிறது

 

நீ அசிங்கப்பட்டு

அவமானப்பட்டு

தலைகுனியும்

காலம்

வரப்போகிறது

துருபதா

 

நான் செல்கிறேன்

 

இனி நான்

என்ன செய்யப்

போகிறேன் என்பதை

நீ மட்டுமல்ல

இந்த உலகமும்

பார்க்கப் போகிறது

 

பார் துருபதா

பார்

 

இனி நடக்கப்

போவதைப் பார்

 

(என்று சொல்லி

விட்டு ஆவேசத்துடன்

அரண்மனை

வாசல் வந்த

அம்பை

அந்த மாலையை

அரண்மனையின்

கதவில் மாட்டி

விட்டு கோபத்துடன்

அந்த இடத்தை

விட்டு விலகி

நடந்து சென்று

கொண்டிருந்தாள்

 

அவள் பின்னால்

ஓடிவந்த துருபதன்

 

"நில் அம்பையே

 

அந்த மாலையை

எடுத்துக்

கொண்டு செல்

 

எனக்கும்

பீஷ்மருக்கும் இடையே

பிரச்சினையை

ஏற்படுத்தாதே

 

என்னுடைய

நாட்டிற்கும்

அஸ்தினாபுரத்திற்கும்

இடையே

பகையை

உண்டாக்காதே

 

மாலையை

எடுத்துக் கொண்டு

செல்

அம்பையே

 

மாலையை

எடுத்துக் கொண்டு

செல்"

 

என்று

கத்திக் கொண்டே

வந்த

துருபதனை

திரும்பி நின்று

அம்பை

கோபத்துடன்

பார்த்தாள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment