March 05, 2023

ஜபம்-பதிவு-936 மரணமற்ற அஸ்வத்தாமன்-68 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-936

மரணமற்ற

அஸ்வத்தாமன்-68

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

குருகுலக் கல்வியை

முடித்த துரோணர்

குரு தட்சிணையாக

பாஞ்சால

நாட்டு மன்னன்

துருபதனைக்

கைது செய்து

கொண்டு

வரவேண்டும்

என்று கேட்டுக்

கொண்டதற்கு

இணங்க அவரது

சீடர்களில்

சிறந்தவர்கள்

பாஞ்சால

நாட்டின் மீது

படையெடுத்து

துருபதனைத்

தோற்கடித்து

அவனைக் கைது

செய்து கொண்டு

வந்து குரு

துரோணரிடம்

ஒப்படைத்தனர்

 

துரோணர்

பாஞ்சால நாட்டில்

பாதி நாட்டை

எடுத்துக் கொண்டு

மீது பாதி நாட்டை

துருபதனிடம்

கொடுத்து விட்டான்

 

அதனால்

கோபமுற்ற துருபதன்

துரோணரைக்

கொல்வதற்காக

பிராமணர்களின்

துணையுடன்

வேள்வி செய்து

வேள்வி

நெருப்பிலிருந்து

திருஷ்டத்யும்னனை

உருவாக்கினான்

 

துரோணரிடம்

அஸ்வத்தாமன்

பேசுகிறான்

 

அஸ்வத்தாமன் :

தந்தையே தாங்கள்

செய்வது சரியா?

 

துரோணர் :

எதைச் சொல்கிறாய்

 

அஸ்வத்தாமன் :

திருஷ்டத்யும்னனுக்கு

கல்வி கற்றுக்

கொடுக்கிறீர்களே

அதைச் சொல்கிறேன்

 

துரோணர் :

அதில் தவறு

இருப்பதாகத்

தெரியவில்லையே

 

அஸ்வத்தாமன் :

தவறில்லையா

 

துரோணர் :

இந்த உலகத்தில்

செய்யப்படும்

எந்த ஒரு செயலும்

எண்ணத்தைப் பொறுத்து

சரியானதா

தவறானதா என்று

தீர்மானிக்கப்படுவதில்லை

 

இடம் நேரம்

காலம் சூழ்நிலை

ஆகியவற்றைப்

பொறுத்துத் தான்

எந்த ஒரு செயலும்

சரியானதா

தவறானதா என்று

தீர்மானிக்கப்படுகிறது

 

எனக்கு

சரியாகத் தெரிவது

உனக்கு

தவறாகத் தெரியலாம்

 

எனக்கு

தவறாகத் தெரிவது

உனக்கு

சரியாகத் தெரியலாம்

 

ஒரு மனிதன்

எதிரியின்

தலையை வெட்டி

எதிரியின்

உயிரைப் பறிக்கிறான்

அதற்குப்

பெயர் கொலை

 

அதே மனிதன்

எதிரியின் தலையை

போர்க்களத்தில்

வெட்டி எதிரியின்

உயிரைப் பறித்தால்

அதற்குப்

பெயர் வீரம்

 

ஒரே செயல் தான்

இடம் நேரம் காலம்

சூழ்நிலையைப்

பொறுத்து பெயர்

மாறுபடுகிறது

 

ஒரு இடத்தில்

தவறாக இருப்பது

மற்றொரு இடத்தில்

சரியாக இருக்கிறது

 

ஒரு செயல்

சரியானதா

தவறானதா என்பது

எண்ணத்தைப்

பொறுத்தது அல்ல

 

காலம் நேரம்

இடம் சூழ்நிலை

ஆகியவற்றைப்

பொறுத்துத் தான்

எந்த ஒருசெயலும்

சரியானது

தவறானது என்று

தீர்மானிக்கப்படுகிறது

 

அஸ்வத்தாமன் :

அவன் யார்

என்று தெரியுமா

 

துரோணர் :

நான் ஆசிரமத்தில்

அக்னிவேசரிடம்

கல்வி பயின்ற போது

என்னுடன் ஒன்றாகக்

கல்வி பயின்ற

என்னுடைய

நண்பன்

துருபதனின்

மகன் தான்

இந்தத் திருஷ்டத்யும்னன்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment